Loading...

Loading...
நூல்கள்
௫௨௫ ஹதீஸ்கள்
இப்னு உமர் (ரó) அவர்கள் கூறியதாவது: (மதீனா யூதர்களான பனுந்) நளீர் குலத்தாரும் (பனூ) குறைழா குலத்தாரும் (நபி (ஸல்) அவர்கள்மீது) போர் தொடுத்தனர். எனவே, பனுந் நளீர் குலத்தாரை நபி (ஸல்) அவர்கள் நாடு கடத்தினார்கள். (பனூ) குறைழா குலத்தார் (வருத்தம் தெரிவித்ததால் அவர்கள்)மீது கருணைகாட்டி (மன்னித்து) அவர்களை அங்கேயே (வசிக்க) விட்டுவிட்டார்கள். (ஆனால், பனூ) குறைழா குலத்தாரும் போர் தொடுத்தபோது அவர்களுடைய ஆண்களைக் கொலை செய்தார்கள். மேலும், அவர்களுடைய பெண்களையும் அவர்களுடைய குழந்தைகளையும், அவர்களுடைய உடைமைகளையும் முஸ்லிம்களுக்கு மத்தியில் (போர்ச் செல்வமாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களுடன் வந்து சேர்ந்துகொண்ட (பனூ குறைழா குலத்தார்) சிலருக்கு அவர்கள் பாதுகாப்பு வழங்கினார்கள். அந்தச் சிலர் முஸ்லிம்களாக மாறிவிட்டனர். அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களின் குலத்தாரான “பனூ கைனுகா' கூட்டத்தாரையும், பனூ ஹாரிஸா (குலத்தாரான) யூதர்களையும், மதீனா நகரத்தைச் சேர்ந்த யூதர்கள் அனைவரையும் (ஆக) மதீனாவிலிருந்த எல்லா யூதர்களையும் நாடு கடத்திவிட்டார்கள்.87 அத்தியாயம் :
حدثنا اسحاق بن نصر، حدثنا عبد الرزاق، اخبرنا ابن جريج، عن موسى بن عقبة، عن نافع، عن ابن عمر رضى الله عنهما قال حاربت النضير وقريظة، فاجلى بني النضير، واقر قريظة ومن عليهم، حتى حاربت قريظة فقتل رجالهم وقسم نساءهم واولادهم واموالهم بين المسلمين الا بعضهم لحقوا بالنبي صلى الله عليه وسلم فامنهم واسلموا، واجلى يهود المدينة كلهم بني قينقاع وهم رهط عبد الله بن سلام ويهود بني حارثة، وكل يهود المدينة
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “(குர்ஆனின் 59ஆவது அத்தியாயத்தின் பெயரை) “அல்ஹஷ்ர்' அத்தியாயம் எனக் குறிப்பிட்டேன். (அப்போது) அவர்கள் “அந்நளீர்' அத்தி யாயம் என்று கூறுங்கள் என்றார்கள்.88 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني الحسن بن مدرك، حدثنا يحيى بن حماد، اخبرنا ابو عوانة، عن ابي بشر، عن سعيد بن جبير، قال قلت لابن عباس سورة الحشر. قال قل سورة النضير. تابعه هشيم عن ابي بشر
அனஸ் பின் மாóக் (ரó) அவர்கள் கூறியதாவது: (பனூ) குறைழா, (பனுந்) நளீர் குலத்தாரை வெற்றி கொள்ளும்வரையில் (அன்சார்களில்) சிலர் நபி (ஸல்) அவர்க(ளின் செலவுக)ளுக்காகப் பேரீச்சமரங்களை (அன்பளிப்பாக)க் கொடுத்திருந்தார்கள். அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் அவற்றை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.89 அத்தியாயம் :
حدثنا عبد الله بن ابي الاسود، حدثنا معتمر، عن ابيه، سمعت انس بن مالك رضى الله عنه قال كان الرجل يجعل للنبي صلى الله عليه وسلم النخلات حتى افتتح قريظة والنضير، فكان بعد ذلك يرد عليهم
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தேசத் துரோகிகளும் கொடுஞ்செயல் புரிந்தவர்களுமான) பனுந் நளீர் குலத் தாரின் பேரீச்சமரங்களை (போர்க் கால நடவடிக்கையாக) எரித்துவிட்டார்கள். இன்னும் (சிலவற்றை) வெட்டிவிட்டார்கள்.90 அது “புவைரா' என்னும் இடமாகும்.91 எனவேதான், “நீங்கள் சில பேரீச்சமரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் நிற்கும்படி விட்டுவிட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன்தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்திவிடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்)” எனும் (59:5) இறைவசனம் அருளப்பெற்றது.92 அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا الليث، عن نافع، عن ابن عمر رضى الله عنهما قال حرق رسول الله صلى الله عليه وسلم نخل بني النضير وقطع وهى البويرة فنزلت {ما قطعتم من لينة او تركتموها قايمة على اصولها فباذن الله}
