ஹதீஸ்கள்
#3288
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானவர்கள் மேகங்களுக்கிடையே (சஞ்சரித்த வண்ணம்) பூமியில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளைக் குறித்துப் பேசிக்கொள்கிறார்கள். அப்போது ஷைத்தான்கள் (வானவர்களுடைய) வாக்கை (ஒட்டுக்) கேட்கின்றன. பின்னர், (பாட்டிலைக் கவிழ்த்து தோல் பையின் வாயில் வைத்து நீரை ஊற்றும்போது) பாட்டில் (அதில்) பொருத்தப்படுவதைப் போன்று சோதிடனின் காதில் தமது வாயை வைத்து (தாம் ஒட்டுக்கேட்டவற்றை இரகசியமாக)க் கூறிவிடுகின்றனர். (இனி நடைபெறவிருக்கும் ஒரு விஷயத்தை சோதிடர்கள் தெரிந்துகொண்டு) அதனுடன் நூறு பொய்களை (புனைந்து) சேர்த்துவிடு கின்றார்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.91 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3288
- Book Index
- 97
Grades
- -