Loading...

Loading...
நூல்கள்
௧௩௬ ஹதீஸ்கள்
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் காலை விடியும்வரை (தொழுகைக்கு எழுந்திருக் காமல்) இரவில் தூங்கிய ஒரு மனிதரைப் பற்றிக் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அந்த மனிதரின் இரு காதுகளிலும் லிஅல்லது அவரது காதில்லி ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று பதிலளித் தார்கள்.74 அத்தியாயம் :
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا جرير، عن منصور، عن ابي وايل، عن عبد الله رضى الله عنه قال ذكر عند النبي صلى الله عليه وسلم رجل نام ليله حتى اصبح، قال " ذاك رجل بال الشيطان في اذنيه او قال في اذنه
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் வீட்டாரிடம் (உடலுறவு கொள்ள) வந்து, ‘‘பிஸ்மில்லாஹ்; அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான; வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸ்க்த்தனா” (அல்லாஹ்வின் திருப்பெயரால்; இறைவா! ஷைத்தானை எங்களிடமிருந்து விலகி யிருக்கச்செய். எங்களுக்கு நீ அளிக்கும் சந்ததிகளிடமிருந்தும் ஷைத்தானை விலகி யிருக்கச்செய்) என்று பிரார்த்தனை புரிந்து, பிறகு அவர்களுக்குச் சந்ததி அளிக்கப் பட்டால் அந்தச் சந்ததிக்கு ஷைத்தான் தீங்கு செய்யமாட்டான். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.75 அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا همام، عن منصور، عن سالم بن ابي الجعد، عن كريب، عن ابن عباس رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " اما ان احدكم اذا اتى اهله وقال بسم الله اللهم جنبنا الشيطان، وجنب الشيطان ما رزقتنا. فرزقا ولدا، لم يضره الشيطان
حدثنا محمد، اخبرنا عبدة، عن هشام بن عروة، عن ابيه، عن ابن عمر رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا طلع حاجب الشمس فدعوا الصلاة حتى تبرز، واذا غاب حاجب الشمس فدعوا الصلاة حتى تغيب ". " ولا تحينوا بصلاتكم طلوع الشمس ولا غروبها، فانها تطلع بين قرنى شيطان ". او الشيطان. لا ادري اى ذلك قال هشام
حدثنا محمد، اخبرنا عبدة، عن هشام بن عروة، عن ابيه، عن ابن عمر رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا طلع حاجب الشمس فدعوا الصلاة حتى تبرز، واذا غاب حاجب الشمس فدعوا الصلاة حتى تغيب ". " ولا تحينوا بصلاتكم طلوع الشمس ولا غروبها، فانها تطلع بين قرنى شيطان ". او الشيطان. لا ادري اى ذلك قال هشام
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: நீங்கள் தொழுதுகொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக்கொள்ள) மறுத் தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன்தான் ஷைத்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.77 அத்தியாயம் :
حدثنا ابو معمر، حدثنا عبد الوارث، حدثنا يونس، عن حميد بن هلال، عن ابي صالح، عن ابي سعيد، قال قال النبي صلى الله عليه وسلم " اذا مر بين يدى احدكم شىء وهو يصلي فليمنعه، فان ابى فليمنعه، فان ابى فليقاتله، فانما هو شيطان
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ரமளானின் ஸகாத் பொருளைப் பாதுகாத்தி டும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே நான் அவனைப் பிடித்துக்கொண்டேன்; ‘‘உன்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்” என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்...) இறுதியில் அவன், ‘‘நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது யிஆயத்துல் குர்ஸீ’யை (2:255) ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்துகொண்டே இருப்பார். காலை நேரம் வரும்வரை ஷைத்தான் உங்களை நெருங்கமாட்டான்” என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது,) ‘‘அவன் பொய்யனாயிருந்தும், உம்மிடம் உண்மையே பேசியுள்ளான். அவன் ஷைத்தான்தான்” என்று கூறினார்கள்.78 அத்தியாயம் :
وقال عثمان بن الهيثم حدثنا عوف، عن محمد بن سيرين، عن ابي هريرة رضى الله عنه قال وكلني رسول الله صلى الله عليه وسلم بحفظ زكاة رمضان، فاتاني ات، فجعل يحثو من الطعام، فاخذته فقلت لارفعنك الى رسول الله صلى الله عليه وسلم. فذكر الحديث فقال اذا اويت الى فراشك فاقرا اية الكرسي لن يزال عليك من الله حافظ، ولا يقربك شيطان حتى تصبح. فقال النبي صلى الله عليه وسلم " صدقك وهو كذوب، ذاك شيطان