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பனுந் நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை (புவைரா எனுமிடத்தில்) எரித்தார்கள். இந்த (புவைரா) சம்பவம் குறித்தே (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் பின்வருமாறு பாடினார்கள்: புவைராவில்பற்றியது நெருப்பு;(கையாலாகாத குறைஷி)குலத்தாரானபனூ லுஅய் தலைவர்களுக்குஎளிதாகிப்போனது. அப்போது (முஸ்லிமாகாமல் இருந்த) அபூசுஃப்யான் பின் ஹாரிஸ், ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்கு (கவிதையிலேயே பின்வருமாறு) பதிலளித்தார்: அல்லாஹ்அச்செயலை நீடிக்கச்செய்யட்டும்!அதன்நாலா புறங்களிலும்அக்னிபற்றி எறியட்டும்! தெரியும் உனக்குபுவைராவிலிருந்துதொலைவில் இருப்பது யார்?நம்மிருவரின் ஊர்களில்சேதம் எதற்கு?93 அத்தியாயம் :
حدثني اسحاق، اخبرنا حبان، اخبرنا جويرية بن اسماء، عن نافع، عن ابن عمر رضى الله عنهما ان النبي صلى الله عليه وسلم حرق نخل بني النضير قال ولها يقول حسان بن ثابت وهان على سراة بني لوى حريق بالبويرة مستطير قال فاجابه ابو سفيان بن الحارث ادام الله ذلك من صنيع وحرق في نواحيها السعير ستعلم اينا منها بنزه وتعلم اى ارضينا تضير
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني مالك بن اوس بن الحدثان النصري، ان عمر بن الخطاب رضى الله عنه دعاه اذ جاءه حاجبه يرفا فقال هل لك في عثمان، وعبد الرحمن، والزبير وسعد يستاذنون فقال نعم، فادخلهم. فلبث قليلا، ثم جاء فقال هل لك في عباس وعلي يستاذنان قال نعم. فلما دخلا قال عباس يا امير المومنين، اقض بيني وبين هذا، وهما يختصمان في الذي افاء الله على رسوله صلى الله عليه وسلم من بني النضير، فاستب علي وعباس، فقال الرهط يا امير المومنين، اقض بينهما وارح احدهما من الاخر. فقال عمر اتيدوا، انشدكم بالله الذي باذنه تقوم السماء والارض، هل تعلمون ان رسول الله صلى الله عليه وسلم قال " لا نورث، ما تركنا صدقة ". يريد بذلك نفسه. قالوا قد قال ذلك. فاقبل عمر على عباس وعلي فقال انشدكما بالله هل تعلمان ان رسول الله صلى الله عليه وسلم قد قال ذلك قالا نعم. قال فاني احدثكم عن هذا الامر، ان الله سبحانه كان خص رسوله صلى الله عليه وسلم في هذا الفىء بشىء لم يعطه احدا غيره فقال جل ذكره {وما افاء الله على رسوله منهم فما اوجفتم عليه من خيل ولا ركاب} الى قوله {قدير} فكانت هذه خالصة لرسول الله صلى الله عليه وسلم، ثم والله ما احتازها دونكم، ولا استاثرها عليكم، لقد اعطاكموها وقسمها فيكم، حتى بقي هذا المال منها، فكان رسول الله صلى الله عليه وسلم ينفق على اهله نفقة سنتهم من هذا المال، ثم ياخذ ما بقي فيجعله مجعل مال الله، فعمل ذلك رسول الله صلى الله عليه وسلم حياته، ثم توفي النبي صلى الله عليه وسلم فقال ابو بكر فانا ولي رسول الله صلى الله عليه وسلم. فقبضه ابو بكر، فعمل فيه بما عمل به رسول الله صلى الله عليه وسلم وانتم حينيذ. فاقبل على علي وعباس وقال تذكران ان ابا بكر عمل فيه كما تقولان، والله يعلم انه فيه لصادق بار راشد تابع للحق ثم توفى الله ابا بكر فقلت انا ولي رسول الله صلى الله عليه وسلم وابي بكر. فقبضته سنتين من امارتي اعمل فيه بما عمل رسول الله صلى الله عليه وسلم وابو بكر، والله يعلم اني فيه صادق بار راشد تابع للحق، ثم جيتماني كلاكما وكلمتكما واحدة وامركما جميع، فجيتني يعني عباسا فقلت لكما ان رسول الله صلى الله عليه وسلم قال " لا نورث، ما تركنا صدقة ". فلما بدا لي ان ادفعه اليكما قلت ان شيتما دفعته