ஹதீஸ்கள்
#189
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது : தாம் (ஐந்து வயதுச்) சிறுவனாக இருந்தபோது, தமது வீட்டிலுள்ள கிணற்றி லிருந்து தண்ணீர் எடுத்து நபி (ஸல்) அவர்கள் (அங்கத் தூய்மை செய்துவிட்டு) அதைத் தமது முகத்தில் உமிழ்ந்ததாக என்னிடம் குறிப்பிட்ட மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்கள் (பின்வருமாறும்) கூறி னார்கள்: நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்யும்போது, அவர்கள் அங்கத் தூய்மை செய்துவிட்டு மீதி வைக்கின்ற தண்ணீரை எடுத்து (தங்கள் மேனியில் தேய்த்து)க் கொள்வதற்காக மக்கள் ஒருவரோ டொருவர் போட்டியிட்டுக்கொள்ளும் அளவுக்குச் சென்றுவிடுவார்கள். இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) மற்றும் (மர்வான் பின் ஹகம் எனும்) மற்றொருவரிடமிருந்து அறிவிக்கிறார்கள். இவ்விருவரில் ஒவ்வொருவரும் மற்றவர் சொன்னதை உறுதிப்படுத்தியும் உள்ளார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، قال حدثنا يعقوب بن ابراهيم بن سعد، قال حدثنا ابي، عن صالح، عن ابن شهاب، قال اخبرني محمود بن الربيع، قال وهو الذي مج رسول الله صلى الله عليه وسلم في وجهه وهو غلام من بيرهم. وقال عروة عن المسور وغيره يصدق كل واحد منهما صاحبه واذا توضا النبي صلى الله عليه وسلم كادوا يقتتلون على وضويه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #189
- Book Index
- 55
Grades
- -
