ஹதீஸ்கள்
#181
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின்போது) ‘அரஃபா’ பெருவெளி யிலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு கணவாயை நோக்கிச் சென்று அங்கு இயற்கைக் கடனை நிறைவேற்றினார்கள். அப்போது நான் அவர்களுக்குத் தண்ணீர் ஊற்ற, அவர்கள் அங்கத் தூய்மை செய்யலானார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு, “தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா எனும் இடத்தில்) வருகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.22 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #181
- Book Index
- 47
Grades
- -