اليكما على ان عليكما عهد الله وميثاقه لتعملان فيه بما عمل فيه رسول الله صلى الله عليه وسلم وابو بكر، وما عملت فيه مذ وليت، والا فلا تكلماني، فقلتما ادفعه الينا بذلك. فدفعته اليكما، افتلتمسان مني قضاء غير ذلك فوالله الذي باذنه تقوم السماء والارض لا اقضي فيه بقضاء غير ذلك حتى تقوم الساعة، فان عجزتما عنه، فادفعا الى فانا اكفيكماه. قال فحدثت هذا الحديث، عروة بن الزبير فقال صدق مالك بن اوس، انا سمعت عايشة رضى الله عنها زوج النبي صلى الله عليه وسلم تقول ارسل ازواج النبي صلى الله عليه وسلم عثمان الى ابي بكر يسالنه ثمنهن مما افاء الله على رسوله صلى الله عليه وسلم، فكنت انا اردهن، فقلت لهن الا تتقين الله، الم تعلمن ان النبي صلى الله عليه وسلم كان يقول " لا نورث، ما تركنا صدقة يريد بذلك نفسه انما ياكل ال محمد صلى الله عليه وسلم في هذا المال ". فانتهى ازواج النبي صلى الله عليه وسلم الى ما اخبرتهن. قال فكانت هذه الصدقة بيد علي، منعها علي عباسا فغلبه عليها، ثم كان بيد حسن بن علي، ثم بيد حسين بن علي، ثم بيد علي بن حسين وحسن بن حسن، كلاهما كانا يتداولانها، ثم بيد زيد بن حسن، وهى صدقة رسول الله صلى الله عليه وسلم حقا
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني مالك بن اوس بن الحدثان النصري، ان عمر بن الخطاب رضى الله عنه دعاه اذ جاءه حاجبه يرفا فقال هل لك في عثمان، وعبد الرحمن، والزبير وسعد يستاذنون فقال نعم، فادخلهم. فلبث قليلا، ثم جاء فقال هل لك في عباس وعلي يستاذنان قال نعم. فلما دخلا قال عباس يا امير المومنين، اقض بيني وبين هذا، وهما يختصمان في الذي افاء الله على رسوله صلى الله عليه وسلم من بني النضير، فاستب علي وعباس، فقال الرهط يا امير المومنين، اقض بينهما وارح احدهما من الاخر. فقال عمر اتيدوا، انشدكم بالله الذي باذنه تقوم السماء والارض، هل تعلمون ان رسول الله صلى الله عليه وسلم قال " لا نورث، ما تركنا صدقة ". يريد بذلك نفسه. قالوا قد قال ذلك. فاقبل عمر على عباس وعلي فقال انشدكما بالله هل تعلمان ان رسول الله صلى الله عليه وسلم قد قال ذلك قالا نعم. قال فاني احدثكم عن هذا الامر، ان الله سبحانه كان خص رسوله صلى الله عليه وسلم في هذا الفىء بشىء لم يعطه احدا غيره فقال جل ذكره {وما افاء الله على رسوله منهم فما اوجفتم عليه من خيل ولا ركاب} الى قوله {قدير} فكانت هذه خالصة لرسول الله صلى الله عليه وسلم، ثم والله ما احتازها دونكم، ولا استاثرها عليكم، لقد اعطاكموها وقسمها فيكم، حتى بقي هذا المال منها، فكان رسول الله صلى الله عليه وسلم ينفق على اهله نفقة سنتهم من هذا المال، ثم ياخذ ما بقي فيجعله مجعل مال الله، فعمل ذلك رسول الله صلى الله عليه وسلم حياته، ثم توفي النبي صلى الله عليه وسلم فقال ابو بكر فانا ولي رسول الله صلى الله عليه وسلم. فقبضه ابو بكر، فعمل فيه بما عمل به رسول الله صلى الله عليه وسلم وانتم حينيذ. فاقبل على علي وعباس وقال تذكران ان ابا بكر عمل فيه كما تقولان، والله يعلم انه فيه لصادق بار راشد تابع للحق ثم توفى الله ابا بكر فقلت انا ولي رسول الله صلى الله عليه وسلم وابي بكر. فقبضته سنتين من امارتي اعمل فيه بما عمل رسول الله صلى الله عليه وسلم وابو بكر، والله يعلم اني فيه صادق بار راشد تابع للحق، ثم جيتماني كلاكما وكلمتكما واحدة وامركما جميع، فجيتني يعني عباسا فقلت لكما ان رسول الله صلى الله عليه وسلم قال " لا نورث، ما تركنا صدقة ". فلما بدا لي ان ادفعه اليكما قلت ان شيتما دفعته اليكما على ان عليكما عهد الله وميثاقه لتعملان فيه بما عمل فيه رسول الله صلى الله عليه وسلم وابو بكر، وما عملت فيه مذ وليت، والا