Loading...

Loading...
நூல்கள்
௧௫௮ ஹதீஸ்கள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் சிறுவனாகவும், என் தாயார் பெண்ணாகவும் இருந்ததால் நானும் என் தாயாரும் (சமுதாயத்தின்) பலவீனமான பிரிவைச் சேர்ந்தவர்களாக (மக்காவில்) இருந்தோம். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، قال قال عبيد الله سمعت ابن عباس رضى الله عنهما يقول كنت انا وامي، من المستضعفين انا من الولدان، وامي، من النساء
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இறந்துவிட்ட எல்லாக் குழந்தை களுக்கும் இறுதித் தொழுகை நடத்தப் படும். அது விபசாரிக்குப் பிறந்ததாக இருந்தாலும் சரியே! ஏனெனில், அது இயற்கையாகவே இஸ்லாத்தில்தான் பிறக்கிறது. குழந்தையின் பெற்றோர் முஸ்லிம் களாக இருந்து, அல்லது குறிப்பாகத் தந்தை மட்டும் முஸ்லிமாகவும் தாய் வேற்று மதத்தவளாகவும் இருந்து, அவர்களின் குழந்தை பிறந்தபோது சப்தமிட்டு, பிறகு இறந்தால் அதற்கு இறுதித் தொழுகை நடத்தப்படும்; சப்தமிடவில்லையாயின் அதற்குத் தொழுகையில்லை; ஏனெனில், அது குறைபேறு (கருச்சிதைவு) ஆகும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், “ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப் போன்றே, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதைப் போன்று) பெற்றோர்கள்தான் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர் களாகவோ அக்னி ஆராதனையாளர்களாகவோ மாற்றிவிடுகின்றனர்” என்று கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனது (நிலையான) இயற்கை மார்க்க மாகும்; அல்லாஹ்வின் படைப்புக்கு மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால், மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்” (30:30) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، قال ابن شهاب يصلى على كل مولود متوفى وان كان لغية، من اجل انه ولد على فطرة الاسلام، يدعي ابواه الاسلام او ابوه خاصة، وان كانت امه على غير الاسلام، اذا استهل صارخا صلي عليه، ولا يصلى على من لا يستهل من اجل انه سقط، فان ابا هريرة رضى الله عنه كان يحدث قال النبي صلى الله عليه وسلم " ما من مولود الا يولد على الفطرة، فابواه يهودانه او ينصرانه او يمجسانه، كما تنتج البهيمة بهيمة جمعاء هل تحسون فيها من جدعاء ". ثم يقول ابو هريرة رضى الله عنه – {فطرة الله التي فطر الناس عليها} الاية
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அவ்வாறே, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக் கின்றன. விலங்குகள் அங்கக் குறைவு டன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர் களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதைப் போன்று) பெற்றோர் கள்தான் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களா கவோ கிறித்தவர்களாகவோ அக்னி ஆராதனையாளர்களாகவோ மாற்றிவிடு கின்றனர்.” இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனது (நிலையான) இயற்கை மார்க்க மாகும்; அல்லாஹ்வின் படைப்புக்கு மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும்” (30:30) என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அத்தியாயம் :
حدثنا عبدان، اخبرنا عبد الله، اخبرنا يونس، عن الزهري، اخبرني ابو سلمة بن عبد الرحمن، ان ابا هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " ما من مولود الا يولد على الفطرة، فابواه يهودانه او ينصرانه او يمجسانه، كما تنتج البهيمة بهيمة جمعاء، هل تحسون فيها من جدعاء ". ثم يقول ابو هريرة رضى الله عنه {فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم}
முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்கு மரணம் நெருங்கியபோது, நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூஜஹ்ல் பின் ஹிஷாம், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், “என் தந்தையின் சகோதரரே! லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை) என்று ஒரு வார்த்தை சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சி யம் கூறுவேன்” எனக் கூறினார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல் லாஹ் பின் அபீஉமய்யாவும், “அபூ தாலிபே! (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக் கப்போகின்றீரா?” எனக் கேட்டனர். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூதாலிப் கடைசிப் பேச்சாக, “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே (மரணிக் கின்றேன்)” என்று கூறியதோடு, ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ எனக் கூறவும் மறுத்துவிட்டார். அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் வின் மீதாணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்” என்று கூறினார்கள். அப்போது “இணைவைப்பாளர்கள் நரகவாசிகள் என்பது தெளிவான பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும்கூட அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் இறைநம்பிக்கை கொண்டோருக்கும் தகாது” (9:113) எனும் வசனத்தை உயர்ந்தோன் அல்லாஹ் அருளினான். அத்தியாயம் :
حدثنا اسحاق، اخبرنا يعقوب بن ابراهيم، قال حدثني ابي، عن صالح، عن ابن شهاب، قال اخبرني سعيد بن المسيب، عن ابيه، انه اخبره انه، لما حضرت ابا طالب الوفاة جاءه رسول الله صلى الله عليه وسلم فوجد عنده ابا جهل بن هشام، وعبد الله بن ابي امية بن المغيرة، قال رسول الله صلى الله عليه وسلم لابي طالب " يا عم، قل لا اله الا الله، كلمة اشهد لك بها عند الله ". فقال ابو جهل وعبد الله بن ابي امية يا ابا طالب، اترغب عن ملة عبد المطلب فلم يزل رسول الله صلى الله عليه وسلم يعرضها عليه، ويعودان بتلك المقالة، حتى قال ابو طالب اخر ما كلمهم هو على ملة عبد المطلب، وابى ان يقول لا اله الا الله. فقال رسول الله صلى الله عليه وسلم " اما والله لاستغفرن لك، ما لم انه عنك ". فانزل الله تعالى فيه {ما كان للنبي} الاية
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: வேதனை செய்யப்பட்டுக்கொண்டிருந்த இருவரின் அடக்கத் தலங்களைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். அப்போது, “இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால், ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. இவர் களில் ஒருவரோ, சிறுநீர் கழிக்கும்போது (உடலை) மறைக்காதவர்; இன்னொரு வரோ கோள்சொல்லித் திரிந்தவர்” என்று கூறினார்கள். பின்னர் ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரு கப்றுகளிலும் ஒவ்வொன்றை நட்டார் கள். தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?” என்று கேட்டதும், “இவ்விரண்டின் ஈரம் காயாத வரை இவர்களின் வேதனை குறைக்கப்படக்கூடும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى، حدثنا ابو معاوية، عن الاعمش، عن مجاهد، عن طاوس، عن ابن عباس رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم انه مر بقبرين يعذبان فقال " انهما ليعذبان وما يعذبان في كبير اما احدهما فكان لا يستتر من البول، واما الاخر فكان يمشي بالنميمة ". ثم اخذ جريدة رطبة فشقها بنصفين، ثم غرز في كل قبر واحدة. فقالوا يا رسول الله، لم صنعت هذا فقال " لعله ان يخفف عنهما ما لم ييبسا
