Loading...

Loading...
நூல்கள்
௧௧௩ ஹதீஸ்கள்
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியாவது: (நாய் மூலம் வேட்டையாடுவதைப் பற்றி) நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் “வேட்டைக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாயை நீங்கள் அனுப்பிவைத்து, அது (பிராணிகளைக் கவ்விக்) கொன்றுவிட்டாலும் அதை நீங்கள் உண்ணலாம். (அந்தப் பிராணியை) நாய் தின்றிருக்குமானால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். ஏனெனில், அது (அப்பிராணியை) தனக்காகவே (கவ்வி) வைத்துக் கொண்டுள்ளது” என்று கூறினார்கள். நான், “எனது நாயை வேட்டையாட அனுப்புகிறேன்; அதனுடன் மற்றொரு நாயையும் காண்கிறேன் (இவ்விரண்டில் பிராணியைப் பிடித்தது எது என்று எனக்குத் தெரியாது. இந்நிலையில் என்ன செய்வது)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் நாயைத்தான் அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறி அனுப்பினீர்களே தவிர, மற்றொரு நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பவில்லை; எனவே, (அதை) உண்ணாதீர்கள்” என்று சொன்னார்கள்.18 அத்தியாயம் :
حدثنا حفص بن عمر، قال حدثنا شعبة، عن ابن ابي السفر، عن الشعبي، عن عدي بن حاتم، قال سالت النبي صلى الله عليه وسلم فقال " اذا ارسلت كلبك المعلم فقتل فكل، واذا اكل فلا تاكل، فانما امسكه على نفسه ". قلت ارسل كلبي فاجد معه كلبا اخر قال " فلا تاكل، فانما سميت على كلبك، ولم تسم على كلب اخر
சயீத் அல்மக்புரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “ஓர் அடியார் (அங்கத் தூய்மை செய்து கூட்டுத்) தொழுகையை எதிர்பார்த்தபடி பள்ளிவாசலில் இருக்கும் நேரமெல்லாம் அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுகிறாôர்; அவருக்கு சிறு துடக்கு (ஹதஸ்) ஏற்படாத வரை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது அரபி மொழி (நன்கு) தெரியாத ஒருவர், “ஹதஸ் என்றால் என்ன, அபூஹுரைரா அவர்களே!?” என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “பின்துவாரத்திலிருந்து வெளியாகும் காற்று (சப்தம்)” என்று பதிலளித் தார்கள். அத்தியாயம் :
حدثنا ادم بن ابي اياس، قال حدثنا ابن ابي ذيب، عن سعيد المقبري، عن ابي هريرة، قال قال النبي صلى الله عليه وسلم " لا يزال العبد في صلاة ما كان في المسجد ينتظر الصلاة، ما لم يحدث ". فقال رجل اعجمي ما الحدث يا ابا هريرة قال الصوت. يعني الضرطة
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகையில் நிற்கும்போது பின்துவாரத்திலிருந்து பிரியும் காற்றின்) சப்தத்தைக் கேட்காத வரை, அல்லது (அதன்) நாற்றத்தை உணராத வரை (தொழுகையை விட்டு) திரும்பிச் செல்ல வேண்டாம். இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، قال حدثنا ابن عيينة، عن الزهري، عن عباد بن تميم، عن عمه، عن النبي صلى الله عليه وسلم قال " لا ينصرف حتى يسمع صوتا او يجد ريحا
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: பாலுணர்வு கிளர்ச்சி நீர் (‘மதீ’) அதிக மாக வெளிப்படும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றிக்) கேட்க வெட் கப்பட்டு மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு பணித்தேன். அவ்வாறே அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். “அதற்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதுதான் கடமை; (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، قال حدثنا جرير، عن الاعمش، عن منذر ابي يعلى الثوري، عن محمد ابن الحنفية، قال قال علي كنت رجلا مذاء، فاستحييت ان اسال رسول الله صلى الله عليه وسلم فامرت المقداد بن الاسود فساله فقال " فيه الوضوء ". ورواه شعبة عن الاعمش
ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் “ஒருவர் (தம் மனைவி யுடன்) தாம்பத்திய உறவு மேற்கொண்டார். ஆனால், விந்து வெளியாகவில்லை (இந்நிலையில் அவர்மீது குளியல் கடமையாகுமா, என்ன) சொல்லுங்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “அவர் தமது ஆண் குறியைக் கழுவிவிட்டுத் தொழுகைக்குச் செய்வதைப் போன்று அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ள வேண்டும். இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளேன்” என்று கூறினார்கள். மேலும், இது பற்றி அலீ (ரலி), ஸுபைர் (ரலி), தல்ஹா (ரலி), உபை பின் கஅப் (ரலி) ஆகியோரைக் கேட்டபோது, இவ்வாறே அவர் செய்ய வேண்டுமென அவர்கள் அனை வரும் வலியுறுத்தினர்.21 அத்தியாயம் :
حدثنا سعد بن حفص، حدثنا شيبان، عن يحيى، عن ابي سلمة، ان عطاء بن يسار، اخبره ان زيد بن خالد اخبره انه، سال عثمان بن عفان رضى الله عنه قلت ارايت اذا جامع فلم يمن قال عثمان يتوضا كما يتوضا للصلاة، ويغسل ذكره. قال عثمان سمعته من رسول الله صلى الله عليه وسلم. فسالت عن ذلك عليا، والزبير، وطلحة، وابى بن كعب رضى الله عنهم فامروه بذلك
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்கள். தலையிலி ருந்து தண்ணீர் சொட்டும் நிலையில் அவர் வந்தார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள். “நாம் உங்களை அவசரப் படுத்திவிட்டோம் போலும்?” என்றார்கள். அதற்கு அவர் ‘ஆம்’ என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் (தாம்பத்திய உறவு கொள்ளும்போது) அவசரப்பட்டு எழ நேர்ந்தால், அல்லது விந்து வெளியாக்காம லிருந்தால் அங்கத் தூய்மை செய்வது (மட்டுமே) உங்கள்மீது கடமையாகும்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: ஷுஅபா (ரஹ்) அவர்களிடமிருந்து ஃகுன்தர் (ரஹ்), யஹ்யா (ரஹ்) ஆகியோர் வழியாக வரும் அறிவிப்பில் “அங்கத் தூய்மை கடமையாகும்” எனும் வாசகம் இடம்பெறவில்லை. (“உங்கள்மீது குளியல் கடமையாகாது” என்ற வாசகமே காணப்படுகிறது.) அத்தியாயம் :
حدثنا اسحاق، قال اخبرنا النضر، قال اخبرنا شعبة، عن الحكم، عن ذكوان ابي صالح، عن ابي سعيد الخدري، ان رسول الله صلى الله عليه وسلم ارسل الى رجل من الانصار فجاء وراسه يقطر، فقال النبي صلى الله عليه وسلم " لعلنا اعجلناك ". فقال نعم. فقال رسول الله صلى الله عليه وسلم " اذا اعجلت او قحطت، فعليك الوضوء ". تابعه وهب قال حدثنا شعبة. قال ابو عبد الله ولم يقل غندر ويحيى عن شعبة الوضوء
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின்போது) ‘அரஃபா’ பெருவெளி யிலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு கணவாயை நோக்கிச் சென்று அங்கு இயற்கைக் கடனை நிறைவேற்றினார்கள். அப்போது நான் அவர்களுக்குத் தண்ணீர் ஊற்ற, அவர்கள் அங்கத் தூய்மை செய்யலானார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு, “தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா எனும் இடத்தில்) வருகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.22 அத்தியாயம் :