فلا تكلماني، فقلتما ادفعه الينا بذلك. فدفعته اليكما، افتلتمسان مني قضاء غير ذلك فوالله الذي باذنه تقوم السماء والارض لا اقضي فيه بقضاء غير ذلك حتى تقوم الساعة، فان عجزتما عنه، فادفعا الى فانا اكفيكماه. قال فحدثت هذا الحديث، عروة بن الزبير فقال صدق مالك بن اوس، انا سمعت عايشة رضى الله عنها زوج النبي صلى الله عليه وسلم تقول ارسل ازواج النبي صلى الله عليه وسلم عثمان الى ابي بكر يسالنه ثمنهن مما افاء الله على رسوله صلى الله عليه وسلم، فكنت انا اردهن، فقلت لهن الا تتقين الله، الم تعلمن ان النبي صلى الله عليه وسلم كان يقول " لا نورث، ما تركنا صدقة يريد بذلك نفسه انما ياكل ال محمد صلى الله عليه وسلم في هذا المال ". فانتهى ازواج النبي صلى الله عليه وسلم الى ما اخبرتهن. قال فكانت هذه الصدقة بيد علي، منعها علي عباسا فغلبه عليها، ثم كان بيد حسن بن علي، ثم بيد حسين بن علي، ثم بيد علي بن حسين وحسن بن حسن، كلاهما كانا يتداولانها، ثم بيد زيد بن حسن، وهى صدقة رسول الله صلى الله عليه وسلم حقا
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام، اخبرنا معمر، عن الزهري، عن عروة، عن عايشة، ان فاطمة عليها السلام والعباس اتيا ابا بكر يلتمسان ميراثهما، ارضه من فدك، وسهمه من خيبر. فقال ابو بكر سمعت النبي صلى الله عليه وسلم يقول " لا نورث، ما تركنا صدقة، انما ياكل ال محمد في هذا المال ". والله لقرابة رسول الله صلى الله عليه وسلم احب الى ان اصل من قرابتي
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام، اخبرنا معمر، عن الزهري، عن عروة، عن عايشة، ان فاطمة عليها السلام والعباس اتيا ابا بكر يلتمسان ميراثهما، ارضه من فدك، وسهمه من خيبر. فقال ابو بكر سمعت النبي صلى الله عليه وسلم يقول " لا نورث، ما تركنا صدقة، انما ياكل ال محمد في هذا المال ". والله لقرابة رسول الله صلى الله عليه وسلم احب الى ان اصل من قرابتي
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கஅப் பின் அல்அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாராயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்” என்று சொன்னார்கள். உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள்99 எழுந்து, “நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “ஆம்' என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், “நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறை கூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(சரி) சொல்' என்றார்கள். உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, “இந்த மனிதர் (முஹம்மத்-ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதாக) தர்மம் கேட்டார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்” என்று (நபி (ஸல்) அவர்களைக் குறை கூறி சலித்துக்கொள்ளும் விதத்தில்) கூறிவிட்டு, “உன்னிடத்தில் கடன் கேட்பதற்காக நான் வந்துள்ளேன்” என்றும் கூறினார்கள். கஅப் பின் அல்அஷ்ரஃப், “அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்” என்று கூறினான். (அதற்கு) முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள், “நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றிவிட்டோம். அவரது விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரைவிட்டு (விலகி)விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால்தான் அவருடன் இன்னும் இருந்துகொண்டிருக்கிறோம்)” என்று (சலிப்பாகப் பேசுவதுபோல்) கூறிவிட்டு, “நீ எங்களுக்கு ஒரு வஸ்க் அல்லது இரண்டு வஸ்க் (பேரீச்சம் பழம்) கடன் தர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்” என்று