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ‘பகீஉல் ஃகர்கத்’ எனும் பொது மையவாடியில் ஒரு பிரேத நல்லடக்கத்தில் கலந்துகொண்டோம் அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து உட்கார்ந்ததும், நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்து கொண்டோம். அவர்களிடம் ஒரு சிறிய கைத்தடி இருந்தது. நபி (ஸல்) அவர்கள் தலை குனிந்தவர்களாகத் தமது கைத்தடியால் தரையைக் கீறியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருந்தார்கள். “உங்களில் ‘யாரும்’ அல்லது ‘பிறந்து விட்ட எந்த உயிரும்’ தமது இருப்பிடம் சொர்க்கமா, அல்லது நரகமா என்று எழுதப்படாமலிருப்பதில்லை; அவ்வாறே, அது நற்பேறற்றதா, நற்பேறு பெற்றதா என்றும் எழுதப்படாமல் இருப்பதில்லை” எனக் கூறினார்கள். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! அப்படியாயின், ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்டதன்மீது பாரத்தைப் போட்டுவிட்டு, நற்செயல்கள் புரியாமல் நாங்கள் இருந்துவிடமாட்டோமா? ஏனெனில், நம்மில் யார் நற்பேறு பெற்றவராக இருப்பாரோ அவர் அந்த நல்லவர்களின் செயலின் பக்கம் செல்லப்போகிறார்; யார் நற்பேறற்றவராக இருப்பாரோ அவர் அந்தக் கெட்டவர்களின் செயலின் பக்கம் செல்லப்போகிறார்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “யார் நற்பேறு பெற்றவர்களோ அவர்களுக்கு நற்செயல் எளிதாக்கப்படும்; யார் நற்பேறற் றவர்களோ அவர்களுக்குக் கெட்ட செயல் எளிதாக்கப்படும்” என்று கூறினார்கள். பிறகு “எவர் தானதர்மம் கொடுத்து, இறையச்சத்துடன் நடந்து, நல்லவற்றை உண்மையாக்குகின்றாரோ...” என்று தொடங்கும் (92:5-10) வசனங்களை ஓதிக் காட்டினார்கள். அத்தியாயம் :
حدثنا عثمان، قال حدثني جرير، عن منصور، عن سعد بن عبيدة، عن ابي عبد الرحمن، عن علي رضى الله عنه قال كنا في جنازة في بقيع الغرقد، فاتانا النبي صلى الله عليه وسلم فقعد وقعدنا حوله، ومعه مخصرة فنكس، فجعل ينكت بمخصرته ثم قال " ما منكم من احد، ما من نفس منفوسة الا كتب مكانها من الجنة والنار، والا قد كتب شقية او سعيدة ". فقال رجل يا رسول الله، افلا نتكل على كتابنا وندع العمل، فمن كان منا من اهل السعادة فسيصير الى عمل اهل السعادة، واما من كان منا من اهل الشقاوة فسيصير الى عمل اهل الشقاوة قال " اما اهل السعادة فييسرون لعمل السعادة، واما اهل الشقاوة فييسرون لعمل الشقاوة "، ثم قرا {فاما من اعطى واتقى} الاية
حدثنا مسدد، حدثنا يزيد بن زريع، حدثنا خالد، عن ابي قلابة، عن ثابت بن الضحاك رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " من حلف بملة غير الاسلام كاذبا متعمدا فهو كما قال، ومن قتل نفسه بحديدة عذب به في نار جهنم ". وقال حجاج بن منهال حدثنا جرير بن حازم، عن الحسن، حدثنا جندب رضى الله عنه في هذا المسجد فما نسينا، وما نخاف ان يكذب جندب عن النبي صلى الله عليه وسلم قال " كان برجل جراح فقتل نفسه فقال الله بدرني عبدي بنفسه حرمت عليه الجنة
حدثنا مسدد، حدثنا يزيد بن زريع، حدثنا خالد، عن ابي قلابة، عن ثابت بن الضحاك رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " من حلف بملة غير الاسلام كاذبا متعمدا فهو كما قال، ومن قتل نفسه بحديدة عذب به في نار جهنم ". وقال حجاج بن منهال حدثنا جرير بن حازم، عن الحسن، حدثنا جندب رضى الله عنه في هذا المسجد فما نسينا، وما نخاف ان يكذب جندب عن النبي صلى الله عليه وسلم قال " كان برجل جراح فقتل نفسه فقال الله بدرني عبدي بنفسه حرمت عليه الجنة
