Loading...

Loading...
நூல்கள்
௫௩ ஹதீஸ்கள்
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்), சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்), அல்கமா பின் வக்காஸ் (ரஹ்), உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோர் எனக்கு, ஆயிஷா (ரலி) அவர்களை (சிலர் அவதூறு பேசியது) பற்றிய ஹதீஸை அறிவித்தார்கள். ஒருவர் அறிவித்த ஹதீஸ் மற்றவர் அறிவித்த ஹதீஸை உறுதிப்படுத்துவதாக இருந்தது. அவதூறு சொன்னவர்கள் தாங்கள் பேசிய அவதூறுகளையெல்லாம் சொன்ன போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியாரை (ஆயிஷா வை)ப் பிரிந்துவிடுவது தொடர்பாக ஆலோசனை கலப்பதற்காக வேண்டி அலீ (ரலி) அவர்களையும் உசாமா (ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது வேத அறிவிப்பு (வஹீ) தாற்காலிகமாக நின்றுபோயிருந்தது. உசாமா (ரலி) அவர்கள், ‘‘அவர் (ஆயிஷா), தங்கள் துணைவியார். (அவரைப் பற்றி) நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை” என்று கூறினார்கள். மேலும், (ஆயிஷா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட) பரீரா (ரலி) அவர்கள், ‘‘அவர் (ஆயிஷா), தம் வீட்டாரின் குழைத்த மாவை வளர்ப்பு ஆடு வந்து தின்கின்ற அளவுக்கு (அப்படியே) விட்டுவிட்டு உறங்கிவிடுகின்ற இள வயதுச் சிறுமி என்பதற்கு அதிகமாகக் குறைசொல்வதற்கு அவரிடம் நான் எதையும் பார்க்கவில்லை” என்று கூறினார்கள். (அதன்பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘என் வீட்டாரின் விஷயத் தில் எனக்கு (மன) வேதனை அளித்துவிட்ட ஒரு மனிதனுக்கு (அப்துல்லாஹ் பின் உபை என்ற நயவஞ்சகனுக்கு) எதிராக எனக்கு உதவி புரிபவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவியிடம் நல்லதைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை. மேலும், எந்த மனிதரைக் குறித்து நன்மையைத் தவிர வேறெதையும் நான் அறியமாட்டேனோ அவரை (இணைத்து) அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا حجاج، حدثنا عبد الله بن عمر النميري، حدثنا يونس،. وقال الليث حدثني يونس، عن ابن شهاب، قال اخبرني عروة، وابن المسيب، وعلقمة بن وقاص، وعبيد الله، عن حديث، عايشة رضى الله عنها وبعض حديثهم يصدق بعضا، حين قال لها اهل الافك، فدعا رسول الله صلى الله عليه وسلم عليا واسامة حين استلبث الوحى يستامرهما في فراق اهله، فاما اسامة فقال اهلك ولا نعلم الا خيرا. وقالت بريرة ان رايت عليها امرا اغمصه اكثر من انها جارية حديثة السن تنام عن عجين اهلها، فتاتي الداجن فتاكله. فقال رسول الله صلى الله عليه وسلم " من يعذرنا من رجل بلغني اذاه في اهل بيتي فوالله ما علمت من اهلي الا خيرا، ولقد ذكروا رجلا ما علمت عليه الا خيرا
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் (குழப்பவாதியான யூதச் சிறுவன்) இப்னு ஸய்யாத் இருந்த பேரீச்சந் தோட்டத்தை நாடிச் சென்றார்கள். (தோட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நுழைந்தவுடன் இப்னு ஸய்யாத் தம்மைப் பார்ப்பதற்கு முன்பே, அவனிடமிருந்து எதையேனும் கேட்டுவிட வேண்டும் எனத் திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களுக் கிடையே தம்மை மறைத்துக்கொண்டு நடக்கலானார்கள். இப்னு ஸய்யாத் தன் படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வைக் குள் (குறிகாரர்கள் முணுமுணுப்பதைப் போல்) எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான். நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களுக் கிடையே