ஹதீஸ்கள்
#163
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் செய்த) ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் அஸ்ர் (தொழுகையின்) நேரத்தை அடைந்து விட்ட நிலையில் எங்களிடம் அவர்கள் வந்துசேர்ந்தார்கள். அப்போது நாங்கள் அங்கத் தூய்மை செய்துகொண்டிருந் தோம். (கால்களைக் கழுவாமல்) கால்களை ஈரக்கையால் தடவிக்கொண்டிருந்தோம். இதைக் கண்ணுற்ற நபி (ஸல்) அவர்கள் “(அங்கத் தூய்மையில் கழுவப்படாத) இத்தகைய குதிகால்களுக்கு நரகம்தான்” என்று இரண்டு அல்லது மூன்று தடவைகள் உரத்த குரலில் கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #163
- Book Index
- 29
Grades
- -