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: “யார் தமது கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத் தாமே (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரகத்தி லும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، حدثنا ابو الزناد، عن الاعرج، عن ابي هريرة رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " الذي يخنق نفسه يخنقها في النار، والذي يطعنها يطعنها في النار
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் மரணித்ததும் அவருக்கு (இறுதி)த் தொழுகை நடத்துவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவிக்கத் தயாரானபோது நான் குதித்தெழுந்து அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! அப்துல்லாஹ் பின் உபைக்கு (இறுதித்) தொழுகை நடத்தப்போகிறீர்களா? அவர் இன் னின்ன நாட்களில் இன்னின்னவாறெல் லாம் பேசியுள்ளார்” என, அவர் பேசிய வற்றை நபியவர்களிடம் எடுத்துக் கூறி னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். பிறகு, “உமரே! என்னைவிட்டு விலகி நிற்பீராக!” எனக் கூறினார்கள். நான் மேலும் அதிகமாக வலியுறுத்திய தும் அவர்கள், “(பாவமன்னிப்புக் கோரல், கோராமல் இருத்தல் ஆகிய இரண்டில் ஒன்றைச் செய்ய) எனக்கு விருப்ப உரிமை அளிக்கப்பட்டுள்ளது. எழுபது தடவை களுக்கும் அதிகமாக நான் பாவமன்னிப் புக் கோரினால் அவருக்கு மன்னிப்பு கிடைக்கும் என நான் அறிந்தால், அவ்வாறே நான் அதிகமாகப் பாவ மன்னிப்புக் கோருவேன்” என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அவருக்கு (இறுதித் தொழுகை) தொழுவித்துவிட்டுத் திரும்பிச் சென்று சற்று நேரமாவதற்குள், ‘பராஅத்’ (9ஆவது) அத்தியாத்தில், “(நபியே!) அவர்களில் இறந்துவிட்ட யாருக்காகவும் நீர் ஒருபோதும் (இறுதித்) தொழுகை நடத்த வேண்டாம்” (9:84) என்று தொடங்கி இறுதிவரையிலான வசனம், அதற்கு முன்னுள்ள (9:80ஆவது) வசனம் ஆகிய இரு வசனங்கள் அருளப்பெற்றன. பிறகுதான் அன்றைய தினம் நபி (ஸல்) அவர்களிடம் நான் காட்டிய துணிச்சலை எண்ணி வியந்துபோனேன். அல்லாஹ்வும் அவன் தூதரும் நன்கு அறிந்தவர்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثني الليث، عن عقيل، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله، عن ابن عباس، عن عمر بن الخطاب رضى الله عنهم انه قال لما مات عبد الله بن ابى ابن سلول دعي له رسول الله صلى الله عليه وسلم ليصلي عليه، فلما قام رسول الله صلى الله عليه وسلم وثبت اليه فقلت يا رسول الله، اتصلي على ابن ابى وقد قال يوم كذا وكذا كذا وكذا اعدد عليه قوله فتبسم رسول الله صلى الله عليه وسلم وقال " اخر عني يا عمر ". فلما اكثرت عليه قال " اني خيرت فاخترت، لو اعلم اني ان زدت على السبعين فغفر له لزدت عليها ". قال فصلى عليه رسول الله صلى الله عليه وسلم ثم انصرف، فلم يمكث الا يسيرا حتى نزلت الايتان من {براءة} {ولا تصل على احد منهم مات ابدا} الى {وهم فاسقون} قال فعجبت بعد من جراتي على رسول الله صلى الله عليه وسلم يوميذ، والله ورسوله اعلم
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا عبد العزيز بن صهيب، قال سمعت انس بن مالك رضى الله عنه يقول مروا بجنازة فاثنوا عليها خيرا، فقال النبي صلى الله عليه وسلم " وجبت ". ثم مروا باخرى فاثنوا عليها شرا فقال " وجبت ". فقال عمر بن الخطاب رضى الله عنه ما وجبت قال " هذا اثنيتم عليه خيرا فوجبت له الجنة، وهذا اثنيتم عليه شرا فوجبت له النار، انتم شهداء الله في الارض