தம்மை மறைத்துக்கொண்டு வருவதை இப்னு ஸய்யாதின் தாய் பார்த்து விட்டாள். அவள் தன் மகனை நோக்கி, ‘‘ஸாஃபியே! இதோ முஹம்மத் (வந்து கொண்டிருக்கிறார்)” என்று கூறிவிட்டாள். உடனே இப்னு ஸய்யாத் விழிப்படைந்து முணுமுணுப்பதை நிறுத்திவிட்டான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவள் (இப்னு ஸய்யாதின் தாய்) அவனை (உஷார்படுத்தாமல்) விட்டு விட்டிருந்தால், (தன் உண்மை நிலையை அவனே) அம்பலப்படுத்திவிட்டிருப்பான்” என்று கூறினார்கள்.2 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال سالم سمعت عبد الله بن عمر رضى الله عنهما يقول انطلق رسول الله صلى الله عليه وسلم وابى بن كعب الانصاري يومان النخل التي فيها ابن صياد حتى اذا دخل رسول الله صلى الله عليه وسلم طفق رسول الله صلى الله عليه وسلم يتقي بجذوع النخل، وهو يختل ان يسمع من ابن صياد شييا قبل ان يراه، وابن صياد مضطجع على فراشه في قطيفة له فيها رمرمة او زمزمة فرات ام ابن صياد النبي صلى الله عليه وسلم وهو يتقي بجذوع النخل، فقالت لابن صياد اى صاف، هذا محمد. فتناهى ابن صياد، قال رسول الله صلى الله عليه وسلم " لو تركته بين
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘நான் ரிஃபாஆவிடம் (அவருடைய மணபந்தத்தில்) இருந்தேன். பிறகு அவர் என்னை மணவிலக்குச் செய்து மணவிலக்கை முடிவானதாக்கிவிட்டார். ஆகவே, நான் அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் (ரலி) அவர்களை மணந்து கொண்டேன். அவரிடம் (இன உறுப்பு என்று) இருப்பதெல்லாம் (இந்த முகத்திரைத்) துணியின் குஞ்சத்தைப் போன்றதுதான் (அவர் ஆண்மை குறைந்தவர்)” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ ரிஃபாஆவிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? நீ (உன் இரண்டாவது கணவரான) இவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரையிலும், இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காதவரையிலும் உன் முன்னாள் கணவரை நீ மணந்து கொள்வதென்பது முடியாது” என்று கூறி னார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந் தார்கள். காலித் பின் சயீத் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், தமக்கு உள்ளே நுழைய அனுமதியளிக்கப்படும் என்று எதிர்பார்த்த வண்ணம் வாசலில் நின்றுகொண்டிருந் தார்கள். அவர்கள், ‘‘அபூபக்ரே! இந்தப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் பகிரங்க மாகச் சொல்லிக்கொண்டிருப்பதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று (வாசலில் நின்றபடியே) கேட்டார்கள்.3 அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا سفيان، عن الزهري، عن عروة، عن عايشة رضى الله عنها جاءت امراة رفاعة القرظي النبي صلى الله عليه وسلم فقالت كنت عند رفاعة فطلقني فابت طلاقي، فتزوجت عبد الرحمن بن الزبير، انما معه مثل هدبة الثوب. فقال " اتريدين ان ترجعي الى رفاعة لا حتى تذوقي عسيلته ويذوق عسيلتك ". وابو بكر جالس عنده وخالد بن سعيد بن العاص بالباب ينتظر ان يوذن له، فقال يا ابا بكر، الا تسمع الى هذه ما تجهر به عند النبي صلى الله عليه وسلم
உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அபூஇஹாப் பின் அஸீஸ் (ரலி) அவர்களின் மகளை மணந்துகொண்டேன். ஒரு பெண் என்னிடம் வந்து, ‘‘உங்களுக் கும் நீங்கள் மணந்துகொண்ட பெண்ணுக் கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) நான் பாலூட்டியிருக்கிறேன்” என்று கூறினாள். நான், ‘‘நீ எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணம் புரிந்துகொண்டபோது) நீ எனக்கு (இதை) அறிவிக்கவில்லையே” என்று கூறிவிட்டு, அபூஇஹாபின் குடும்பத்தாரிடம் (இது உண்மைதானா என்று) கேட்டனுப்பினேன். அவர்கள், ‘‘எங்கள் பெண்ணுக்கு அவள் பாலூட்டியதாக நாங்கள் அறியவில்லை” என்று கூறினர். உடனே (மக்காவில் இருந்த) நான், மதீனாவிலிருந்த நபி (ஸல்) அவர்களிடம் (தீர்ப்புப் பெறுவதற்காக) பயணித்துச் சென்று அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(நீயும் உன் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால்குடித்ததாகச்) சொல்லப்பட்டுவிட்ட பின்னால், (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)?” என்று கூறினார்கள். ஆகவே, நான் அவளைப் பிரிந்துவிட்டேன். அவள் வேறொரு கணவனை மணந்து கொண்டாள்.4 அத்தியாயம் :
حدثنا حبان، اخبرنا عبد الله، اخبرنا عمر بن سعيد بن ابي حسين، قال اخبرني عبد الله بن ابي مليكة، عن عقبة بن الحارث، انه تزوج ابنة لابي اهاب بن عزيز، فاتته امراة فقالت قد ارضعت عقبة والتي تزوج. فقال لها عقبة ما اعلم انك ارضعتني ولا اخبرتني. فارسل الى ال ابي اهاب يسالهم فقالوا ما علمنا ارضعت صاحبتنا. فركب الى النبي صلى الله عليه وسلم بالمدينة فساله، فقال رسول الله صلى الله عليه وسلم " كيف وقد قيل ". ففارقها، ونكحت زوجا غيره
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் வேத அறிவிப்பு (வஹீ) வாயிலாக (இரகசியமாகச் செய்த குற்றங்கள் அம்பலமாகி) தண்டிக் கப்பட்டுவந்தார்கள். இப்போது (நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின்) வேத அறிவிப்பு நின்றுபோய்விட்டது. இப்போது நாம் உங்களைப் பிடி(த்து தண்டி)ப்ப தெல்லாம் உங்கள் செயல்களில் எமக்கு வெளிப்படையாகத் தெரிபவற்றைக் கொண்டுதான். ஆகவே, எவர் எம்மிடம் நன்மையை வெளிப்படுத்துகின்றாரோ அவரை நம்பிக்கைக்குரியவராக்கி கௌரவமாக நடத்துவோம். அவரது இரகசியம் எதையும் கணக்கிலெடுக்கமாட்டோம். அவரது அந்தரங்கம் குறித்து இறைவனே கணக்குக் கேட்பான். எவர் நம்மிடம் தீமையை வெளிப்படுத்துகிறாரோ அவரை நாம் நம்பவோ (அவர் சொல்லும் சமாதானத்தை) உண்மைப்படுத்தவோமாட்டோம்; அவர் தமது அந்தரங்கம் அழகானது என்று வாதிட்டாலும் சரியே.5 அத்தியாயம் :
حدثنا الحكم بن نافع، اخبرنا شعيب، عن الزهري، قال حدثني حميد بن عبد الرحمن بن عوف، ان عبد الله بن عتبة، قال سمعت عمر بن الخطاب رضى الله عنه يقول ان اناسا كانوا يوخذون بالوحى في عهد رسول الله صلى الله عليه وسلم، وان الوحى قد انقطع، وانما ناخذكم الان بما ظهر لنا من اعمالكم، فمن اظهر لنا خيرا امناه وقربناه، وليس الينا من سريرته شىء، الله يحاسبه في سريرته، ومن اظهر لنا سوءا لم نامنه ولم نصدقه، وان قال ان سريرته حسنة
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இருந்த இடத்தின் வழியாக ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு செல்லப்பட்டது. இறந்தவரின் நற்பண்புகள் குறித்து மக்கள் புகழ்ந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உறுதியாகிவிட்டது” என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டுசெல்லப்பட்டது. மக்கள் அதன் தீய பண்புகள் குறித்து இகழ்ந்தனர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘‘உறுதி யாகிவிட்டது” என்று கூறினார்கள். அப்போது ‘‘அல்லாஹ்வின் தூதரே! அதற்கும் யிஉறுதியாகிவிட்டது’ என்று கூறினீர்கள்; இதற்கும் யிஉறுதியாகிவிட்டது’ என்று கூறினீர்களே. (இரண்டிற்குமே இவ்வாறு கூறக் காரணமென்ன?