Loading...

Loading...
நூல்கள்
௧௧௩ ஹதீஸ்கள்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்றபோது, அவர்களைப் பின் தொடர்ந்து நானும் சென்றேன். அவர்கள் திரும்பிப் பார்க்காமலேயே சென்றார்கள். அவர்கள் அருகில் நான் சென்றபோது, “நான் (இயற்கைக் கடனை முடித்தபின்) சுத்தம் செய்வதற்காக எனக்குச் சில கற்களை(த் தேடி எடுத்து)வாரீர். எலும்பையோ கெட்டிச் சாணத்தையோ கொண்டு வந்துவிடாதீர்” என்று சொன்னார்கள். நான் (கற்களைப் பொறுக்கியெடுத்து) எனது ஆடையின் ஓரத்தில் போட்டுக் கொண்டுவந்து நபி (ஸல்) அவர்கள் பக்கத்தில் வைத்துவிட்டு, அங்கிருந்து திரும்பிவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் (இயற்கைக் கடனை முடித்துவிட்டு) அக்கற்களால் சுத்தம் செய்துகொண்டார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن محمد المكي، قال حدثنا عمرو بن يحيى بن سعيد بن عمرو المكي، عن جده، عن ابي هريرة، قال اتبعت النبي صلى الله عليه وسلم وخرج لحاجته، فكان لا يلتفت فدنوت منه فقال " ابغني احجارا استنفض بها او نحوه ولا تاتني بعظم ولا روث ". فاتيته باحجار بطرف ثيابي فوضعتها الى جنبه واعرضت عنه، فلما قضى اتبعه بهن
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றபோது, தமக்காக மூன்று கற்களைக் கொண்டுவருமாறு என்னைப் பணித்தார் கள். (நான் தேடிப் பார்த்தபோது) இரண்டு கற்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றேன். மூன்றாவது கல்லைத் தேடிப் பார்த்தேன்; கிடைக்கவில்லை. கெட்டிச் சாணத்தை எடுத்துக்கொண்டு அவர்களிடம் வந்தேன். நபியவர்கள் கற்களைப் பெற்றுக் கொண்டு, சாணத்தை எறிந்துவிட்டு, “இது அசுத்தமானது” எனக் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو نعيم، قال حدثنا زهير، عن ابي اسحاق، قال ليس ابو عبيدة ذكره ولكن عبد الرحمن بن الاسود عن ابيه، انه سمع عبد الله، يقول اتى النبي صلى الله عليه وسلم الغايط، فامرني ان اتيه بثلاثة احجار، فوجدت حجرين، والتمست الثالث فلم اجده، فاخذت روثة، فاتيته بها، فاخذ الحجرين والقى الروثة وقال " هذا ركس ". وقال ابراهيم بن يوسف عن ابيه عن ابي اسحاق حدثني عبد الرحمن
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒவ்வோர் உறுப்பையும்) தலா ஒரு முறை கழுவி அங்கத் தூய்மை செய்தார்கள்.14 அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، قال حدثنا سفيان، عن زيد بن اسلم، عن عطاء بن يسار، عن ابن عباس، قال توضا النبي صلى الله عليه وسلم مرة مرة
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒவ்வோர் உறுப்பையும்) தலா இரண்டு முறை கழுவி அங்கத் தூய்மை செய்தார்கள். அத்தியாயம் :
حدثنا حسين بن عيسى، قال حدثنا يونس بن محمد، قال حدثنا فليح بن سليمان، عن عبد الله بن ابي بكر بن عمرو بن حزم، عن عباد بن تميم، عن عبد الله بن زيد، ان النبي صلى الله عليه وسلم توضا مرتين مرتين
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்லி (அங்கத் தூய்மை செய்தார்கள். ஆரம்பமாக) தம் இரு முன் கைகளில் மூன்று முறை (தண்ணீர்) ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தைப் பாத்திரத்திற்குள் நுழைத்து, (தண்ணீர் அள்ளி) வாய்க் கொப்புளித்து, (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தி னார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். (பிறகு) தம் இரு கைகளையும் முழங்கைவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை ஈரக் கையால் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். பின்னர் தம் இரு கால்களையும் கணுக்கால்வரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் “யார் எனது (இந்த) அங்கத் தூய்மையைப் போன்று அங்கத் தூய்மை செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் உள்ளத்தில் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவருடைய முன்பாவங்கள் மன்னிக்கப் படும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸ்மான் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله الاويسي، قال حدثني ابراهيم بن سعد، عن ابن شهاب، ان عطاء بن يزيد، اخبره ان حمران مولى عثمان اخبره انه، راى عثمان بن عفان دعا باناء، فافرغ على كفيه ثلاث مرار فغسلهما، ثم ادخل يمينه في الاناء فمضمض، واستنشق، ثم غسل وجهه ثلاثا، ويديه الى المرفقين ثلاث مرار، ثم مسح براسه، ثم غسل رجليه ثلاث مرار الى الكعبين، ثم قال قال رسول الله صلى الله عليه وسلم " من توضا نحو وضويي هذا، ثم صلى ركعتين، لا يحدث فيهما نفسه، غفر له ما تقدم من ذنبه
ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள், அங்கத் தூய்மை செய்தபோது (எங்களைப் பார்த்து), “நான் ஒரு நபிமொழியை உங்களுக்குச் சொல்லட்டுமா? (குர்ஆனின்) ஒரு வசனம் மட்டும் இல்லையானால், அதை நான் உங்களுக்குச் சொல்லியிருக்கமாட்டேன்” என்று சொல்லிவிட்டு, “ஒரு மனிதர் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, (கடமையான ஒரு) தொழுகையை நிறைவேற்றுவாராயின், அவர் (அடுத்த வேளைத் தொழுகையை) தொழுது முடிக்கும்வரை அவருக்கும் அந்த (இரண்டாம் வேளைத்) தொழுகைக்கும் இடையில் ஏற்பட்ட (சிறு) பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன் என்றார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “நாம் அருளிய சான்றுகளையும் நல்வழியையும் வேதத்தில் நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்திய பிறகும் அவற்றை மறைப்பவர்களை அல்லாஹ் சபிக்கின்றான்; சபிப்போரும் அவர்களைச் சபிக்கின்றனர்” (2:159) எனும் வசனமே (உஸ்மான் (ரலி) அவர்கள் குறிப்பிட்ட) அந்த வசனமாகும். அத்தியாயம் :
وعن ابراهيم، قال قال صالح بن كيسان قال ابن شهاب ولكن عروة يحدث عن حمران،، فلما توضا عثمان قال الا احدثكم حديثا لولا اية ما حدثتكموه، سمعت النبي صلى الله عليه وسلم يقول " لا يتوضا رجل فيحسن وضوءه، ويصلي الصلاة الا غفر له ما بينه وبين الصلاة حتى يصليها ". قال عروة الاية {ان الذين يكتمون ما انزلنا من البينات}
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அங்கத் தூய்மை செய்கிறாரோ அவர் மூக்கிற்கு நீர் செலுத்திச் சிந்தட்டும்; மலஜலம் கழித்துவிட்டுக் கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப்படையாகச் செய்யட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبدان، قال اخبرنا عبد الله، قال اخبرنا يونس، عن الزهري، قال اخبرني ابو ادريس، انه سمع ابا هريرة، عن النبي صلى الله عليه وسلم انه قال " من توضا فليستنثر، ومن استجمر فليوتر
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் அங்கத் தூய்மை செய்தால் தமது மூக்கிற்கு நீர் செலுத்தி (மூக்கை)ச் சிந்தட்டும். மலஜலம் கழித்து விட்டுக் கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப்படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால், அவர் தாம் அங்கத் தூய்மை செய்யப்போகும் தண்ணீருக்குள் கையை நுழைப்பதற்கு முன்னால் கையைக் கழுவிக்கொள்ளட்டும். ஏனெனில், உங்களில் ஒருவர் இரவில் (உறங்கும் போது) தமது கை எங்கே இருந்தது என்பதை அறியமாட்டார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا توضا احدكم فليجعل في انفه ثم لينثر، ومن استجمر فليوتر، واذا استيقظ احدكم من نومه فليغسل يده قبل ان يدخلها في وضويه، فان احدكم لا يدري اين باتت يده