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, ‘‘இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?” என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், ‘‘உன் இறை வனைப் படைத்தவர் யார்?” என்று கேட் பான். இந்தக் கட்டத்தை அவன் அடையும் போது, அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும்! (இத்தகைய சிந்தனை’லிருந்து) விலகிக்கொள்ளட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، قال اخبرني عروة، قال ابو هريرة رضى الله عنه قال رسول الله صلى الله عليه وسلم " ياتي الشيطان احدكم فيقول من خلق كذا من خلق كذا حتى يقول من خلق ربك فاذا بلغه فليستعذ بالله، ولينته
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் கதவுகள் மூடப்படுகின்றன; ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.79 அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، قال حدثني عقيل، عن ابن شهاب، قال حدثني ابن ابي انس، مولى التيميين ان اباه، حدثه انه، سمع ابا هريرة رضى الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم " اذا دخل رمضان فتحت ابواب الجنة، وغلقت ابواب جهنم، وسلسلت الشياطين
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூசா (அலை) அவர்கள் தம் பணியாள ரிடம் ‘‘நமது சிற்றுண்டியைக் கொண்டுவா” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘‘பார்த்தீர்களா? நாம் அந்தப் பாறையின் அருகில் தங்கியிருந்தபோது நான் மீனை மறந்தே போய்விட்டேன். அதை ஷைத்தான்தான் எனக்கு மறக்கச் செய்து விட்டான்” (18:62,63) என்று கூறினார். அல்லாஹ் கட்டளையிட்ட (இரு நதிகள் சங்கமிக்கும்) இடத்தைக் கடக்கின்ற வரை மூசா (அலை) அவர்கள் களைப்பை உணரவில்லை.80 இதை உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا سفيان، حدثنا عمرو، قال اخبرني سعيد بن جبير، قال قلت لابن عباس فقال حدثنا ابى بن كعب، انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول " ان موسى قال لفتاه اتنا غداءنا، قال ارايت اذ اوينا الى الصخرة، فاني نسيت الحوت، وما انسانيه الا الشيطان ان اذكره، ولم يجد موسى النصب حتى جاوز المكان الذي امر الله به
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிழக்குத் திசையை நோக்கி சைகை காட்டியபடி, ‘‘குழப்பம் இங்குதான். குழப்பம் இங்குதான். ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து... (அது தோன்றும்)” என்று கூறினார்கள்.81 அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن عبد الله بن دينار، عن عبد الله بن عمر رضى الله عنهما قال رايت رسول الله صلى الله عليه وسلم يشير الى المشرق فقال " ها ان الفتنة ها هنا ان الفتنة ها هنا من حيث يطلع قرن الشيطان
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ‘‘இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் உங்கள் குழந்தைகளை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல) விட்டுவிடுங்கள்.82 மேலும், (இரவில்) உன் கதவை மூடிவிடுவீராக! (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வீராக! (உறங்கச் செல்கை யில்) உமது விளக்கை அணைத்து விடுவீராக! (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வீராக!. உமது தண்ணீர் பையைச் சுருக்கிட்டு மூடிவிடுவீராக! (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வீராக! உமது பாத்திரத்தை மூடி வைப்பீராக! (அதை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அதன்மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுவீராக! (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வீராக! இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.83 அத்தியாயம் :
حدثنا يحيى بن جعفر، حدثنا محمد بن عبد الله الانصاري، حدثنا ابن جريج، قال اخبرني عطاء، عن جابر رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " اذا استجنح {الليل} او كان جنح الليل فكفوا صبيانكم، فان الشياطين تنتشر حينيذ، فاذا ذهب ساعة من العشاء فحلوهم واغلق بابك، واذكر اسم الله، واطفي مصباحك، واذكر اسم الله، واوك سقاءك، واذكر اسم الله، وخمر اناءك، واذكر اسم الله، ولو تعرض عليه شييا
ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசிவிட்டுத் திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னை வழியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். லிஉசாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்ததுலி (என அறிவிப் பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரி களில் இருவர் அந்த வழியாகச் சென்றார் கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார் கள்.84 அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயைதான்” என்று சொன்னார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும், ‘‘அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)” என்று சொன் னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டுவிடுவான் லிஅல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையேனும் போட்டுவிடு வான்லி என்று நான் அஞ்சினேன்” என்று சொன்னார்கள்.85 அத்தியாயம் :
حدثني محمود بن غيلان، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن علي بن حسين، عن صفية ابنة حيى، قالت كان رسول الله صلى الله عليه وسلم معتكفا، فاتيته ازوره ليلا فحدثته ثم قمت، فانقلبت فقام معي ليقلبني. وكان مسكنها في دار اسامة بن زيد، فمر رجلان من الانصار، فلما رايا النبي صلى الله عليه وسلم اسرعا، فقال النبي صلى الله عليه وسلم " على رسلكما انها صفية بنت حيى ". فقالا سبحان الله يا رسول الله. قال " ان الشيطان يجري من الانسان مجرى الدم، واني خشيت ان يقذف في قلوبكما سوءا او قال شييا
சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்துகொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்துவிட்டது. அவரது கழுத்து நரம்புகள் புடைத்துவிட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும், யிஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ (அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தான்) என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற் பட்டுள்ள கோபம் போய்விடும்” என்று கூறினார்கள். ஆகவே, மக்கள் அந்த மனிதரிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள், யிஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக்கோருவீராக!› என்று கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள். அதற்கு அவர், ‘‘எனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?” என்று கேட்டார்.86 அத்தியாயம் :
حدثنا عبدان، عن ابي حمزة، عن الاعمش، عن عدي بن ثابت، عن سليمان بن صرد، قال كنت جالسا مع النبي صلى الله عليه وسلم ورجلان يستبان، فاحدهما احمر وجهه وانتفخت اوداجه، فقال النبي صلى الله عليه وسلم " اني لاعلم كلمة لو قالها ذهب عنه ما يجد، لو قال اعوذ بالله من الشيطان. ذهب عنه ما يجد ". فقالوا له ان النبي صلى الله عليه وسلم قال " تعوذ بالله من الشيطان ". فقال وهل بي جنون
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் மனைவியிடம் (உடலுறவு கொள்ளச்) செல்லும்போது ‘‘(அல்லாஹும்ம!) ஜன்னிப்னிஷ் ஷைத் தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸ்க்த்தனீ” (பொருள்: இறைவா! ஷைத்தானை என்னிடமிருந்து விலகி யிருக்கச்செய். எனக்கு நீ அளிக்கின்ற குழந்தைகளிடமிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச்செய்) என்று பிரார்த்தித்து, அவர்கள் இருவருக்கும் குழந்தை பிறக்கு மாயின், அக்குழந்தைக்கு ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை. மேலும், அதன் மீது ஷைத்தானுக்கு ஆதிக்கம் வழங்கப்படாது. இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.87 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا منصور، عن سالم بن ابي الجعد، عن كريب، عن ابن عباس، قال قال النبي صلى الله عليه وسلم " لو ان احدكم اذا اتى اهله قال {اللهم} جنبني الشيطان، وجنب الشيطان ما رزقتني. فان كان بينهما ولد لم يضره الشيطان، ولم يسلط عليه ". قال وحدثنا الاعمش عن سالم عن كريب عن ابن عباس مثله
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதார்கள். பிறகு, ‘‘ஷைத்தான் எனக்கு முன்னால் வந்து என் தொழுகை யைத் துண்டிக்கக் கடுமையாக முயன்றான். ஆனால், அவனை நான் வெற்றி கொள் ளும்படி அல்லாஹ் செய்துவிட்டான்” என்று கூறினார்கள். தொடர்ந்து முழு ஹதீஸையும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.88 அத்தியாயம் :
حدثنا محمود، حدثنا شبابة، حدثنا شعبة، عن محمد بن زياد، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم انه صلى صلاة فقال " ان الشيطان عرض لي، فشد على يقطع الصلاة على، فامكنني الله منه ". فذكره