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘இது சமூகத்தின் சாட்சியமாகும். இறைநம்பிக்கை யாளர்கள் பூமியில் இறைவனின் சாட்சிகள் ஆவர்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا حماد بن زيد، عن ثابت، عن انس رضى الله عنه قال مر على النبي صلى الله عليه وسلم بجنازة، فاثنوا عليها خيرا فقال " وجبت ". ثم مر باخرى فاثنوا عليها شرا او قال غير ذلك فقال " وجبت ". فقيل يا رسول الله، قلت لهذا وجبت، ولهذا وجبت، قال " شهادة القوم، المومنون شهداء الله في الارض
அபுல்அஸ்வத் அத்துஅலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மதீனா நகரில் (கொள்ளை) நோய் பரவியிருந்தபோது நான் அங்கு சென்றேன். மக்கள் பரவலாகவும் விரைவாகவும் இறந்துகொண்டிருந்தார்கள். நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று அமர்ந்தேன். அப்போது ஒரு பிரேதம் (ஜனாஸா) சென்றது. அதைக் குறித்து புகழ்ந்துரைக்கப்பட்டது. உடனே உமர் (ரலி) அவர்கள், ‘‘உறுதியாகி விட்டது” என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. அதைக் குறித்தும் புகழ்ந்துரைக் கப்பட்டது. அதற்கும் உமர் (ரலி) அவர்கள், ‘‘உறுதியாகி விட்டது” என்று கூறினார்கள். பிறகு மூன்றாவது ஜனாஸா கடந்து சென்றது. அதைக் குறித்து இகழ்ந்து பேசப்பட்டது. உமர் (ரலி) அவர்கள், ‘‘உறுதியாகி விட்டது” என்று கூறினார்கள். நான், ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! என்ன உறுதியாகிவிட்டது?” என்று கேட்டேன். அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே நானும் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘எந்த முஸ்லிமுக்கு நான்கு பேர், ‘அவர் நல்லவர்’ என்று சாட்சியம் சொல்கின்றார் களோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் அனுமதிப்பான்” என்று கூறினார்கள். நாங்கள், ‘‘மூன்று பேர் சாட்சி சொன்னாலுமா?” என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்; மூன்று பேர் சாட்சியம் சொன்னாலும் சரி (அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் அனுமதிப்பான்)” என்று கூறினார்கள். நாங்கள், ‘‘இரண்டு பேர் சாட்சியம் சொன்னாலுமா?” என்று கேட்டோம். அவர்கள், ‘‘ஆம்; இரண்டு பேர் சாட்சியம் சொன்னாலும் சரியே” என்று கூறினார்கள். பிறகு நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒருவரைப் பற்றி (‘‘ஒருவர் சாட்சி சொன்னாலுமா?” என்று) கேட்கவில்லை. அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا داود بن ابي الفرات، حدثنا عبد الله بن بريدة، عن ابي الاسود، قال اتيت المدينة وقد وقع بها مرض، وهم يموتون موتا ذريعا، فجلست الى عمر رضى الله عنه فمرت جنازة فاثني خير فقال عمر وجبت. ثم مر باخرى فاثني خيرا فقال وجبت. ثم مر بالثالثة فاثني شرا، فقال وجبت. فقلت ما وجبت يا امير المومنين قال قلت كما قال النبي صلى الله عليه وسلم " ايما مسلم شهد له اربعة بخير ادخله الله الجنة ". قلنا وثلاثة قال " وثلاثة ". قلت واثنان قال " واثنان ". ثم لم نساله عن الواحد