அபுல்அஸ்வத் அத்துஅலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது நான் மதீனாவில் (கொள்ளை) நோய் பரவியிருந்தபோது மதீனாவுக்கு வந்து உமர் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந் தேன். அப்போது ஒரு பிரேதம் (ஜனாஸா) மக்களைக் கடந்து சென்றது. அவருடைய நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்துரைக்கப்பட்டது. அப்போது உமர் (ரலி) அவர்கள், “உறுதியாகிவிட்டது” என்றார்கள். பிறகு இன்னொரு பிரேதம் கடந்து சென்றது. அப்போது அவருடைய நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்து பேசப்பட்டது. உடனே உமர் (ரலி) அவர்கள், “உறுதியாகிவிட்டது” என்றார்கள். பிறகு மூன்றாவது பிரேதம் கடந்து சென்றது. அவருடைய தீய பண்புகளைக் கூறி இகழ்ந்து பேசப்பட்டது. அப்போதும் உமர் (ரலி) அவர்கள், “உறுதியாகி விட்டது” எனக் கூறினார்கள். நான் “இûறைநம்பிக்கையாளர் களின் தலைவரே! எது உறுதியாகி விட்டது?” எனக் கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: “எந்த முஸ்லிமுக்காவது அவர் நல்லவர் என நான்கு பேர் சாட்சியம் கூறினால், அவரை அல்லாஹ் சொர்க் கத்தில் அனுமதிப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், லி“மூவர் சாட்சியாயிருந் தால்...?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள் “மூன்று பேர் சாட்சியம் கூறினாலும்தான்” என்றார்கள். மீண்டும் “இருவர் சாட்சியாக இருந்தால்...?” என நாங்கள் கேட்டதற்கு, “இரண்டு பேர் சாட்சியம் கூறினாலும்தான்” என்றார்கள். பிறகு நாங்கள் ஒரு நபர் பற்றிக் கேட்கவில்லை. எனவே, நபி (ஸல்) அவர்கள் கூறியதன் அடிப்படையிலேயே நான் இவ்வாறு கூறினேன். அத்தியாயம் :
حدثنا عفان بن مسلم، حدثنا داود بن ابي الفرات، عن عبد الله بن بريدة، عن ابي الاسود، قال قدمت المدينة وقد وقع بها مرض، فجلست الى عمر بن الخطاب رضى الله عنه فمرت بهم جنازة فاثني على صاحبها خيرا فقال عمر رضى الله عنه وجبت. ثم مر باخرى فاثني على صاحبها خيرا، فقال عمر رضى الله عنه وجبت. ثم مر بالثالثة، فاثني على صاحبها شرا فقال وجبت. فقال ابو الاسود فقلت وما وجبت يا امير المومنين قال قلت كما قال النبي صلى الله عليه وسلم " ايما مسلم شهد له اربعة بخير ادخله الله الجنة ". فقلنا وثلاثة قال " وثلاثة ". فقلنا واثنان قال " واثنان ". ثم لم نساله عن الواحد
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: அடக்கத் தலத்தில் ஓர் இறைநம்பிக்கை யாளர் (அடக்கம் செய்யப்பட்டபின்) எழுப்பி அமரவைக்கப்படுவார்; (அவரிடம் இரு வானவர்கள்) கொண்டுவரப்(படுவர். கேள்வி கேட்கப்)படும். பிறகு (அவர்களிடத்தில்) அந்த இறைநம்பிக்கையாளர், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் ஆவார்கள்” என உறுதி கூறுவார். இதையே அல்லாஹ், “இறைநம்பிக்கை கொண்டோரை உறுதியான சொல்மூலம் இம்மை வாழ்க்கையிலும் மறுமை (வாழ்க்கை)யிலும் அல்லாஹ் நிலை கொள்ளச்செய்வான்” (14:27) எனக் குறிப்பிடுகின்றான். இதை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “இந்த வசனம் சவக்குழி (கப்று) வேதனை தொடர்பாகவே அருளப்பட்டது” என ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூடுதலாக அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
حدثنا حفص بن عمر، حدثنا شعبة، عن علقمة بن مرثد، عن سعد بن عبيدة، عن البراء بن عازب رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " اذا اقعد المومن في قبره اتي، ثم شهد ان لا اله الا الله، وان محمدا رسول الله، فذلك قوله {يثبت الله الذين امنوا بالقول الثابت} ". حدثنا محمد بن بشار حدثنا غندر حدثنا شعبة بهذا وزاد {يثبت الله الذين امنوا} نزلت في عذاب القبر
