ஹதீஸ்கள்
#2654
ஸஹீஹ் அல்-புகாரீ - Witnesses
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) ‘‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்றுமுறை) கேட்டார்கள். மக்கள், ‘‘ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்)” என்று சொன்னார் கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்(தான் அவை)” என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘‘அறிந்துகொள்ளுங்கள்: பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்)தான்” என்று கூறினார்கள். யிநிறுத்திக்கொள்ளக் கூடாதா’ என்று நாங்கள் சொல்கின்ற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே இருந்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Witnesses
- Hadith Index
- #2654
- Book Index
- 18
Grades
- -