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் வீட்டில் நுழைவதற்கு ‘அஃப்லஹ்’ (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். நான் அவர்களுக்கு அனுமதி தரவில்லை. அவர்கள், ‘‘நான் உன் தந்தையின் சகோதர ராயிருக்க, நீ என்னிடமே திரையிட்டு (மறைத்து)க்கொள்கிறாயா?” என்று கேட்டார்கள். நான், ‘‘அதெப்படி (நீங்கள் என் தந்தையின் சகோதரராக முடியும்)?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘என் சகோதரரின் மனைவி என் சகோதரரின் (வாயிலாக அவரிடம் ஊறிய) பாலை உனக்குப் புகட்டியுள்ளார்” என்று கூறினார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், ‘‘அஃப்லஹ் சொன்னது உண்மையே. (நீ திரையின்றி இருக்கும் நிலையில் உன் முன்னால் வர) அவருக்கு அனுமதி கொடுக்கலாம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، اخبرنا الحكم، عن عراك بن مالك، عن عروة بن الزبير، عن عايشة رضى الله عنها قالت استاذن على افلح فلم اذن له، فقال اتحتجبين مني وانا عمك فقلت وكيف ذلك قال ارضعتك امراة اخي بلبن اخي. فقالت سالت عن ذلك رسول الله صلى الله عليه وسلم فقال " صدق افلح، ايذني له
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ஹம்ஸா (ரலி) அவர்களின் மகள் தொடர்பாக, ‘‘அவரை மணப்பது எனக்கு அனுமதிக்கப்பட்டதன்று. (ஏனெனில்) இரத்த உறவால் எவையெல் லாம் தடை செய்யப்படுமோ அவை யெல்லாம் (செவிலித் தாயிடம்) பால் குடிப்பதாலும் தடை செய்யப்படும். அவள் என் பால்குடிச் சகோதரரின் (ஹம்ஸாவின்) மகள் ஆவாள்” என்று கூறினார்கள்.7 அத்தியாயம் :
حدثنا مسلم بن ابراهيم، حدثنا همام، حدثنا قتادة، عن جابر بن زيد، عن ابن عباس رضى الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم في بنت حمزة " لا تحل لي، يحرم من الرضاع ما يحرم من النسب، هي بنت اخي من الرضاعة
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒரு மனிதர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைச் செவியுற்றேன். எனவே, நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர் (ஹஃப்ஸாவின் வீட்டுக்குள் செல்ல அனுமதி கேட்பவர்) ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என நான் நினைக்கிறேன்; அல்லாஹ்வின் தூதரே! இதோ தங்கள் (துணைவியார்) இல்லத் திற்குள் செல்ல இந்த மனிதர் அனுமதி கேட்கிறார்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்களும், ‘‘அவர் ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்றே நானும் நினைக்கிறேன்” என்று கூறினார்கள். நான், ‘‘இன்னார் உயிருடன் இருந்தால் அவர் திரையின்றி என்னைச் சந்திக்க முடியும்தானே!” என்று என் பால்குடித் தந்தையின் சகோதரர் குறித்துக் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஆம். (சந்திக்கலாம்.) பிறப்பு எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் பால்குடியும் நெருங்கிய உறவுகளாக்கிவிடும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن عبد الله بن ابي بكر، عن عمرة بنت عبد الرحمن، ان عايشة رضى الله عنها زوج النبي صلى الله عليه وسلم اخبرتها ان رسول الله صلى الله عليه وسلم كان عندها، وانها سمعت صوت رجل يستاذن في بيت حفصة. قالت عايشة فقلت يا رسول الله اراه فلانا. لعم حفصة من الرضاعة. فقالت عايشة يا رسول الله، هذا رجل يستاذن في بيتك. قالت فقال رسول الله صلى الله عليه وسلم " اراه فلانا ". لعم حفصة من الرضاعة. فقالت عايشة لو كان فلان حيا لعمها من الرضاعة دخل على فقال رسول الله صلى الله عليه وسلم " نعم، ان الرضاعة تحرم ما يحرم من الولادة