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பத்ர் போரில் கொல்லப்பட்ட எதிரி களின் உடல்கள் ஒரு பாழுங்கிணற்றில் போடப்பட்டிருந்தன. அந்தக்) கிணற்றில் கிடந்தவர்களைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், “உங்கள் இறைவன் உண்மை யாகவே வாக்களித்தவற்றை நீங்கள் அடைந்துகொண்டீர்களா?” எனக் கேட்டார்கள். “இறந்துவிட்டவர்களை அழைக்கின் றீர்களே?” என அவர்களிடம் கேட்கப் பட்டது. அதற்கு “அவர்களைவிட நீங்கள் அதிகம் செவியுறுபவர்களல்லர்; ஆயினும், அவர்கள் பதிலளிக்கமாட் டார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا يعقوب بن ابراهيم، حدثني ابي، عن صالح، حدثني نافع، ان ابن عمر رضى الله عنهما اخبره قال اطلع النبي صلى الله عليه وسلم على اهل القليب فقال " وجدتم ما وعد ربكم حقا ". فقيل له تدعو امواتا فقال " ما انتم باسمع منهم ولكن لا يجيبون
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (இறந்தவர் களின் விஷயத்தில்), “நான் சொல்லிக் கொண்டிருந்தது உண்மைதான் என் பதை இப்போது அவர்கள் அறிகிறார் கள்” என்றுதான் கூறினார்கள். (செவி யுறுகிறார்கள் என்று கூறவில்லை; ஏனெனில்) “நிச்சயமாக நீர் மரித் தோரைக் கேட்கச்செய்ய முடியாது” (27:80) என அல்லாஹ் கூறுகின்றான். அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا سفيان، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة رضى الله عنها قالت انما قال النبي صلى الله عليه وسلم " انهم ليعلمون الان ان ما كنت اقول حق وقد قال الله تعالى {انك لا تسمع الموتى}
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு யூதப் பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து அடக்கத் தலத்தின் (கப்று) வேதனை பற்றிக் கூறிவிட்டு, “அல்லாஹ் உங்களை மண்ணறை வேதனையை விட்டுப் பாதுகாப்பானாக” என்றும் கூறினாள். பிறகு அடக்கத் தலத்தின் (கப்று) வேதனை குறித்து ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஆம். அடக்கத் தலத்தின் (கப்று) வேதனை உண்டு” எனக் கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்: அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் தாம் தொழுகின்ற எந்தத் தொழுகையிலும் அடக்கத் தலத்தின் (கப்று) வேதனையிலிருந்து (அல்லாஹ் விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததேயில்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “மண்ணறை வேதனை உண்மை தான்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا عبدان، اخبرني ابي، عن شعبة، سمعت الاشعث، عن ابيه، عن مسروق، عن عايشة رضى الله عنها ان يهودية، دخلت عليها، فذكرت عذاب القبر، فقالت لها اعاذك الله من عذاب القبر. فسالت عايشة رسول الله صلى الله عليه وسلم عن عذاب القبر فقال " نعم عذاب القبر ". قالت عايشة رضى الله عنها فما رايت رسول الله صلى الله عليه وسلم بعد صلى صلاة الا تعوذ من عذاب القبر. زاد غندر " عذاب القبر حق
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு தடவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று உரையாற்றி னார்கள். அப்போது அடக்கத் தலத்தில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவர்கள் அதைச் சொல்லிக்கொண்டிருந்தபோது, (அங்கிருந்த) முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن سليمان، حدثنا ابن وهب، قال اخبرني يونس، عن ابن شهاب، اخبرني عروة بن الزبير، انه سمع اسماء بنت ابي بكر رضى الله عنهما تقول قام رسول الله صلى الله عليه وسلم خطيبا فذكر فتنة القبر التي يفتتن فيها المرء، فلما ذكر ذلك ضج المسلمون ضجة
