ஹதீஸ்கள்
#3281
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசிவிட்டுத் திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னை வழியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். லிஉசாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்ததுலி (என அறிவிப் பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரி களில் இருவர் அந்த வழியாகச் சென்றார் கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார் கள்.84 அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயைதான்” என்று சொன்னார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும், ‘‘அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)” என்று சொன் னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டுவிடுவான் லிஅல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையேனும் போட்டுவிடு வான்லி என்று நான் அஞ்சினேன்” என்று சொன்னார்கள்.85 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3281
- Book Index
- 90
Grades
- -