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஒரு மனிதர் அமர்ந்திருக்க, நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். ‘‘ஆயிஷாவே! இவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், ‘‘என் பால்குடிச் சகோதரர்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆயிஷாவே! உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பாருங்கள். ஏனெனில், பசியால் (பால் அருந்தினால்)தான் பால்குடி உறவு ஏற்படும்” என்று கூறினார்கள்.8 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن اشعث بن ابي الشعثاء، عن ابيه، عن مسروق، ان عايشة رضى الله عنها قالت دخل على النبي صلى الله عليه وسلم وعندي رجل، قال " يا عايشة من هذا ". قلت اخي من الرضاعة. قال " يا عايشة، انظرن من اخوانكن، فانما الرضاعة من المجاعة ". تابعه ابن مهدي عن سفيان
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மக்கா வெற்றிப் போரின்போது (மக்ஸூமி குலத்தவரான ஃபாத்திமா பின்த் அஸ்வத் என்னும் பெயருடைய) பெண்ணொருவர் திருடிவிட்டார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரது கையைத் துண்டிக்கும்படி உத்தரவிட்டார்கள். அதன்படி அவரது கை துண்டிக்கப்பட்டது. (அவரைப் பற்றி) ‘‘அவர் அழகிய முறையில் பாவமீட்பு பெற்றார்; திருமண மும் செய்துகொண்டார். அதன் பிறகு அவர் (எங்களிடம்) வந்துகொண்டிருந்தார். நான் அவரது தேவையை (அறிந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்வேன்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.12 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني ابن وهب، عن يونس،. وقال الليث حدثني يونس، عن ابن شهاب، اخبرني عروة بن الزبير، ان امراة، سرقت في غزوة الفتح، فاتي بها رسول الله صلى الله عليه وسلم ثم امر فقطعت يدها. قالت عايشة فحسنت توبتها وتزوجت، وكانت تاتي بعد ذلك فارفع حاجتها الى رسول الله صلى الله عليه وسلم
ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: விபசாரம் புரிந்துவிட்ட திருமணமாகாத ஒருவருக்கு நூறு சாட்டையடிகள் வழங்க வேண்டும் என்றும் ஓராண்டுக் காலத்திற்கு அவரை நாடு கடத்த வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.13 அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله، عن زيد بن خالد رضى الله عنه عن رسول الله صلى الله عليه وسلم انه امر فيمن زنى ولم يحصن بجلد ماية وتغريب عام
நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தாயார் என் தந்தையிடம் அவரது செல்வத்திலிருந்து எனக்குச் சிறிதளவு அன்பளிப்பு வழங்கும்படி கேட்டார்கள். (முதலில் மறுத்த) என் தந்தைக்கு ஏதோ தோன்ற பிறகு அந்த அன்பளிப்பை எனக்கு வழங்கினார். என் தாயார், ‘‘நீங்கள் நபி (ஸல்) அவர்களைச் சாட்சியாக்காத வரை நான் திருப்தி அடையமாட்டேன்” என்று கூறினார்கள். ஆகவே, என் தந்தை சிறுவனாக இருந்த என் கையைப் பிடித்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் என்னை அழைத்துச் சென்று, ‘‘இவனுடைய தாயாரான (அம்ரா) பின்த் ரவாஹா இவனுக்குச் சிறிதளவு அன்பளிப்புத் தரும்படி என்னிடம் கேட்டாள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இவனைத் தவிர வேறு குழந்தை ஏதும் உங்களுக்கு உண்டா?” என்று கேட்டார்கள். என் தந்தை, ‘‘ஆம் (உண்டு)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘என்னை அநீதிக்கு சாட்சியாக் காதீர்கள்” என்று கூறினார்கள் எனக் கருதுகிறேன். மற்றோர் அறிவிப்பில், ‘‘நான் அநீதிக்கு சாட்சியாக இருக்கமாட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வந்துள்ளது.14 அத்தியாயம் :
