ஹதீஸ்கள்
#2650
ஸஹீஹ் அல்-புகாரீ - Witnesses
நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தாயார் என் தந்தையிடம் அவரது செல்வத்திலிருந்து எனக்குச் சிறிதளவு அன்பளிப்பு வழங்கும்படி கேட்டார்கள். (முதலில் மறுத்த) என் தந்தைக்கு ஏதோ தோன்ற பிறகு அந்த அன்பளிப்பை எனக்கு வழங்கினார். என் தாயார், ‘‘நீங்கள் நபி (ஸல்) அவர்களைச் சாட்சியாக்காத வரை நான் திருப்தி அடையமாட்டேன்” என்று கூறினார்கள். ஆகவே, என் தந்தை சிறுவனாக இருந்த என் கையைப் பிடித்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் என்னை அழைத்துச் சென்று, ‘‘இவனுடைய தாயாரான (அம்ரா) பின்த் ரவாஹா இவனுக்குச் சிறிதளவு அன்பளிப்புத் தரும்படி என்னிடம் கேட்டாள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இவனைத் தவிர வேறு குழந்தை ஏதும் உங்களுக்கு உண்டா?” என்று கேட்டார்கள். என் தந்தை, ‘‘ஆம் (உண்டு)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘என்னை அநீதிக்கு சாட்சியாக் காதீர்கள்” என்று கூறினார்கள் எனக் கருதுகிறேன். மற்றோர் அறிவிப்பில், ‘‘நான் அநீதிக்கு சாட்சியாக இருக்கமாட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வந்துள்ளது.14 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Witnesses
- Hadith Index
- #2650
- Book Index
- 14
Grades
- -