சொன்னார்கள். அப்போது கஅப் பின் அல்அஷ்ரஃப், “சரி! (நான் கடன் தரத் தயார்.) என்னிடம் (எதையேனும்) அடைமானம் வையுங்கள்” என்று கூறினான். அதற்கு அவர்கள், “நீ எதை விரும்புகிறாய் (கேள்)?” என்று கூறினர். கஅப் பின் அல்அஷ்ரஃப், “உங்கள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்” என்று சொன்னான். அவர்கள், “எங்கள் பெண்களை எப்படி அடைமானமாக உன்னிடம் தர முடியும்? நீயோ அரபிய ரிலேயே மிகவும் அழகானவன். (அடைமானம் வைத்துத்தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உனக்கு இல்லை)” என்று சொன்னார்கள். “(அப்படியானால்) உங்கள் ஆண் மக்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்” என்று கூறினான். அதற்கு அவர்கள், “எங்கள் ஆண் மக்களை உன்னிடம் எப்படி அடைமானம் வைப்பது? அவர்களில் ஒருவன் (கலந்துறவாடும்போது) ஏசப்பட்டால் அப்போது, “இவன் ஒரு வஸ்க் அல்லது இரண்டு வஸ்க்குகளுக்குப் பதிலாக அடைமானம் வைக்கப்பட்டவன்' என்றல்லவா ஏசப்படுவான்? இது எங்களுக்கு அவமானமாயிற்றே!எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்” என்று கூறினார்கள். (அவன் சம்மதிக்கவே) முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், அவனிடம் (பிறகு) வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள். (பிறகு) அவர்கள் தம்முடன் அபூநாயிலா (ரலி) அவர்கள் இருக்க, இரவு நேரத்தில் கஅபிடம் வந்தார்கள். -அபூநாயிலா (ரலி) அவர்கள், கஅப் பின் அல்அஷ்ரஃபிற்குப் பால்குடிச் சகோதரர் ஆவார்- அவர்களைத் தனது கோட்டைக்கு (வரச் சொல்லி) கஅப் பின் அல்அஷ்ரஃப் அழைத்தான். பிறகு அவர்களை நோக்கி அவனும் இறங்கிவந்தான். அப்போது கஅபின் மனைவி அவனிடம், “இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டாள். அதற்கு அவன், “அவர் (வேறு யாருமல்ல.) முஹம்மத் பின் மஸ்லமாவும் எனது (பால்குடிச்) சகோதரர் அபூநாயிலாவும்தான்” என்று பதிலளித்தான். அம்ர் அல்லாத மற்ற அறிவிப்பாளர்கள், “(முஹம்மத் பின் மஸ்லமாவுடன் வந்தவர்கள்) அபூஅப்ஸ் பின் ஜப்ர் (ரலி), ஹாரிஸ் பின் அவ்ஸ் (ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோர்தான்” என்று கூறினர். அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், “தம்முடன் இருவரிருக்க முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் வந்தார்கள்” என்று அறிவித்தார்கள். -அறிவிப்பாளர் அம்ர் (ரஹ்) அவர்கள் ஒருமுறை, “(முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் தம் சகாக்களை நோக்கி) “பிறகு அவனது தலையை உங்களையும் நான் நுகரச் செய்வேன்' என்று கூறினார்கள்” என்று அறிவித்தார்கள். -அம்ர் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றவர்களின் அறிவிப்பில், “என்னிடம் அரபுப் பெண்களிலேயே நறுமணம் மிக்கவளும், அரபுகளிலேயே முழுமை யானவளும் இருக்கிறாள்” என்று கஅப் பின் அல்அஷ்ரஃப் கூறினான் எனக் காணப்படுகிறது. அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்), “கஅப் பின் அல்அஷ்ரஃப் வந்தால் நான் அவனது (தலை) முடியைப் பற்றியிழுத்து அதை நுகர்வேன். அவனது தலையை எனது பிடியில் கொண்டுவந்துவிட்டேன் என்று நீங்கள் கண்டால் (அதைச் சைகையாக எடுத்துக்கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்) வெட்டிவிடுங்கள்” என்று (உபாயம்) கூறினார்கள். பிறகு கஅப் பின் அல்அஷ்ரஃப் (தன் ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டு நறுமணம் கமழ இறங்கிவந்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், “இன்றுபோல் நான் எந்த உயர்ந்த நறுமணத்தையும் (நுகர்ந்து) பார்த்ததில்லை” என்று சொன்னார்கள். மேலும், முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், “(கஅபை