ஹதீஸ்கள்
#183
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் (ஒரு நாள்) இரவு தங்கினேன். நான் தலையணையின் அகலவாக்கில் (தலை வைத்துப்) படுத்துக்கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் வீட்டாரும் அதன் நீளவாக்கில் (தலைவைத்துப்) படுத்திருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை, அல்லது அதற்கு சற்று முன்புவரை, அல்லது சற்றுப் பின்புவரை உறங்கினார்கள். (பின்னர்) அவர்கள் விழித்தெழுந்து அமர்ந்து, தமது கரத்தால் தமது முகத்தில் தடவித் தூக்க(க் கலக்கத்)தைத் துடைக்கலானார்கள். பிறகு ‘ஆலு இம்ரான்’ அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள். பிறகு (கட்டித்) தொங்கவிடப்பட்டிருந்த ஒரு தண்ணீர் பையருகே சென்று (அதைச் சரித்து) அதிலிருந்து அங்கத் தூய்மை செய்தார்கள். தமது அங்கத் தூய்மையைச் செம்மையாகச் செய்து கொண்ட பின்னர் தொழுவதற்காக நின்றார்கள். நானும் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று (அங்கத் தூய்மை) செய்துவிட்டு அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் போய் நின்றேன். உடனே அவர்கள் தமது வலக் கரத்தை என் தலைமீது வைத்து, என் வலது காதைப் பிடித்துத் திருகி (தம் வலப் பக்கத்தில் இழுத்து) நிறுத்தினார்கள். அப்போது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக் அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள், மறுபடியும் இரண்டு ரக்அத்து கள், மேலும் இரண்டு ரக்அத்கள் தொழு தார்கள். பின்பு ‘வித்ர்’ தொழுதார்கள். பின்னர் தொழுகை அறிவிப்பாளர் (தொழுகை அறிவிப்புச் செய்துவிட்டுத் தம்மிடம்) வரும்வரை சாய்ந்து படுத்திருந் தார்கள். பிறகு (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுதுவிட்டு, (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று சுப்ஹு தொழு(வித்)தார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن مخرمة بن سليمان، عن كريب، مولى ابن عباس ان عبد الله بن عباس، اخبره انه، بات ليلة عند ميمونة زوج النبي صلى الله عليه وسلم وهي خالته فاضطجعت في عرض الوسادة، واضطجع رسول الله صلى الله عليه وسلم واهله في طولها، فنام رسول الله صلى الله عليه وسلم حتى اذا انتصف الليل، او قبله بقليل او بعده بقليل، استيقظ رسول الله صلى الله عليه وسلم فجلس يمسح النوم عن وجهه بيده، ثم قرا العشر الايات الخواتم من سورة ال عمران، ثم قام الى شن معلقة، فتوضا منها فاحسن وضوءه، ثم قام يصلي. قال ابن عباس فقمت فصنعت مثل ما صنع، ثم ذهبت، فقمت الى جنبه، فوضع يده اليمنى على راسي، واخذ باذني اليمنى، يفتلها، فصلى ركعتين، ثم ركعتين، ثم ركعتين، ثم ركعتين، ثم ركعتين، ثم ركعتين، ثم اوتر، ثم اضطجع، حتى اتاه الموذن، فقام، فصلى ركعتين خفيفتين، ثم خرج فصلى الصبح
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #183
- Book Index
- 49
Grades
- -