حدثنا عبدان، اخبرنا عبد الله، اخبرنا ابو حيان التيمي، عن الشعبي، عن النعمان بن بشير رضى الله عنهما قال سالت امي ابي بعض الموهبة لي من ماله، ثم بدا له فوهبها لي فقالت لا ارضى حتى تشهد النبي صلى الله عليه وسلم. فاخذ بيدي وانا غلام، فاتى بي النبي صلى الله عليه وسلم فقال ان امه بنت رواحة سالتني بعض الموهبة لهذا، قال " الك ولد سواه ". قال نعم. قال فاراه قال " لا تشهدني على جور ". وقال ابو حريز عن الشعبي " لا اشهد على جور
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். லிஇந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், ‘‘(தமது தலைமுறைக்குப்) பிறகு இரண்டு தலைமுறைகளை நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? அல்லது மூன்று தலைமுறைகளைக் கூறினார்களா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறுகிறார்கள்லி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக, உங்களுக்குப்பின் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியமளிக்கும்படி கோரப்படாமலேயே (தாமாக) சாட்சியம் அளிப்பார் கள்.15 அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால், அதை நிறைவேற்றமாட்டார்கள். அவர்களிடையே உண்டு கொழுக்கும் (தொந்தி பெருக்கும்) நிலை தோன்றும்.16 இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا ابو جمرة، قال سمعت زهدم بن مضرب، قال سمعت عمران بن حصين رضى الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم " خيركم قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم ". قال عمران لا ادري اذكر النبي صلى الله عليه وسلم بعد قرنين او ثلاثة. قال النبي صلى الله عليه وسلم " ان بعدكم قوما يخونون ولا يوتمنون، ويشهدون، ولا يستشهدون وينذرون ولا يفون، ويظهر فيهم السمن
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறை’னர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு சில சமுதாயங்கள் தோன்றும். அவர்களது சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களது சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக்கொள்ளும்.17 இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (சிறுவர்களான) எங்களை அவர்கள் (நபித்தோழர்கள்), ‘அஷ்ஹது பில்லாஹ்’ (அல்லாஹ்வின் பெயரால் சாட்சியம் அளிக்கிறேன்) என்றோ, ‘அலய்ய அஹ்துல்லாஹ்’ (அல்லாஹ்வுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி) என்றோ கூறினால், கடிந்து (கண்டித்து)வந்தார்கள்.18 அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن منصور، عن ابراهيم، عن عبيدة، عن عبد الله رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " خير الناس قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم، ثم يجيء اقوام تسبق شهادة احدهم يمينه، ويمينه شهادته ". قال ابراهيم وكانوا يضربوننا على الشهادة والعهد
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் குறித்து வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல், பெற்றோரைப் புண்படுத்தல், கொலை செய்தல், பொய் சாட்சியம் அளித்தல் ஆகியன (பெரும் பாவங் களாகும்)” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن منير، سمع وهب بن جرير، وعبد الملك بن ابراهيم، قالا حدثنا شعبة، عن عبيد الله بن ابي بكر بن انس، عن انس رضى الله عنه قال سيل النبي صلى الله عليه وسلم عن الكباير قال " الاشراك بالله، وعقوق الوالدين، وقتل النفس، وشهادة الزور ". تابعه غندر وابو عامر وبهز وعبد الصمد عن شعبة