நோக்கி) உன் தலையை நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக்கிறாயா?” என்று கேட்டார்கள். அவன், “சரி (நுகர்ந்து பார்)” என்று கூறினான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள் அவனது தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் சகாக்களையும் நுகரச் சொன்னார்கள். “(மீண்டுமொரு முறை நுகர) என்னை அனுமதிக்கிறாயா?” என்று கேட்டார்கள். அவன், “சரி (அனுமதிக்கிறேன்)' என்று கூறினான். முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டுவந்தபோது, “பிடியுங்கள்' என்று கூறினார்கள். உடனே (அவர்களுடைய சகாக்கள்) அவனைக் கொன்றுவிட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர்.100 அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் பல தடவை இந்த ஹதீஸை எமக்கு அறிவித்தார்கள். ஆயினும், அப்போது அவர்கள் “ஒரு வஸ்க், இரண்டு வஸ்குகள் (அளவை)' சம்பந்தமாகக் கூறவில்லை. அன்னாரிடம் நான், “இந்த அறிவிப்பில் ஒரு வஸ்க், இரு வஸ்குகள் சம்பந்தமாக (ஏதேனும்) இடம்பெற்றுள்ளதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அதில் ஒரு வஸ்க், இரு வஸ்குகள் பற்றி இடம் பெற்றுள்ளது என எண்ணுகிறேன்” என்று பதிலளித்தார்கள்.- -(அறிவிப்பாளர் சுஃப்யான் (ரஹ்) கூறுகிறார்கள்:) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அல்லாத இன்னொருவரின் அறிவிப்பில், “குருதி சொட்டுவது போன்ற ஒரு சப்தத்தை நான் கேட்கிறேன்” என்று கஅபின் மனைவி (ஏதோ ஆபத்து நேரவிருப்பதை உணர்த்தும் விதத்தில்) கூற அவன், “அவர் என் சகோதரர் முஹம்மத் பின் மஸ்லமாவும், என் பால்குடிச் சகோதரர் அபூநாயிலாவும்தான். ஒரு கண்ணியவான் இரவு நேரத்தில் (ஈட்டி) எறிய அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவே செய்வான்” எனப் பதிலளித்ததாகவும் இடம்பெற்றுள்ளது. -முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் தம்முடன் இருந்த இரு மனிதர்களுடன் (கஅப் பின் அல் அஷ்ரஃபின் வீட்டுக்கு) உள்ளே நுழைந்தார்கள்- அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், “அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், அந்த இரு மனிதர்களின் பெயர்களையும் குறிப்பிட்டாரா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு சுஃப்யான் (ரஹ்) அவர்கள், “அவர்களில் சிலரின் பெயரை மட்டும் அம்ர் குறிப்பிட்டார். “இரண்டு மனிதர்கள் தம்முடனிருக்க முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) வந்தார்கள்' என்றே அம்ர் அறிவித்தார்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அன்சாரிகளில்) ஒரு குழுவினரை (யூதனான) அபூராஃபிஉ என்பவனிடம் அனுப்பினார்கள். அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்கள் (கோட்டைக் குள்ளிருந்த) அவனது வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து அவன் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவனைக் கொன்றுவிட்டார்கள்.103 அத்தியாயம் :
حدثني اسحاق بن نصر، حدثنا يحيى بن ادم، حدثنا ابن ابي زايدة، عن ابيه، عن ابي اسحاق، عن البراء بن عازب رضى الله عنهما قال بعث رسول الله صلى الله عليه وسلم رهطا الى ابي رافع فدخل عليه عبد الله بن عتيك بيته ليلا وهو نايم فقتله