حدثني محمد بن سلام، قال اخبرنا يزيد بن هارون، عن يحيى، عن موسى بن عقبة، عن كريب، مولى ابن عباس عن اسامة بن زيد، ان رسول الله صلى الله عليه وسلم لما افاض من عرفة عدل الى الشعب، فقضى حاجته. قال اسامة بن زيد فجعلت اصب عليه ويتوضا فقلت يا رسول الله اتصلي فقال " المصلى امامك
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் தமது (இயற்கைத்) தேவைக்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். (அவர்கள் திரும்பி வந்தபோது) அவர்களின் (கை கால்கள்)மீது நான் தண்ணீர் ஊற்றலானேன். அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். அப்போது அவர்கள் தமது முகத்தையும் இரு கைகளையும் கழுவினார்கள். ஈரக்கையால் தலையைத் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். ஈரக்கையால் காலுறைகள்மீது தடவினார்கள் (காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவவில்லை). அத்தியாயம் :
حدثنا عمرو بن علي، قال حدثنا عبد الوهاب، قال سمعت يحيى بن سعيد، قال اخبرني سعد بن ابراهيم، ان نافع بن جبير بن مطعم، اخبره انه، سمع عروة بن المغيرة بن شعبة، يحدث عن المغيرة بن شعبة، انه كان مع رسول الله صلى الله عليه وسلم في سفر، وانه ذهب لحاجة له، وان مغيرة جعل يصب الماء عليه، وهو يتوضا، فغسل وجهه ويديه ومسح براسه ومسح على الخفين
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் (ஒரு நாள்) இரவு தங்கினேன். நான் தலையணையின் அகலவாக்கில் (தலை வைத்துப்) படுத்துக்கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் வீட்டாரும் அதன் நீளவாக்கில் (தலைவைத்துப்) படுத்திருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை, அல்லது அதற்கு சற்று முன்புவரை, அல்லது சற்றுப் பின்புவரை உறங்கினார்கள். (பின்னர்) அவர்கள் விழித்தெழுந்து அமர்ந்து, தமது கரத்தால் தமது முகத்தில் தடவித் தூக்க(க் கலக்கத்)தைத் துடைக்கலானார்கள். பிறகு ‘ஆலு இம்ரான்’ அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள். பிறகு (கட்டித்) தொங்கவிடப்பட்டிருந்த ஒரு தண்ணீர் பையருகே சென்று (அதைச் சரித்து) அதிலிருந்து அங்கத் தூய்மை செய்தார்கள். தமது அங்கத் தூய்மையைச் செம்மையாகச் செய்து கொண்ட பின்னர் தொழுவதற்காக நின்றார்கள். நானும் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று (அங்கத் தூய்மை) செய்துவிட்டு அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் போய் நின்றேன். உடனே அவர்கள் தமது வலக் கரத்தை என் தலைமீது வைத்து, என் வலது காதைப் பிடித்துத் திருகி (தம் வலப் பக்கத்தில் இழுத்து) நிறுத்தினார்கள். அப்போது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக் அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள், மறுபடியும் இரண்டு ரக்அத்து கள், மேலும் இரண்டு ரக்அத்கள் தொழு தார்கள். பின்பு ‘வித்ர்’ தொழுதார்கள். பின்னர் தொழுகை அறிவிப்பாளர் (தொழுகை அறிவிப்புச் செய்துவிட்டுத் தம்மிடம்) வரும்வரை சாய்ந்து படுத்திருந் தார்கள். பிறகு (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுதுவிட்டு, (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று சுப்ஹு தொழு(வித்)தார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن مخرمة بن سليمان، عن كريب، مولى ابن عباس ان عبد الله بن عباس، اخبره انه، بات ليلة عند ميمونة زوج النبي صلى الله عليه وسلم وهي خالته فاضطجعت في عرض الوسادة، واضطجع رسول الله صلى الله عليه وسلم واهله في طولها، فنام رسول الله صلى الله عليه وسلم حتى اذا