ஹதீஸ்கள்
#190
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் சிறிய தாயார் என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச்சென்று, “அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி மகன் (இரு பாதங்களில்) நோய் கண்டுள்ளான்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பரிவுடன்) எனது தலையை வருடிக்கொடுத்து, எனது நலனுக்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். அவர்கள் அங்கத் தூய்மை செய்துவிட்டு மீதி வைத்த தண்ணீரில் சிறிதளவை நான் அருந்தி னேன். பிறகு நபி (ஸல்) அவர்களின் முதுகுக் குப் பின்னால் நின்று, அவர்களுடைய இரு தோள்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையை நான் பார்த்தேன். அது ஒரு மணவறைத் திரையில் பொருத் தப்படும் பித்தானைப் போன்றிருந்தது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #190
- Book Index
- 56
Grades
- -