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் செய்த) ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் அஸ்ர் (தொழுகையின்) நேரத்தை அடைந்து விட்ட நிலையில் எங்களிடம் அவர்கள் வந்துசேர்ந்தார்கள். அப்போது நாங்கள் அங்கத் தூய்மை செய்துகொண்டிருந் தோம். (கால்களைக் கழுவாமல்) கால்களை ஈரக்கையால் தடவிக்கொண்டிருந்தோம். இதைக் கண்ணுற்ற நபி (ஸல்) அவர்கள் “(அங்கத் தூய்மையில் கழுவப்படாத) இத்தகைய குதிகால்களுக்கு நரகம்தான்” என்று இரண்டு அல்லது மூன்று தடவைகள் உரத்த குரலில் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا موسى، قال حدثنا ابو عوانة، عن ابي بشر، عن يوسف بن ماهك، عن عبد الله بن عمرو، قال تخلف النبي صلى الله عليه وسلم عنا في سفرة سافرناها، فادركنا وقد ارهقنا العصر، فجعلنا نتوضا ونمسح على ارجلنا، فنادى باعلى صوته " ويل للاعقاب من النار ". مرتين او ثلاثا
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, (தண்ணீர் வந்ததும்) தம் (முன்) கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தைப் பாத்திரத்திற் குள் நுழைத்து (தண்ணீர் அள்ளி) வாய்க் கொப்புளித்து, மூக்கிற்கு நீர் செலுத்தி மூக்கைச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். தம் இரு கைகளையும் முழங்கைவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை ஈரக் கையால் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். பிறகு ஒவ்வொரு காலையும் மூன்று முறை கழுவினார்கள். பிறகு “(இதோ!) நான் செய்த இந்த அங்கத் தூய்மையைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்யக் கண்டேன்” என்று கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘யார் என்னுடைய இந்த அங்கத் தூய்மையைப் போன்று அங்கத் தூய்மை செய்து, பின்னர் வேறு எந்த எண்ணங்களுக்கும் தமது உள்ளத் தில் இடம் தராமல், இரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்கு அவருடைய முன்பாவங்களை அல்லாஹ் மன்னிக்கி றான்’ என்று கூறினார்கள்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني عطاء بن يزيد، عن حمران، مولى عثمان بن عفان انه راى عثمان دعا بوضوء، فافرغ على يديه من انايه، فغسلهما ثلاث مرات، ثم ادخل يمينه في الوضوء، ثم تمضمض، واستنشق، واستنثر، ثم غسل وجهه ثلاثا ويديه الى المرفقين ثلاثا، ثم مسح براسه، ثم غسل كل رجل ثلاثا، ثم قال رايت النبي صلى الله عليه وسلم يتوضا نحو وضويي هذا وقال " من توضا نحو وضويي هذا ثم صلى ركعتين، لا يحدث فيهما نفسه، غفر الله له ما تقدم من ذنبه
முஹம்மத் பின் ஸியாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நீர் குவளையில் (தண்ணீர் அள்ளி) மக்கள் அங்கத் தூய்மை செய்துகொண்டி ருந்தபோது (அவ்வழியே) எங்களைக் கடந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் சென்றார் கள். அவர்கள் (எங்களைப் பார்த்து), “அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்யுங்கள். ஏனெனில், அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் ‘(அங்கத் தூய்மையில்) சரியாகக் கழுவப்படாத குதிகால்களுக்கு நரகம்தான்’ என்று கூறினார்கள்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا ادم بن ابي اياس، قال حدثنا شعبة، قال حدثنا محمد بن زياد، قال سمعت ابا هريرة وكان يمر بنا والناس يتوضيون من المطهرة قال اسبغوا الوضوء فان ابا القاسم صلى الله عليه وسلم قال " ويل للاعقاب من النار
உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! நீங்கள் நான்கு காரியங் களைச் செய்வதை நான் பார்க்கிறேன். உங்கள் நண்பர்க(ளான நபித்தோழர்க)ளில் வேறெவரும் அவற்றைச் செய்வதை நான் பார்க்கவில்லை” என்றேன். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “இப்னு ஜுரைஜ்! அவை யாவை?” என்று கேட்டார்கள். நான் சொன்னேன்: (கஅபாவைச் சுற்றிவரும்போது அதன் மூலைகளில்) ருக்னுல் யமானீ மற்றும் ஹஜருல் அஸ்வத் ஆகிய இரு மூலைகளை மட்டுமே நீங்கள் தொடுவதைக் கண்டேன். (மற்ற மூலைகளை நீங்கள் தொடுவதில்லை.) மேலும், முடி அகற்றப்பட்ட தோல் காலணிகளையே நீங்கள் அணிவதை நான் பார்க்கிறேன். நீங்கள் உங்கள் ஆடைக்கு மஞ்சள் நிறச் சாயமிடுவதையே நான் பார்க்கிறேன். மேலும், நீங்கள் மக்காவில் இருக்கும்போது மக்கள் (துல்ஹஜ்) பிறை கண்டவுடன் ‘இஹ்ராம்’ கட்டினாலும், நீங்கள் ‘இஹ்ராம்’ கட்டாமல் துல்ஹஜ் எட்டாம் நாள் (யவ்முத் தர்வியா)வரை இருப்பதைக் கண்டேன் (இவைதான் அந்த நான்கு விஷயங்கள்)”. அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: கஅபாவின் மூலைகளைப் பொறுத்தவரை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருக்னுல் யமானீ, ஹஜருல் அஸ்வத் ஆகிய இரு மூலைகளைத் தவிர வேறெதையும் தொடுவதை நான் கண்டதில்லை (ஆகவே, நானும் அப்படிச் செய்கிறேன்). முடி அகற்றப்பட்ட காலணிகளைப் பொறுத்த வரை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முடியில்லாத காலணிகளை அணிவதையும் அதனுடன் (காலைக் கழுவி) அங்கத் தூய்மை செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அதை அணிவதை விரும்புகிறேன். மஞ்சள் நிறத்தைப் பொறுத்தவரை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஆடைக்கு) அதன் மூலம் சாய மிடுவதை நான் பார்த்திருக்கிறேன். எனவே, அதைக் கொண்டு சாயமிடுவதை நான் விரும்புகிறேன். ‘இஹ்ராம்’ கட்டுவதைப் பொறுத்த வரையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனம் பயணத்திற்குத் தயாராகி நிற்கும் (துல்ஹஜ் எட்டாம் நாள்)வரை இஹ்ராம் கட்டுவதை நான் பார்த்ததில்லை (எனவேதான், நானும் எட்டாம் நாள் ‘இஹ்ராம்’ கட்டுகிறேன்). அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن سعيد المقبري، عن عبيد بن جريج، انه قال لعبد الله بن عمر يا ابا عبد الرحمن، رايتك تصنع اربعا لم ار احدا من اصحابك يصنعها. قال وما هي يا ابن جريج قال رايتك لا تمس من الاركان الا اليمانيين، ورايتك تلبس النعال السبتية، ورايتك تصبغ بالصفرة، ورايتك اذا كنت بمكة اهل الناس اذا راوا الهلال ولم تهل انت حتى كان يوم التروية. قال عبد الله اما الاركان فاني لم ار رسول الله صلى الله عليه وسلم يمس الا اليمانيين، واما النعال السبتية فاني رايت رسول الله صلى الله عليه وسلم يلبس النعل التي ليس فيها شعر ويتوضا فيها، فانا احب ان البسها، واما الصفرة فاني رايت رسول الله صلى الله عليه وسلم يصبغ بها، فانا احب ان اصبغ بها، واما الاهلال فاني لم ار رسول الله صلى الله عليه وسلم يهل حتى تنبعث به راحلته
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் மக(ள் ஸைனப் (ரலி) இறந்தபோது அவர்க)ளை நீராட்டுவது குறித்துப் பெண்களிடம் கூறுகையில், “அவருடைய வலப் பக்கத்தி லிருந்தும், அங்கத் தூய்மை செய்ய வேண்டிய உறுப்புக்களிலிருந்தும் (கழுவ) ஆரம்பியுங்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا اسماعيل، قال حدثنا خالد، عن حفصة بنت سيرين، عن ام عطية، قالت قال النبي صلى الله عليه وسلم لهن في غسل ابنته " ابدان بميامنها ومواضع الوضوء منها
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தாம் காலணி அணிந்துகொள்ளும்போதும் தலைவாரிக் கொள்ளும்போதும் சுத்தம் செய்யும் போதும் தம் அனைத்து வேலைகளிலும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.16 அத்தியாயம் :
حدثنا حفص بن عمر، قال حدثنا شعبة، قال اخبرني اشعث بن سليم، قال سمعت ابي، عن مسروق، عن عايشة، قالت كان النبي صلى الله عليه وسلم يعجبه التيمن في تنعله وترجله وطهوره وفي شانه كله