انتصف الليل، او قبله بقليل او بعده بقليل، استيقظ رسول الله صلى الله عليه وسلم فجلس يمسح النوم عن وجهه بيده، ثم قرا العشر الايات الخواتم من سورة ال عمران، ثم قام الى شن معلقة، فتوضا منها فاحسن وضوءه، ثم قام يصلي. قال ابن عباس فقمت فصنعت مثل ما صنع، ثم ذهبت، فقمت الى جنبه، فوضع يده اليمنى على راسي، واخذ باذني اليمنى، يفتلها، فصلى ركعتين، ثم ركعتين، ثم ركعتين، ثم ركعتين، ثم ركعتين، ثم ركعتين، ثم اوتر، ثم اضطجع، حتى اتاه الموذن، فقام، فصلى ركعتين خفيفتين، ثم خرج فصلى الصبح
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) சூரிய கிரகணம் எற்பட்டபோது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது மக்கள் நின்று தொழுதுகொண்டிருந்தனர். ஆயிஷா (ரலி) அவர்களும் நின்று தொழுதுகொண் டிருந்தார்கள். (தொழுகையிலிருந்த ஆயிஷா (ரலி) அவர்களிடம்) நான், “மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் (ஏதும் கூறாமல்) வானை நோக்கித் தமது கரத்தால் சைகை செய் தார்கள். (தொழுகையில் பேசக் கூடாது என்பதை உணர்த்துவதற்காக) ‘சுப்ஹானல் லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று கூறினார்கள். “இது (ஏதாவது) அடையாளமா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ‘ஆம்’ என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (அவர் களோடு நீண்ட நெடிய அத்தொழுகையில்) நின்றுகொண்டேன். எந்த அளவுக் கென்றால் (நீண்ட நேரம் நின்றதால்) எனக்குக் கிறக்கமே ஏற்பட்டுவிட்டது. (கிறக்கம் நீங்க) என் தலைமீது தண்ணீரை ஊற்றலானேன். தொழுது முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, பின்வருமாறு கூறினார்கள்: எனக்கு இதுவரை காட்டப்பட்டிராத அனைத்தையும் இந்த இடத்தில் (தொழுகையில் இருந்தபோது) கண்டேன். சொர்க்கம், நரகம் உட்பட (அனைத்தையும் கண்டேன்). மேலும், எனக்கு (வஹீ) அறிவிக்கப்பட்டது: நிச்சயமாக நீங்கள் உங்கள் மண்ணறைகளில் (கப்றில்) ‘தஜ்ஜால்’ என்பவனுடைய சோதனைக்கு ‘நிகரான’ அல்லது ‘நெருக்கமான’ அளவுக்குச் சோதிக்கப்படுவீர்கள். -இதன் அறிவிப்பாளரான பாத்திமா பின்த் அல்முன்திர் (ரஹ்) கூறுகிறார்: (நிகரான/நெருக்கமான) இவற்றில் எந்த வாசகத்தை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.- அப்போது (மண்ணறையிலிருக்கும்) உங்களில் ஒருவரிடம் (என்னைக் காட்டி), “இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?” என்று (வானவர்களால்) கேட்கப்படும். அதற்கு ‘இறைநம்பிக்கையாளரோ’ அல்லது ‘உறுதி கொண்டவரோ’ -இவற்றில் அஸ்மா (ரலி) அவர்கள் எதைச் சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.- “அவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆவார்கள். அவர்கள் எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நல்வழியை யும் கொண்டுவந்தார்கள். நாங்கள் (அவர் களது அழைப்பை) ஏற்றுப் பின்பற்றி னோம்” என்று பதிலளிப்பார். அப்போது கேள்வி கேட்ட (வான)வர் களின் தரப்பிலிருந்து “நல்லபடியாக நீர் உறங்குவீராக! நீர் (இந்த இறைத்தூதரை ஏற்ற நல்ல) நம்பிக்கையாளராய் இருந்தீர் என்று நாங்கள் அறிந்திருந்தோம்” என்று கூறப்படும். ‘நயவஞ்சகரோ’ அல்லது ‘சந்தேகப் பேர்வழியோ’ -இவற்றில் அஸ்மா (ரலி) அவர்கள் எதைச் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியவில்லை- “எனக்கு எதுவும் தெரியாது. மக்கள் எதையோ சொல்லக் கேட்டேன். அதையே நானும் சொன்னேன்” என்று கூறுவார்.23 அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن هشام بن عروة، عن امراته، فاطمة عن جدتها، اسماء بنت ابي بكر انها قالت اتيت عايشة زوج النبي صلى الله عليه وسلم حين خسفت الشمس، فاذا الناس قيام يصلون، واذا هي قايمة تصلي فقلت ما للناس فاشارت بيدها نحو السماء وقالت سبحان الله. فقلت اية فاشارت اى نعم. فقمت حتى تجلاني الغشى، وجعلت اصب فوق راسي ماء، فلما انصرف رسول الله صلى الله عليه وسلم حمد الله واثنى عليه، ثم قال " ما من شىء كنت لم اره الا قد رايته في مقامي هذا حتى الجنة والنار، ولقد اوحي الى انكم تفتنون في القبور مثل او قريبا من فتنة الدجال لا ادري اى ذلك قالت اسماء يوتى احدكم فيقال ما علمك بهذا الرجل فاما المومن او الموقن لا ادري اى ذلك قالت اسماء فيقول هو محمد رسول الله، جاءنا بالبينات والهدى، فاجبنا وامنا واتبعنا، فيقال نم صالحا، فقد علمنا ان كنت لمومنا، واما المنافق او المرتاب لا ادري اى ذلك قالت اسماء فيقول لا ادري، سمعت الناس يقولون شييا فقلته
யஹ்யா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், “அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி அங்கத் தூய்மை செய்தார்கள் என்பதை எனக்கு நீங்கள் செய்து காட்ட முடியுமா?” எனக் கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ‘ஆம்’ (செய்துகாட்டுகிறேன்) என்று கூறித் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். அதைத் தம் இரு (முன்) கைகளிலும் ஊற்றி இரு முறை கழுவினார்கள். பின்னர் மூன்று முறை வாய் கொப்புளித்து, (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்கைச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தம் இரு கைகளையும் முழங்கைவரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். பின்னர் (ஈரக்) கைகளால் தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். (அதாவது) தம் இரு கைகளையும் (முன்)தலையில் வைத்து பின்னே கொண்டுசென்றார்கள். பிறகு பின் தலையில் வைத்து முன்னே கொண்டு வந்தார்கள். ஆரம்பமாக முன் தலையில் வைத்து அப்படியே அதைத் தமது பிடரிவரைக் கொண்டுசென்றபின் அப்படியே ஆரம்பித்த இடத்திற்கே திரும்பவும் கொண்டுசென்றார்கள். பிறகு இரு கால்களையும் கழுவினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن عمرو بن يحيى المازني، عن ابيه، ان رجلا، قال لعبد الله بن زيد وهو جد عمرو بن يحيى اتستطيع ان تريني، كيف كان رسول الله صلى الله عليه وسلم يتوضا فقال عبد الله بن زيد نعم. فدعا بماء، فافرغ على يديه فغسل يده مرتين، ثم مضمض واستنثر ثلاثا، ثم غسل وجهه ثلاثا، ثم غسل يديه مرتين مرتين الى المرفقين، ثم مسح راسه بيديه، فاقبل بهما وادبر، بدا بمقدم راسه، حتى ذهب بهما الى قفاه، ثم ردهما الى المكان الذي بدا منه، ثم غسل رجليه
யஹ்யா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அம்ர் பின் அபீஹசன் (ரஹ்) அவர் களுடன் (ஒரு நாள்) நான் இருந்தேன். அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை பற்றிக் கேட்டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ஒரு கல் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று அங்கத் தூய்மை செய்துகாட்டினார்கள்: (ஆரம்பமாக) பாத்திரத்திலிருந்த தண்ணீரைத் தமது கையில் ஊற்றி மூன்று முறை கைகளைக் கழுவினார்கள். பின்னர் தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை தண்ணீர் அள்ளி வாய்கொப்புளித்து