ஹதீஸ்கள்
#176
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
சயீத் அல்மக்புரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “ஓர் அடியார் (அங்கத் தூய்மை செய்து கூட்டுத்) தொழுகையை எதிர்பார்த்தபடி பள்ளிவாசலில் இருக்கும் நேரமெல்லாம் அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுகிறாôர்; அவருக்கு சிறு துடக்கு (ஹதஸ்) ஏற்படாத வரை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது அரபி மொழி (நன்கு) தெரியாத ஒருவர், “ஹதஸ் என்றால் என்ன, அபூஹுரைரா அவர்களே!?” என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “பின்துவாரத்திலிருந்து வெளியாகும் காற்று (சப்தம்)” என்று பதிலளித் தார்கள். அத்தியாயம் :
حدثنا ادم بن ابي اياس، قال حدثنا ابن ابي ذيب، عن سعيد المقبري، عن ابي هريرة، قال قال النبي صلى الله عليه وسلم " لا يزال العبد في صلاة ما كان في المسجد ينتظر الصلاة، ما لم يحدث ". فقال رجل اعجمي ما الحدث يا ابا هريرة قال الصوت. يعني الضرطة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #176
- Book Index
- 42
Grades
- -