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் மண்ணறையில் அடக் கம் செய்யப்பட்டு அவருடைய தோழர் கள் திரும்பிச் செல்லும்போது, அந்த அடியார் அவர்களின் காலணிகள் எழுப்பும் ஓசையைச் செவியுறுவார். அப்போது அவரிடம் இரு வானவர்கள் வந்து அவரை எழுப்பி உட்காரவைத்து, “இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?” என்று முஹம்மத் (ஸல்) குறித்துக் கேட்பர். இறைநம்பிக்கையாளர், “இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார் என நான் உறுதிகூறுகிறேன்” என்பார். அவரிடம் “(நீர் கெட்டவராய் இருந்திருந் தால் உமக்குக் கிடைக்கவிருந்த) நரகத்தில் உள்ள உமது இருப்பிடத்தைப் பார்ப்பீராக! (நீர் நல்லவராக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உமக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தி யுள்ளான்” எனக் கூறப்படும். இரண்டை யும் அவர் ஒரே நேரத்தில் பார்ப்பார். அவருக்கு அடக்கத் தலம் (கப்று) விசாலமாக்கப்படும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இதன் அறிவிப் பாளர்களில் ஒருவரான கத்தாதா (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். தொடர்ந்து இந்த ஹதீஸின் அறிவிப் பாளரான அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) நயவஞ்சகர் மற்றும் இறைமறுப்பாளரி டம், “இந்த மனிதர் விஷயத்தில் நீர் என்ன கருதிக்கொண்டிருந்தீர்?” என்று கேட்கப்படும். அதற்கு “எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக்கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்” என அவர் விடையளிப்பார். உடனே “நீர் அறிந்திருக்கவு மில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை” என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவர் கடுமையாக அடிக்கப்படுவார். அப்போது அவரை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவர் அலறுவார். அத்தியாயம் :
حدثنا عياش بن الوليد، حدثنا عبد الاعلى، حدثنا سعيد، عن قتادة، عن انس بن مالك رضى الله عنه انه حدثهم ان رسول الله صلى الله عليه وسلم قال " ان العبد اذا وضع في قبره، وتولى عنه اصحابه، وانه ليسمع قرع نعالهم، اتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في الرجل لمحمد صلى الله عليه وسلم. فاما المومن فيقول اشهد انه عبد الله ورسوله. فيقال له انظر الى مقعدك من النار، قد ابدلك الله به مقعدا من الجنة، فيراهما جميعا ". قال قتادة وذكر لنا انه يفسح في قبره. ثم رجع الى حديث انس قال " واما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل فيقول لا ادري، كنت اقول ما يقول الناس. فيقال لا دريت ولا تليت. ويضرب بمطارق من حديد ضربة، فيصيح صيحة يسمعها من يليه، غير الثقلين
அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்துவிட்டிருந்தபோது வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு, “யூதர் கள் அவர்களின் கப்றுகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்” எனக் கூறி னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، حدثنا يحيى، حدثنا شعبة، قال حدثني عون بن ابي جحيفة، عن ابيه، عن البراء بن عازب، عن ابي ايوب رضى الله عنهم قال خرج النبي صلى الله عليه وسلم وقد وجبت الشمس، فسمع صوتا فقال " يهود تعذب في قبورها ". وقال النضر اخبرنا شعبة، حدثنا عون، سمعت ابي، سمعت البراء، عن ابي ايوب رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم
மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அடக்கத் தலத்தின் (கப்று) வேதனையைவிட்டுப் பாதுகாப்புக் கோரியதைத் தாம் செவியுற்றதாக காலித் பின் சயீத் (ரலி) அவர்களுடைய புதல்வியார் (உம்மு காலித்) கூறுகிறார். அத்தியாயம் :
حدثنا معلى، حدثنا وهيب، عن موسى بن عقبة، قال حدثتني ابنة خالد بن سعيد بن العاص، انها سمعت النبي صلى الله عليه وسلم وهو يتعوذ من عذاب القبر