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் சிலரை அபூராஃபிஉவிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்தார்கள். அபூராஃபிஉ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் புண்படுத்திவந்ததுடன், அவர்களுக்கெதிராக(ப் பகைவர்களுக்கு) உதவியும் செய்துவந்தான்.104 அவன் ஹிஜாஸ் பிரதேசத்திலிருந்த தனது கோட்டையில் இருந்தான். ஆகவே அன்சாரிகள் அந்தக் கோட்டையை நெருங்கினார்கள். அப்போது சூரியன் மறைந்துவிட்டிருந்தது. மக்கள் தங்கள் மேய்ச்சல் கால்நடைகளுடன் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்கள் தம் சகாக்களிடம், “நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள். நான் காவலனிடம் சென்று ஏதாவது தந்திரம் செய்து (கோட்டைக்கு) உள்ளே நுழைய முடியுமா என்று பார்த்துவருகிறேன்” என்று கூறினார். உடனே அவர் சென்று கோட்டை வாசலை நெருங்கினார். பிறகு, தமது ஆடையால் தம்மை மூடிக்கொண்டு இயற்கைக் கடனை நிறைவேற்றுவது போல் (கோட்டைக்கு வெளியே ஓரிடத்தில்) அமர்ந்துகொண்டார். (கோட்டைவாசி களான) மக்கள் (அனைவரும்) உள்ளே நுழைந்துவிட்டனர். அப்போது காவலன், “அல்லாஹ்வின் அடியானே! (கோட்டைக்கு) உள்ளே நுழைய விரும்பினால் நுழைந்துகொள். நான் வாசலை மூடப்போகிறேன்” என்றுகூறினான். உடனே நான் உள்ளே நுழைந்து (ஓரிடத்தில்) பதுங்கிக்கொண்டேன். மக்கள் (அனைவரும்) நுழைந்ததும் அவன் வாசலை மூடிவிட்டான். பிறகு சாவிகளை ஒரு கொழுவியில் (கொக்கி) தொங்கவிட்டான். நான் சாவிகளை நோக்கிச் சென்று அவற்றை எடுத்துக்கொண்டேன். பிறகு வாசலைத் திறந்தேன். அபூராஃபிஉவிடம் இராக்கதை சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது அவன் தனது மாடியறையில் இருந்தான். அவனுடைய இராக்கதை நண்பர்கள் அவனைப் பிரிந்து (விடைபெற்றுச்) சென்றபோது அவனை நோக்கி நான் (ஏணியில்) ஏறினேன். (கோட்டையின்) ஒவ்வொரு வாசலையும் திறக்கும்போதும் உள்ளிருந்து நான் தாழிட்டுக்கொண்டே சென்றேன். மக்கள் என்னை இனம் கண்டுகொண்டாலும் அபூராஃபிஉவை நான் கொன்றுவிடும்வரையில் அவர்கள் என்னை வந்தடையப் போவதில்லை” என்று நான் (என் மனத்திற்குள்) கூறிக்கொண்டேன். பிறகு அவனிடம் போய்ச்சேர்ந்தேன். அவன் இருட்டான ஓர் அறையில் தன் குடும்பத்தாருக்கிடையே இருந்தான். அந்த வீட்டில் அவன் எங்கே இருக்கிறான் என்பது எனக்குத் தெரியவில்லை. அப்போது நான், “அபூராஃபிஉவே!' என்று அழைத்தேன். அவன், “யார் அது?' என்று கேட்டான். குரல் வந்த திசையை நோக்கிக் குறிவைத்து வாளால் பதற்றத்துடன் ஒரு வெட்டு வெட்டினேன். (இருப்பினும், என் நோக்கம்) எதையும் நான் நிறைவேற்றி வி(ட்)ட(தாகக் கருத)வில்லை. அப்போது அவன் கூச்சலிட்டான். உடனே நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறிவிட்டேன். சிறிது நேரம் தாமதித்து மீண்டும் அவனிடம் வந்து, “அபூராஃபிஉவே! இது என்ன சத்தம்” என்று (அவனுக்கு உதவ வந்தவன்போல்) கேட்டேன். அதற்கு அவன், “உன் தாய்க்குக் கேடு நேரட்டும்! எவனோ ஒருவன் வீட்டில் (நுழைந்து) சற்றுமுன் என்னை வாளால் வெட்டினான்” என்று கூறினான். உடனே நான் ஆழப்பதியும்படி இன்னொரு வெட்டு வெட்டினேன். (அப்போதும்) அவனை நான் கொல்ல (முடிய)வில்லை. பிறகு வாள் முனையை அவன் வயிற்றில் வைத்து அழுத்தினேன். அது முதுகு வழியே வெளியேறியது. அப்போது நான் அவனைக் கொன்று விட்டேன் என்று அறிந்துகொண்டேன். பிறகு ஒவ்வொரு கதவாக எல்லாக் கதவுகளையும் திறந்துகொண்டே சென்று அவனது ஏணிப்படியை அடைந்தேன். (ஏணியில் இறங்கலானேன்.) தரைக்கு வந்து விட்டேன் என்று நினைத்துக்கொண்டு எனது காலை வைத்தேன். (ஆனால்,) நிலவு காயும் (அந்த) இரவில் நான் விழுந்துவிட்டேன். அப்போது எனது கால் உடைந்து விட்டது. உடனே நான் தலைப்பாகை(த் துணி)யால் அதற்குக் கட்டுப்போட்டேன். பிறகு நடந்து வந்து (கோட்டை) வாசலில் அமர்ந்துகொண்டேன். “நான் அவனைக்கொன்றுவிட்டேன் என்று (உறுதியாக) அறியும்வரையில் நான் இந்த இரவில் (இங்கிருந்து) நகரமாட்டேன்” என்று (எனக்குநானே) சொல்லிக்கொண்டேன். பிறகு, அதிகாலையில் சேவல் கூவியபோது மரணச் செய்தி அறிவிப்ப வன் கோட்டைச் சுவர்மீது நின்று, “ஹிஜாஸ்வாசிகளின் (பிரபல) வியாபாரி