மூக்கிற்குள் நீர் செலுத்திச் சிந்தினார்கள். மீண்டும் தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தம் இரு கைகளையும் முழங்கைவரை இரு முறை கழுவினார்கள். பின்னர் கையை (பாத்திரத்தில்) நுழைத்து (ஈரக் கையால்) தமது தலையைத் தடவினார்கள். (அதாவது) இரு கைகளையும் முன் தலையில் வைத்து பின்னால் கொண்டுசென்றார்கள். அப்படியே பின்னாலிருந்து முன் பகுதிக்கு (ஆரம்பித்த இடத்திற்கே) கொண்டுவந்தார்கள். இவ்வாறு ஒரு தடவை மட்டுமே செய்தார்கள் (மூன்று தடவை செய்யவில்லை). பின்னர் தம் கால்களை கணுக்கால்கள்வரை கழுவினார்கள். அத்தியாயம் :
حدثنا موسى، قال حدثنا وهيب، عن عمرو، عن ابيه، شهدت عمرو بن ابي حسن سال عبد الله بن زيد عن وضوء النبي، صلى الله عليه وسلم فدعا بتور من ماء، فتوضا لهم وضوء النبي صلى الله عليه وسلم فاكفا على يده من التور، فغسل يديه ثلاثا، ثم ادخل يده في التور، فمضمض واستنشق واستنثر ثلاث غرفات، ثم ادخل يده فغسل وجهه ثلاثا، ثم ادخل يده فغسل يديه مرتين الى المرفقين مرتين، ثم ادخل يده فمسح راسه، فاقبل بهما وادبر مرة واحدة، ثم غسل رجليه الى الكعبين
அபூஜுஹைஃபா (வஹ்ப் பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜின்போது ‘அப்தஹ்’ எனுமிடத் திலிருந்த கூடாரத்திலிருந்து) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் எங்களிடம் வந்தார்கள். அங்கத் தூய்மை செய்யத் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அதில் அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். அவர்கள் அங்கத் தூய்மை செய்த தண்ணீரின் மீதியைப் பெற்று மக்கள் தங்கள்மீது தடவிக் கொள்ளலாயினர். பின்னர் நபி (ஸல்) அவர்கள், தமக்குமுன் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடி ஒன்றை (தடுப்பாக) வைத்து, லுஹ்ரையும் அஸ்ரையும் இரண்டு இரண்டு ரக்அத் களாகத் தொழுதார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، قال حدثنا شعبة، قال حدثنا الحكم، قال سمعت ابا جحيفة، يقول خرج علينا رسول الله صلى الله عليه وسلم بالهاجرة، فاتي بوضوء فتوضا، فجعل الناس ياخذون من فضل وضويه فيتمسحون به، فصلى النبي صلى الله عليه وسلم الظهر ركعتين والعصر ركعتين، وبين يديه عنزة
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஜிஉரானா எனுமிடத்தில் நானும் பிலாலும் இருந்துகொண்டிருந்தபோது) நபி (ஸல்) அவர்கள், தண்ணீர் (குறைவாக இருந்த) குவளையைக் கொண்டுவரச் சொன்னார்கள். அதில் தம் இரு கைகளையும் தமது முகத்தையும் கழுவிவிட்டு, அதனுள் (தமது வாயிலிருந்த) தண்ணீரை உமிழ்ந்தார்கள். பிறகு எங்கள் இருவரிடமும், “இதிலிருந்து சிறிது பருகிவிட்டு, உங்கள் முகத்திலும் கழுத்திலும் ஊற்றிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
وقال ابو موسى دعا النبي صلى الله عليه وسلم بقدح فيه ماء، فغسل يديه ووجهه فيه، ومج فيه ثم قال لهما اشربا منه، وافرغا على وجوهكما ونحوركما
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது : தாம் (ஐந்து வயதுச்) சிறுவனாக இருந்தபோது, தமது வீட்டிலுள்ள கிணற்றி லிருந்து தண்ணீர் எடுத்து நபி (ஸல்) அவர்கள் (அங்கத் தூய்மை செய்துவிட்டு) அதைத் தமது முகத்தில் உமிழ்ந்ததாக என்னிடம் குறிப்பிட்ட மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்கள் (பின்வருமாறும்) கூறி னார்கள்: நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்யும்போது, அவர்கள் அங்கத் தூய்மை செய்துவிட்டு மீதி வைக்கின்ற தண்ணீரை எடுத்து (தங்கள் மேனியில் தேய்த்து)க் கொள்வதற்காக மக்கள் ஒருவரோ டொருவர் போட்டியிட்டுக்கொள்ளும் அளவுக்குச் சென்றுவிடுவார்கள். இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) மற்றும் (மர்வான் பின் ஹகம் எனும்) மற்றொருவரிடமிருந்து அறிவிக்கிறார்கள். இவ்விருவரில் ஒவ்வொருவரும் மற்றவர் சொன்னதை உறுதிப்படுத்தியும் உள்ளார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، قال حدثنا يعقوب بن ابراهيم بن سعد، قال حدثنا ابي، عن صالح، عن ابن شهاب، قال اخبرني محمود بن الربيع، قال وهو الذي مج رسول الله صلى الله عليه وسلم في وجهه وهو غلام من بيرهم. وقال عروة عن المسور وغيره يصدق كل واحد منهما صاحبه واذا توضا النبي صلى الله عليه وسلم كادوا يقتتلون على وضويه
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் சிறிய தாயார் என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச்சென்று, “அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி மகன் (இரு பாதங்களில்) நோய் கண்டுள்ளான்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பரிவுடன்) எனது தலையை வருடிக்கொடுத்து, எனது நலனுக்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். அவர்கள் அங்கத் தூய்மை செய்துவிட்டு மீதி வைத்த தண்ணீரில் சிறிதளவை நான் அருந்தி னேன். பிறகு நபி (ஸல்) அவர்களின் முதுகுக் குப் பின்னால் நின்று, அவர்களுடைய இரு தோள்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையை நான் பார்த்தேன். அது ஒரு மணவறைத் திரையில் பொருத் தப்படும் பித்தானைப் போன்றிருந்தது. அத்தியாயம் :
حدثنا عبد الرحمن بن يونس، قال حدثنا حاتم بن اسماعيل، عن الجعد، قال سمعت السايب بن يزيد، يقول ذهبت بي خالتي الى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله، ان ابن اختي وجع. فمسح راسي ودعا لي بالبركة، ثم توضا فشربت من وضويه، ثم قمت خلف ظهره، فنظرت الى خاتم النبوة بين كتفيه مثل زر الحجلة
யஹ்யா பின் உமாரா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் பாத்திரத்திலிருந்த தண்ணீரைத் தம்மிரு (முன்)கைகளிலும் ஊற்றிக் கழுவினார்கள். பிறகு ஒரே கைத் தண்ணீரை எடுத்து வாய் ‘கழுவி’ அல்லது ‘கொப்புளித்து’ மூக்கிற்கும் நீர் செலுத்தி (சுத்தம் செய்யலா)னார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். (பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள்.) பிறகு இரு கைகளையும் முழங்கைவரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். (ஈரக் கையால் முன்னிருந்து பின்னாக, பின்னிருந்து முன்னாக) முன்தலையையும் பின்தலையையும் தடவி (மஸ்ஹு செய்யலா)னார்கள். மேலும், தம் இரு கால்களையும் கணுக்கால்கள்வரை கழுவினார்கள். பின்னர், “இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அங்கத் தூய்மை இருந்தது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا خالد بن عبد الله، قال حدثنا عمرو بن يحيى، عن ابيه، عن عبد الله بن زيد، انه افرغ من الاناء على يديه فغسلهما، ثم غسل او مضمض، واستنشق من كفة واحدة، ففعل ذلك ثلاثا، فغسل يديه الى المرفقين مرتين مرتين، ومسح براسه ما اقبل وما ادبر، وغسل رجليه الى الكعبين، ثم قال هكذا وضوء رسول الله صلى الله عليه وسلم
