ஹதீஸ்கள்
#182
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் தமது (இயற்கைத்) தேவைக்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். (அவர்கள் திரும்பி வந்தபோது) அவர்களின் (கை கால்கள்)மீது நான் தண்ணீர் ஊற்றலானேன். அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். அப்போது அவர்கள் தமது முகத்தையும் இரு கைகளையும் கழுவினார்கள். ஈரக்கையால் தலையைத் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். ஈரக்கையால் காலுறைகள்மீது தடவினார்கள் (காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவவில்லை). அத்தியாயம் :
حدثنا عمرو بن علي، قال حدثنا عبد الوهاب، قال سمعت يحيى بن سعيد، قال اخبرني سعد بن ابراهيم، ان نافع بن جبير بن مطعم، اخبره انه، سمع عروة بن المغيرة بن شعبة، يحدث عن المغيرة بن شعبة، انه كان مع رسول الله صلى الله عليه وسلم في سفر، وانه ذهب لحاجة له، وان مغيرة جعل يصب الماء عليه، وهو يتوضا، فغسل وجهه ويديه ومسح براسه ومسح على الخفين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #182
- Book Index
- 48
Grades
- -
