ஹதீஸ்கள்
#1360
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்கு மரணம் நெருங்கியபோது, நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூஜஹ்ல் பின் ஹிஷாம், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், “என் தந்தையின் சகோதரரே! லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை) என்று ஒரு வார்த்தை சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சி யம் கூறுவேன்” எனக் கூறினார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல் லாஹ் பின் அபீஉமய்யாவும், “அபூ தாலிபே! (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக் கப்போகின்றீரா?” எனக் கேட்டனர். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூதாலிப் கடைசிப் பேச்சாக, “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே (மரணிக் கின்றேன்)” என்று கூறியதோடு, ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ எனக் கூறவும் மறுத்துவிட்டார். அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் வின் மீதாணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்” என்று கூறினார்கள். அப்போது “இணைவைப்பாளர்கள் நரகவாசிகள் என்பது தெளிவான பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும்கூட அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் இறைநம்பிக்கை கொண்டோருக்கும் தகாது” (9:113) எனும் வசனத்தை உயர்ந்தோன் அல்லாஹ் அருளினான். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1360
- Book Index
- 113
Grades
- -