ஹதீஸ்கள்
#1369
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: அடக்கத் தலத்தில் ஓர் இறைநம்பிக்கை யாளர் (அடக்கம் செய்யப்பட்டபின்) எழுப்பி அமரவைக்கப்படுவார்; (அவரிடம் இரு வானவர்கள்) கொண்டுவரப்(படுவர். கேள்வி கேட்கப்)படும். பிறகு (அவர்களிடத்தில்) அந்த இறைநம்பிக்கையாளர், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் ஆவார்கள்” என உறுதி கூறுவார். இதையே அல்லாஹ், “இறைநம்பிக்கை கொண்டோரை உறுதியான சொல்மூலம் இம்மை வாழ்க்கையிலும் மறுமை (வாழ்க்கை)யிலும் அல்லாஹ் நிலை கொள்ளச்செய்வான்” (14:27) எனக் குறிப்பிடுகின்றான். இதை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “இந்த வசனம் சவக்குழி (கப்று) வேதனை தொடர்பாகவே அருளப்பட்டது” என ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூடுதலாக அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1369
- Book Index
- 121
Grades
- -