ஹதீஸ்கள்
#2643
ஸஹீஹ் அல்-புகாரீ - Witnesses
அபுல்அஸ்வத் அத்துஅலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மதீனா நகரில் (கொள்ளை) நோய் பரவியிருந்தபோது நான் அங்கு சென்றேன். மக்கள் பரவலாகவும் விரைவாகவும் இறந்துகொண்டிருந்தார்கள். நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று அமர்ந்தேன். அப்போது ஒரு பிரேதம் (ஜனாஸா) சென்றது. அதைக் குறித்து புகழ்ந்துரைக்கப்பட்டது. உடனே உமர் (ரலி) அவர்கள், ‘‘உறுதியாகி விட்டது” என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. அதைக் குறித்தும் புகழ்ந்துரைக் கப்பட்டது. அதற்கும் உமர் (ரலி) அவர்கள், ‘‘உறுதியாகி விட்டது” என்று கூறினார்கள். பிறகு மூன்றாவது ஜனாஸா கடந்து சென்றது. அதைக் குறித்து இகழ்ந்து பேசப்பட்டது. உமர் (ரலி) அவர்கள், ‘‘உறுதியாகி விட்டது” என்று கூறினார்கள். நான், ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! என்ன உறுதியாகிவிட்டது?” என்று கேட்டேன். அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே நானும் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘எந்த முஸ்லிமுக்கு நான்கு பேர், ‘அவர் நல்லவர்’ என்று சாட்சியம் சொல்கின்றார் களோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் அனுமதிப்பான்” என்று கூறினார்கள். நாங்கள், ‘‘மூன்று பேர் சாட்சி சொன்னாலுமா?” என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்; மூன்று பேர் சாட்சியம் சொன்னாலும் சரி (அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் அனுமதிப்பான்)” என்று கூறினார்கள். நாங்கள், ‘‘இரண்டு பேர் சாட்சியம் சொன்னாலுமா?” என்று கேட்டோம். அவர்கள், ‘‘ஆம்; இரண்டு பேர் சாட்சியம் சொன்னாலும் சரியே” என்று கூறினார்கள். பிறகு நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒருவரைப் பற்றி (‘‘ஒருவர் சாட்சி சொன்னாலுமா?” என்று) கேட்கவில்லை. அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا داود بن ابي الفرات، حدثنا عبد الله بن بريدة، عن ابي الاسود، قال اتيت المدينة وقد وقع بها مرض، وهم يموتون موتا ذريعا، فجلست الى عمر رضى الله عنه فمرت جنازة فاثني خير فقال عمر وجبت. ثم مر باخرى فاثني خيرا فقال وجبت. ثم مر بالثالثة فاثني شرا، فقال وجبت. فقلت ما وجبت يا امير المومنين قال قلت كما قال النبي صلى الله عليه وسلم " ايما مسلم شهد له اربعة بخير ادخله الله الجنة ". قلنا وثلاثة قال " وثلاثة ". قلت واثنان قال " واثنان ". ثم لم نساله عن الواحد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Witnesses
- Hadith Index
- #2643
- Book Index
- 7
Grades
- -
