ஹதீஸ்கள்
#2651
ஸஹீஹ் அல்-புகாரீ - Witnesses
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். லிஇந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், ‘‘(தமது தலைமுறைக்குப்) பிறகு இரண்டு தலைமுறைகளை நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? அல்லது மூன்று தலைமுறைகளைக் கூறினார்களா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறுகிறார்கள்லி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக, உங்களுக்குப்பின் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியமளிக்கும்படி கோரப்படாமலேயே (தாமாக) சாட்சியம் அளிப்பார் கள்.15 அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால், அதை நிறைவேற்றமாட்டார்கள். அவர்களிடையே உண்டு கொழுக்கும் (தொந்தி பெருக்கும்) நிலை தோன்றும்.16 இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا ابو جمرة، قال سمعت زهدم بن مضرب، قال سمعت عمران بن حصين رضى الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم " خيركم قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم ". قال عمران لا ادري اذكر النبي صلى الله عليه وسلم بعد قرنين او ثلاثة. قال النبي صلى الله عليه وسلم " ان بعدكم قوما يخونون ولا يوتمنون، ويشهدون، ولا يستشهدون وينذرون ولا يفون، ويظهر فيهم السمن
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Witnesses
- Hadith Index
- #2651
- Book Index
- 15
Grades
- -