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) ‘‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்றுமுறை) கேட்டார்கள். மக்கள், ‘‘ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்)” என்று சொன்னார் கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்(தான் அவை)” என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘‘அறிந்துகொள்ளுங்கள்: பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்)தான்” என்று கூறினார்கள். யிநிறுத்திக்கொள்ளக் கூடாதா’ என்று நாங்கள் சொல்கின்ற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே இருந்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا بشر بن المفضل، حدثنا الجريري، عن عبد الرحمن بن ابي بكرة، عن ابيه رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " الا انبيكم باكبر الكباير ". ثلاثا. قالوا بلى يا رسول الله. قال " الاشراك بالله، وعقوق الوالدين ". وجلس وكان متكيا فقال " الا وقول الزور ". قال فما زال يكررها حتى قلنا ليته سكت. وقال اسماعيل بن ابراهيم حدثنا الجريري حدثنا عبد الرحمن
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் பள்ளிவாசலில் குர்ஆன் ஓதுவதைச் செவியுற்று, ‘‘அவருக்கு அல்லாஹ் கருணை புரியட்டும். நான் இன்னின்ன அத்தியாயத்திலிருந்து (சற்று) மறந்துவிட்டிருந்த இன்னின்ன வசனத்தை எனக்கு அவர் நினைவூட்டிவிட்டார்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்பாத் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு காணப் படுகிறது: ஆயிஷா (ரலி) அவர்கள் கூறி னார்கள்: நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் தஹஜ்ஜுத் தொழுகை தொழுதார்கள். அப்போது பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) அவர்கள் (குர்ஆன் ஓதுகின்ற) குரலைச் செவியுற்று (என்னிடம்), ‘‘ஆயிஷாவே, இது அப்பாதின் குரலா?” என்று கேட்டார்கள். ‘யிஆம் (இது அப்பாதின் குரல்தான்)” என்று நான் பதிலளித்ததும் நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! அப்பாதிற்குக் கருணை செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن عبيد بن ميمون، اخبرنا عيسى بن يونس، عن هشام، عن ابيه، عن عايشة رضى الله عنها قالت سمع النبي صلى الله عليه وسلم رجلا يقرا في المسجد فقال " رحمه الله، لقد اذكرني كذا وكذا اية، اسقطتهن من سورة كذا وكذا ". وزاد عباد بن عبد الله عن عايشة تهجد النبي صلى الله عليه وسلم في بيتي فسمع صوت عباد يصلي في المسجد فقال " يا عايشة، اصوت عباد هذا ". قلت نعم. قال " اللهم ارحم عبادا
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பிலால் (ரலி) அவர்கள் (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். ஆகவே, அப்துல்லாஹ் பின் உம்மி மக்(த்)தூம் (வைகறை) தொழுகை அறிவிப்புச் செய் யும்வரை லிஅல்லது அவரது தொழுகை அறிவிப்பை நீங்கள் கேட்கும்வரைலி (சஹ்ருக்காக) உண்ணுங்கள்; பருகுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு உம்மி மக்(த்)தூம் (ரலி) அவர்கள் கண்பார்வையற்றவராக இருந்தார்கள். அவரிடம் யிகாலை நேரம் வந்து விட்டது’ என்று மக்கள் கூறும்வரை அவர் பாங்கு சொல்லமாட்டார். அத்தியாயம் :
حدثنا مالك بن اسماعيل، حدثنا عبد العزيز بن ابي سلمة، اخبرنا ابن شهاب، عن سالم بن عبد الله، عن عبد الله بن عمر رضى الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم " ان بلالا يوذن بليل فكلوا واشربوا حتى يوذن او قال حتى تسمعوا اذان ابن ام مكتوم ". وكان ابن ام مكتوم رجلا اعمى، لا يوذن حتى يقول له الناس اصبحت