ஹதீஸ்கள்
#3275
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ரமளானின் ஸகாத் பொருளைப் பாதுகாத்தி டும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே நான் அவனைப் பிடித்துக்கொண்டேன்; ‘‘உன்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்” என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்...) இறுதியில் அவன், ‘‘நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது யிஆயத்துல் குர்ஸீ’யை (2:255) ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்துகொண்டே இருப்பார். காலை நேரம் வரும்வரை ஷைத்தான் உங்களை நெருங்கமாட்டான்” என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது,) ‘‘அவன் பொய்யனாயிருந்தும், உம்மிடம் உண்மையே பேசியுள்ளான். அவன் ஷைத்தான்தான்” என்று கூறினார்கள்.78 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3275
- Book Index
- 84
Grades
- -