ஹதீஸ்கள்
#194
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (என் பனூசலிமா குலத்தாரிடையே) நோயுற்று சுய நினைவில்லாமல் இருந்தபோது, என்னை நலம் விசாரிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்கள் (தண்ணீர் கொண்டுவரச் சொல்லி) அங்கத் தூய்மை செய்து விட்டு, தாம் அங்கத் தூய்மை செய்த தண்ணீரில் சிறிதளவை என்மீது ஊற்றினார்கள். நான் உணர்வு பெற்று, “அல்லாஹ்வின் தூதரே! என் சொத்துக்கு யார் வாரிசு? என் சொத்துக்கு என் (மூல வாரிசுகளோ கிளை வாரிசுகளோ இல்லாமல்) சகோதரர்கள் மட்டுமே வாரிசாக ஆகும் (‘கலாலா’) நிலையில் நான் உள்ளேனே?” என்று கேட்டேன். அப்போதுதான் பாகப் பிரிவினை தொடர்பான (4:176ஆவது) வசனம் அருளப்பெற்றது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #194
- Book Index
- 60
Grades
- -