ஹதீஸ்கள்
#164
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, (தண்ணீர் வந்ததும்) தம் (முன்) கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தைப் பாத்திரத்திற் குள் நுழைத்து (தண்ணீர் அள்ளி) வாய்க் கொப்புளித்து, மூக்கிற்கு நீர் செலுத்தி மூக்கைச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். தம் இரு கைகளையும் முழங்கைவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை ஈரக் கையால் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். பிறகு ஒவ்வொரு காலையும் மூன்று முறை கழுவினார்கள். பிறகு “(இதோ!) நான் செய்த இந்த அங்கத் தூய்மையைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்யக் கண்டேன்” என்று கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘யார் என்னுடைய இந்த அங்கத் தூய்மையைப் போன்று அங்கத் தூய்மை செய்து, பின்னர் வேறு எந்த எண்ணங்களுக்கும் தமது உள்ளத் தில் இடம் தராமல், இரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்கு அவருடைய முன்பாவங்களை அல்லாஹ் மன்னிக்கி றான்’ என்று கூறினார்கள்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني عطاء بن يزيد، عن حمران، مولى عثمان بن عفان انه راى عثمان دعا بوضوء، فافرغ على يديه من انايه، فغسلهما ثلاث مرات، ثم ادخل يمينه في الوضوء، ثم تمضمض، واستنشق، واستنثر، ثم غسل وجهه ثلاثا ويديه الى المرفقين ثلاثا، ثم مسح براسه، ثم غسل كل رجل ثلاثا، ثم قال رايت النبي صلى الله عليه وسلم يتوضا نحو وضويي هذا وقال " من توضا نحو وضويي هذا ثم صلى ركعتين، لا يحدث فيهما نفسه، غفر الله له ما تقدم من ذنبه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #164
- Book Index
- 30
Grades
- -