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அஸ்ர் தொழுகையின் நேரம் நெருங்கியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்தேன். மக்கள் அங்கத் தூய்மை செய்வதற்குத் தண்ணீரைத் தேடினார்கள். தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரத்தில் (சிறிது) தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பாத்திரத்தினுள் தமது கரத்தை வைத்து, அப்பாத்திரத்திலிருந்து அங்கத் தூய்மை செய்யுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விரல்களுக்குக் கீழேயிருந்து தண்ணீர் சுரப்பதை நான் கண்டேன். மக்களில் இறுதி ஆள்வரை அனைவரும் அங்கத் தூய்மை செய்து முடித்தார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن اسحاق بن عبد الله بن ابي طلحة، عن انس بن مالك، انه قال رايت رسول الله صلى الله عليه وسلم وحانت صلاة العصر، فالتمس الناس الوضوء فلم يجدوه، فاتي رسول الله صلى الله عليه وسلم بوضوء، فوضع رسول الله صلى الله عليه وسلم في ذلك الاناء يده، وامر الناس ان يتوضيوا منه. قال فرايت الماء ينبع من تحت اصابعه حتى توضيوا من عند اخرهم
முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபீதா (பின் அம்ர் அஸ்ஸல் மானீ-ரஹ்) அவர்களிடம், ‘அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து’ அல்லது ‘அனஸின் குடும்பத்தாரிடமிருந்து’ நாங்கள் பெற்ற நபி (ஸல்) அவர்களின் சில முடிகள் எங்களி டம் இருக்கின்றன என்று சொன்னேன். அதற்கு அபீதா (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் ஒரு முடி என்னிடம் இருப்பது உலகமும் அதில் உள்ளவற்றை யும்விட எனக்கு மிகவும் உவப்பான தாகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا مالك بن اسماعيل، قال حدثنا اسراييل، عن عاصم، عن ابن سيرين، قال قلت لعبيدة عندنا من شعر النبي صلى الله عليه وسلم اصبناه من قبل انس، او من قبل اهل انس فقال لان تكون عندي شعرة منه احب الى من الدنيا وما فيها
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில்) தமது தலைமுடியை மழித்த போது, அபூதல்ஹா (ரலி) அவர்களே முதன் முதலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முடிகளில் சிலவற்றை எடுத்து (பத்திரப்படுத்தி)க்கொண்டார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن عبد الرحيم، قال اخبرنا سعيد بن سليمان، قال حدثنا عباد، عن ابن عون، عن ابن سيرين، عن انس، ان رسول الله صلى الله عليه وسلم لما حلق راسه كان ابو طلحة اول من اخذ من شعره
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருடைய பாத்திரத் தில் நாய் (வாய்வைத்துக்) குடித்துவிடு மானால், அவர் அந்தப் பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، عن مالك، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، قال ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا شرب الكلب في اناء احدكم فليغسله سبعا
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒரு நாய் தாகத்தால் (தவித்து) ஈர மண்ணை (நக்கி) உண்டு கொண்டிருப்பதை ஒரு மனிதர் பார்த்தார். உடனே அவர் (தாம் அணிந்திருந்த தோல்) காலுறையை எடுத்து அதில் தண்ணீர் அள்ளிவந்து, அந்நாய் தாகம் தீரும்வரை கொடுத்தார். எனவே அல்லாஹ், அவரது நற்செயலைப் பாராட்டி (ஏற்று) அவரைச் சொர்க்கத்தில் அனுமதித்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق، اخبرنا عبد الصمد، حدثنا عبد الرحمن بن عبد الله بن دينار، سمعت ابي، عن ابي صالح، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم " ان رجلا راى كلبا ياكل الثرى من العطش، فاخذ الرجل خفه فجعل يغرف له به حتى ارواه، فشكر الله له فادخله الجنة
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில், (வெளியே) சிறுநீர் கழித்துவிட்டு, (மண்தரையாக இருந்த) பள்ளிவாசலுக்குள் நாய்கள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்தன. இதற்காக மக்கள் (பள்ளிவாசலில் தண்ணீர்) எதையும் தெளிப்பவர்களாக இருக்க வில்லை. அத்தியாயம் :
وقال احمد بن شبيب حدثنا ابي، عن يونس، عن ابن شهاب، قال حدثني حمزة بن عبد الله، عن ابيه، قال كانت الكلاب تبول وتقبل وتدبر في المسجد في زمان رسول الله صلى الله عليه وسلم فلم يكونوا يرشون شييا من ذلك