ஹதீஸ்கள்
#187
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
அபூஜுஹைஃபா (வஹ்ப் பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜின்போது ‘அப்தஹ்’ எனுமிடத் திலிருந்த கூடாரத்திலிருந்து) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் எங்களிடம் வந்தார்கள். அங்கத் தூய்மை செய்யத் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அதில் அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். அவர்கள் அங்கத் தூய்மை செய்த தண்ணீரின் மீதியைப் பெற்று மக்கள் தங்கள்மீது தடவிக் கொள்ளலாயினர். பின்னர் நபி (ஸல்) அவர்கள், தமக்குமுன் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடி ஒன்றை (தடுப்பாக) வைத்து, லுஹ்ரையும் அஸ்ரையும் இரண்டு இரண்டு ரக்அத் களாகத் தொழுதார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #187
- Book Index
- 53
Grades
- -