ஹதீஸ்கள்
#185
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
யஹ்யா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், “அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி அங்கத் தூய்மை செய்தார்கள் என்பதை எனக்கு நீங்கள் செய்து காட்ட முடியுமா?” எனக் கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ‘ஆம்’ (செய்துகாட்டுகிறேன்) என்று கூறித் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். அதைத் தம் இரு (முன்) கைகளிலும் ஊற்றி இரு முறை கழுவினார்கள். பின்னர் மூன்று முறை வாய் கொப்புளித்து, (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்கைச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தம் இரு கைகளையும் முழங்கைவரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். பின்னர் (ஈரக்) கைகளால் தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். (அதாவது) தம் இரு கைகளையும் (முன்)தலையில் வைத்து பின்னே கொண்டுசென்றார்கள். பிறகு பின் தலையில் வைத்து முன்னே கொண்டு வந்தார்கள். ஆரம்பமாக முன் தலையில் வைத்து அப்படியே அதைத் தமது பிடரிவரைக் கொண்டுசென்றபின் அப்படியே ஆரம்பித்த இடத்திற்கே திரும்பவும் கொண்டுசென்றார்கள். பிறகு இரு கால்களையும் கழுவினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن عمرو بن يحيى المازني، عن ابيه، ان رجلا، قال لعبد الله بن زيد وهو جد عمرو بن يحيى اتستطيع ان تريني، كيف كان رسول الله صلى الله عليه وسلم يتوضا فقال عبد الله بن زيد نعم. فدعا بماء، فافرغ على يديه فغسل يده مرتين، ثم مضمض واستنثر ثلاثا، ثم غسل وجهه ثلاثا، ثم غسل يديه مرتين مرتين الى المرفقين، ثم مسح راسه بيديه، فاقبل بهما وادبر، بدا بمقدم راسه، حتى ذهب بهما الى قفاه، ثم ردهما الى المكان الذي بدا منه، ثم غسل رجليه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #185
- Book Index
- 51
Grades
- -
