ஹதீஸ்கள்
#2652
ஸஹீஹ் அல்-புகாரீ - Witnesses
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறை’னர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு சில சமுதாயங்கள் தோன்றும். அவர்களது சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களது சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக்கொள்ளும்.17 இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (சிறுவர்களான) எங்களை அவர்கள் (நபித்தோழர்கள்), ‘அஷ்ஹது பில்லாஹ்’ (அல்லாஹ்வின் பெயரால் சாட்சியம் அளிக்கிறேன்) என்றோ, ‘அலய்ய அஹ்துல்லாஹ்’ (அல்லாஹ்வுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி) என்றோ கூறினால், கடிந்து (கண்டித்து)வந்தார்கள்.18 அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن منصور، عن ابراهيم، عن عبيدة، عن عبد الله رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " خير الناس قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم، ثم يجيء اقوام تسبق شهادة احدهم يمينه، ويمينه شهادته ". قال ابراهيم وكانوا يضربوننا على الشهادة والعهد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Witnesses
- Hadith Index
- #2652
- Book Index
- 16
Grades
- -
