ஹதீஸ்கள்
#184
ஸஹீஹ் அல்-புகாரீ - Ablutions (Wudu')
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) சூரிய கிரகணம் எற்பட்டபோது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது மக்கள் நின்று தொழுதுகொண்டிருந்தனர். ஆயிஷா (ரலி) அவர்களும் நின்று தொழுதுகொண் டிருந்தார்கள். (தொழுகையிலிருந்த ஆயிஷா (ரலி) அவர்களிடம்) நான், “மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் (ஏதும் கூறாமல்) வானை நோக்கித் தமது கரத்தால் சைகை செய் தார்கள். (தொழுகையில் பேசக் கூடாது என்பதை உணர்த்துவதற்காக) ‘சுப்ஹானல் லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று கூறினார்கள். “இது (ஏதாவது) அடையாளமா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ‘ஆம்’ என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (அவர் களோடு நீண்ட நெடிய அத்தொழுகையில்) நின்றுகொண்டேன். எந்த அளவுக் கென்றால் (நீண்ட நேரம் நின்றதால்) எனக்குக் கிறக்கமே ஏற்பட்டுவிட்டது. (கிறக்கம் நீங்க) என் தலைமீது தண்ணீரை ஊற்றலானேன். தொழுது முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, பின்வருமாறு கூறினார்கள்: எனக்கு இதுவரை காட்டப்பட்டிராத அனைத்தையும் இந்த இடத்தில் (தொழுகையில் இருந்தபோது) கண்டேன். சொர்க்கம், நரகம் உட்பட (அனைத்தையும் கண்டேன்). மேலும், எனக்கு (வஹீ) அறிவிக்கப்பட்டது: நிச்சயமாக நீங்கள் உங்கள் மண்ணறைகளில் (கப்றில்) ‘தஜ்ஜால்’ என்பவனுடைய சோதனைக்கு ‘நிகரான’ அல்லது ‘நெருக்கமான’ அளவுக்குச் சோதிக்கப்படுவீர்கள். -இதன் அறிவிப்பாளரான பாத்திமா பின்த் அல்முன்திர் (ரஹ்) கூறுகிறார்: (நிகரான/நெருக்கமான) இவற்றில் எந்த வாசகத்தை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.- அப்போது (மண்ணறையிலிருக்கும்) உங்களில் ஒருவரிடம் (என்னைக் காட்டி), “இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?” என்று (வானவர்களால்) கேட்கப்படும். அதற்கு ‘இறைநம்பிக்கையாளரோ’ அல்லது ‘உறுதி கொண்டவரோ’ -இவற்றில் அஸ்மா (ரலி) அவர்கள் எதைச் சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.- “அவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆவார்கள். அவர்கள் எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நல்வழியை யும் கொண்டுவந்தார்கள். நாங்கள் (அவர் களது அழைப்பை) ஏற்றுப் பின்பற்றி னோம்” என்று பதிலளிப்பார். அப்போது கேள்வி கேட்ட (வான)வர் களின் தரப்பிலிருந்து “நல்லபடியாக நீர் உறங்குவீராக! நீர் (இந்த இறைத்தூதரை ஏற்ற நல்ல) நம்பிக்கையாளராய் இருந்தீர் என்று நாங்கள் அறிந்திருந்தோம்” என்று கூறப்படும். ‘நயவஞ்சகரோ’ அல்லது ‘சந்தேகப் பேர்வழியோ’ -இவற்றில் அஸ்மா (ரலி) அவர்கள் எதைச் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியவில்லை- “எனக்கு எதுவும் தெரியாது. மக்கள் எதையோ சொல்லக் கேட்டேன். அதையே நானும் சொன்னேன்” என்று கூறுவார்.23 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ablutions (Wudu')
- Hadith Index
- #184
- Book Index
- 50
Grades
- -