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைக்கப்படும்போது ஷைத்தான் சத்தத் துடன் காற்றை விட்டுக்கொண்டு திரும்பி ஓடிவிடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு யிஇகாமத்’ சொல்லப்பட்டால் திரும்பி ஓடி விடுகிறான். யிஇகாமத்’ சொல்லி முடித்த தும் திரும்பிவருகிறான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதனின் உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, ‘‘இப்படி இப்படியெல்லாம் நினைத்துப்பார்” என்று கூறுகிறான். (அதன் விளைவாக) தொழுகையாளிக்கு நாம் மூன்று ரக்அத்கள் தொழுதோமா, நான்கு ரக்அத்கள் தொழுதோமா என்று தெரியாமல் போய்விடுகிறது. மூன்று ரக்அத்கள் தொழுதோமா, நான்கு ரக்அத்துக்கள் தொழுதோமா என்று தொழுகையாளிக்குத் தெரியாமல் போய்விட்டால், அவர் (மறதிக்குப் பரிகாரமாக) சஹ்வுடைய இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.89 அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا الاوزاعي، عن يحيى بن ابي كثير، عن ابي سلمة، عن ابي هريرة رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " اذا نودي بالصلاة ادبر الشيطان وله ضراط، فاذا قضي اقبل، فاذا ثوب بها ادبر، فاذا قضي اقبل، حتى يخطر بين الانسان وقلبه، فيقول اذكر كذا وكذا. حتى لا يدري اثلاثا صلى ام اربعا فاذا لم يدر ثلاثا صلى او اربعا سجد سجدتى السهو
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகன் (மனிதன்) ஒவ்வொரு வனும் பிறக்கும்போது, அவனது இரு (விலாப்) பக்கங்களிலும் ஷைத்தான் தன் இரு விரல்களால் குத்துகிறான்; மர்யமின் குமாரர் ஈசாவைத் தவிர. (அவர் பிறந்த போது அவரை விலாப் பக்கம்) குத்தச் சென்றான். ஆனால், அவரைச் சுற்றி யிருந்த மெல்லிய சவ்வைத்தான் குத்தி னான். (அதுதான் அவனால் முடிந்தது.) இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " كل بني ادم يطعن الشيطان في جنبيه باصبعه حين يولد، غير عيسى بن مريم، ذهب يطعن فطعن في الحجاب
அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். அங்கிருந்த மக்கள், ‘‘அபுத் தர்தா (ரலி) அவர்கள் (இங்கு) வந்து, ‘அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களின் நாவால் ஷைத்தானிடமிருந்து எவரைக் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இருக்கின்றாரா?› என்று கேட்டார்” எனச் சொன்னார்கள். முஃகீரா பின் மிக்ஸம் (ரஹ்) அவர்கள், ‘‘அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களின் நாவால் ஷைத்தானிடமிருந்து எவரைக் காப்பாற்றினானோ அவர்” என்று அபுத் தர்தா (ரலி) அவர்கள் குறிப்பிட்டது அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களைத் தான்” என்று கூறினார்கள்.90 அத்தியாயம் :
حدثنا مالك بن اسماعيل، حدثنا اسراييل، عن المغيرة، عن ابراهيم، عن علقمة، قال قدمت الشام {فقلت من ها هنا} قالوا ابو الدرداء قال افيكم الذي اجاره الله من الشيطان على لسان نبيه صلى الله عليه وسلم حدثنا سليمان بن حرب حدثنا شعبة عن مغيرة وقال الذي اجاره الله على لسان نبيه صلى الله عليه وسلم يعني عمارا
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானவர்கள் மேகங்களுக்கிடையே (சஞ்சரித்த வண்ணம்) பூமியில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளைக் குறித்துப் பேசிக்கொள்கிறார்கள். அப்போது ஷைத்தான்கள் (வானவர்களுடைய) வாக்கை (ஒட்டுக்) கேட்கின்றன. பின்னர், (பாட்டிலைக் கவிழ்த்து தோல் பையின் வாயில் வைத்து நீரை ஊற்றும்போது) பாட்டில் (அதில்) பொருத்தப்படுவதைப் போன்று சோதிடனின் காதில் தமது வாயை வைத்து (தாம் ஒட்டுக்கேட்டவற்றை இரகசியமாக)க் கூறிவிடுகின்றனர். (இனி நடைபெறவிருக்கும் ஒரு விஷயத்தை சோதிடர்கள் தெரிந்துகொண்டு) அதனுடன் நூறு பொய்களை (புனைந்து) சேர்த்துவிடு கின்றார்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.91 அத்தியாயம் :
قال وقال الليث حدثني خالد بن يزيد، عن سعيد بن ابي هلال، ان ابا الاسود، اخبره عروة، عن عايشة رضى الله عنها عن النبي صلى الله عليه وسلم قال " الملايكة تتحدث في العنان والعنان الغمام بالامر يكون في الارض، فتسمع الشياطين الكلمة، فتقرها في اذن الكاهن، كما تقر القارورة، فيزيدون معها ماية كذبة
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்படும்போது தம்மால் முடிந்தவரை அவர் அதைக் கட்டுப் படுத்திக்கொள்ளட்டும். ஏனெனில், யாரேனும் யிஹா’ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான்.92 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عاصم بن علي، حدثنا ابن ابي ذيب، عن سعيد المقبري، عن ابيه، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " التثاوب من الشيطان، فاذا تثاءب احدكم فليرده ما استطاع، فان احدكم اذا قال ها. ضحك الشيطان