ஹதீஸ்கள்
#2655
ஸஹீஹ் அல்-புகாரீ - Witnesses
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் பள்ளிவாசலில் குர்ஆன் ஓதுவதைச் செவியுற்று, ‘‘அவருக்கு அல்லாஹ் கருணை புரியட்டும். நான் இன்னின்ன அத்தியாயத்திலிருந்து (சற்று) மறந்துவிட்டிருந்த இன்னின்ன வசனத்தை எனக்கு அவர் நினைவூட்டிவிட்டார்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்பாத் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு காணப் படுகிறது: ஆயிஷா (ரலி) அவர்கள் கூறி னார்கள்: நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் தஹஜ்ஜுத் தொழுகை தொழுதார்கள். அப்போது பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) அவர்கள் (குர்ஆன் ஓதுகின்ற) குரலைச் செவியுற்று (என்னிடம்), ‘‘ஆயிஷாவே, இது அப்பாதின் குரலா?” என்று கேட்டார்கள். ‘யிஆம் (இது அப்பாதின் குரல்தான்)” என்று நான் பதிலளித்ததும் நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! அப்பாதிற்குக் கருணை செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Witnesses
- Hadith Index
- #2655
- Book Index
- 19
Grades
- -