யஹ்யா பின் உமாரா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அம்ர் பின் அபீஹசன் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை பற்றிக் கேட்டார்கள். அங்கு நானும் இருந்தேன். அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, அவர்களுக்கு அங்கத் தூய்மை செய்துகாட்டினார்கள். (ஆரம்பமாகப் பாத்திரத்திலிருந்த தண்ணீரைத்) தம்மிரு கைகளில் ஊற்றி இரு (முன்)கைகளையும் மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது கையைப் பாத்திரத்திற்குள் நுழைத்து மூன்று முறை தண்ணீர் அள்ளி மூன்று முறை வாய் கொப்புளித்து (மூக்கிற்குள் நீர் செலுத்தி சுத்தப்படுத்தி) மூக்கைச் சிந்தினார்கள். பிறகு தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவி னார்கள். பிறகு தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து (தண்ணீர் அள்ளி) இரு கைகளையும் முழங்கைவரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். பிறகு பாத்திரத்திற்குள் தமது கையை நுழைத்து (ஈரக் கையால்) தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்யலா)னார்கள். அதாவது தமது இரு கைகளையும் முன்னிருந்து பின்னாக, பின்னிருந்து முன்னாகக் கொண்டுவந்தார்கள். பிறகு பாத்திரத்திற்குள் தமது கையை நுழைத்து (தண்ணீர் அள்ளி) தம்முடைய இரு கால்களையும் கழுவினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், உஹைப் பின் காலித் (ரஹ்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் தமது தலையை (ஒரே) ஒரு தடவை மட்டுமே (ஈரக் கையால்) தடவினார்கள்” என்று அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، قال حدثنا وهيب، قال حدثنا عمرو بن يحيى، عن ابيه، قال شهدت عمرو بن ابي حسن سال عبد الله بن زيد عن وضوء النبي، صلى الله عليه وسلم فدعا بتور من ماء، فتوضا لهم، فكفا على يديه فغسلهما ثلاثا، ثم ادخل يده في الاناء، فمضمض واستنشق، واستنثر ثلاثا بثلاث غرفات من ماء، ثم ادخل يده في الاناء، فغسل وجهه ثلاثا، ثم ادخل يده في الاناء، فغسل يديه الى المرفقين مرتين مرتين، ثم ادخل يده في الاناء، فمسح براسه فاقبل بيديه وادبر بهما، ثم ادخل يده في الاناء فغسل رجليه. وحدثنا موسى قال حدثنا وهيب قال مسح راسه مرة
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் (பர்தாவின் சட்டம் அருளப்படுவதற்குமுன்) ஆண்களும் பெண்களும் சேர்ந்தே (ஓரிடத்தில்) அங்கத் தூய்மை செய்வார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن نافع، عن عبد الله بن عمر، انه قال كان الرجال والنساء يتوضيون في زمان رسول الله صلى الله عليه وسلم جميعا
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (என் பனூசலிமா குலத்தாரிடையே) நோயுற்று சுய நினைவில்லாமல் இருந்தபோது, என்னை நலம் விசாரிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்கள் (தண்ணீர் கொண்டுவரச் சொல்லி) அங்கத் தூய்மை செய்து விட்டு, தாம் அங்கத் தூய்மை செய்த தண்ணீரில் சிறிதளவை என்மீது ஊற்றினார்கள். நான் உணர்வு பெற்று, “அல்லாஹ்வின் தூதரே! என் சொத்துக்கு யார் வாரிசு? என் சொத்துக்கு என் (மூல வாரிசுகளோ கிளை வாரிசுகளோ இல்லாமல்) சகோதரர்கள் மட்டுமே வாரிசாக ஆகும் (‘கலாலா’) நிலையில் நான் உள்ளேனே?” என்று கேட்டேன். அப்போதுதான் பாகப் பிரிவினை தொடர்பான (4:176ஆவது) வசனம் அருளப்பெற்றது. அத்தியாயம் :
حدثنا ابو الوليد، قال حدثنا شعبة، عن محمد بن المنكدر، قال سمعت جابرا، يقول جاء رسول الله صلى الله عليه وسلم يعودني، وانا مريض لا اعقل، فتوضا وصب على من وضويه، فعقلت فقلت يا رسول الله لمن الميراث انما يرثني كلالة. فنزلت اية الفرايض