அபூராஃபிஉ இறந்துவிட்டார்” என்று அறிவிப்புச் செய்தான். உடனே நான் என் சகாக்களிடம் வந்து, “விரைவாகச் செல்லுங்கள். அபூராஃபிஉவை அல்லாஹ் கொன்றுவிட்டான்” என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்களை அடைந்து நடந்ததை அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது அவர்கள், “உனது காலை நீட்டு” என்று கூறினார்கள். நான் என் காலை நீட்டினேன். அதில் (தம் கரத்தால்) தடவிவிட்டார்கள். (எனது கால் குணமடைந்து) ஒருபோதும் நோய் காணாததுபோல் அது மாறிவிட்டது. அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூராஃபிஉவிடம் அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்களையும், அப்துல்லாஹ் பின் உத்பா (ரலி) அவர்களையும் அவர்களுடன் இன்னும் சிலரையும் அனுப்பிவைத்தார்கள். அவர்கள் சென்று கோட்டையை நெருங்கியபோது அவர்களை நோக்கி (தலைவர்) அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்கள், “நான் சென்று பார்த்து வரும்வரையில் நீங்கள் (இங்கேயே) இருங்கள்” என்று கூறினார்கள். தொடர்ந்து பின்வருமாறு கூறினார்கள்: அப்போது (கோட்டைவாசிகளுக்குத் தெரியாமல்) கோட்டைக்குள் நுழைவதற்காக நான் உபாயம் செய்தேன். அப்போது யூதர்களுடைய கழுதையொன்று காணாமற் போய்விட்டது. அதைத் தேடிய வண்ணம் தீப்பந்தத்துடன் அவர்கள் (கோட்டையிலிருந்து) வெளியேறினர். நான் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுவிடுவேனோ என்று அஞ்சினேன். நான் இயற்கைக் கடனை நிறைவேற்றுவது போல (எனது ஆடையால்) என் தலையையும் காலையும் மூடிக்கொண்டேன். பிறகு காவலன், “யார் (கோட்டைக்குள்) நுழைய விரும்புகிறார்களோ அவர்கள் நான் கதவை மூடுவதற்குமுன் நுழைந்து கொள்ளட்டும்” என்று கூறினான். உடனே நான் நுழைந்து கோட்டைவாசலுக்கு அருகிலிருந்த கழுதைத் தொழுவம் ஒன்றில் பதுங்கிக்கொண்டேன். அப்போது (யூத) மக்கள் அபூராஃபிஉவிடம் இரவுச் சாப்பாட்டை உண்டனர். பிறகு இரவின் ஒரு பகுதி முடியும் வரையில் (கதை) பேசிக்கொண்டிருந்தனர். பிறகு மக்கள் தத்தமது வீடுகளுக்குத் திரும்பினர். பின்னர் ஆரவாரங்கள் அடங்கி, எந்த அரவமும் கேட்காமலிருந்தபோது நான் (பதுங்கியிருந்த இடத்திலிருந்து) வெளியேறினேன். (கோட்டையின்) காவலன் மாடத்தில் கோட்டையின் சாவியை வைத்ததை நான் (பதுங்கிக்கொண்டிருந்தபோது) பார்த்திருந்தேன். அதை நான் எடுத்துக் கோட்டைக் கதவைத் திறந்தேன். நான் (என் மனத்திற்குள்) “மக்கள் என்னை இனம் கண்டுகொண்டால் நிதானமாக(த் தப்பி)ச் சென்றுவிட வேண்டும்' என்று சொல்லிக் கொண்டேன். பிறகு, அந்த மக்கள் தங்கியிருந்த அறைகளின் கதவுகளை வெளியிலிருந்து பூட்டினேன். பிறகு அபூராஃபிஉ (தங்கியிருந்த மாடியறை) நோக்கி ஏணி வழியாக ஏறினேன். அப்போது அவனது அறை இருள் சூழ்ந்திருந்தது. அதன் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. அந்த மனிதன் எங்கே (இருக்கிறான்) என்று என்னால் அறிய முடியவில்லை. உடனே நான், “அபூராஃபிஉவே!” என்று அழைத்தேன். அவன், “யார் அது?' என்று கேட்டான். உடனே நான் சப்தம் வந்த திசையைக் குறிவைத்து அவனை வெட்டினேன். அவன் கூச்சலிட்டான். அது (நான் நினைத்த) பலனைத் தரவில்லை. பிறகு அவனுக்கு நான் உதவி செய்வது போல, “அபூராஃபிஉவே! உனக்கு என்ன நேர்ந்தது?” என்று என் குரலை மாற்றிக்கொண்டு கேட்டேன். உடனே அவன், “உனக்கு நான் ஆச்சரியமாகத் தெரிகிறேனா? உன் தாய்க்குக் கேடு உண் டாகட்டும். என்னிடம் ஒருவன் வந்து வாளால் என்னை வெட்டினான்” என்று கூறினான். மீண்டும் (குரல் வந்த திசையைக்) குறிவைத்து அவனை நான் வெட்டினேன்.(நான் நினைத்தபடி) அப்போதும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மீண்டும் அவன் கூச்சலிட்டான். அவனுடைய வீட்டார் எழுந்துவிட்டனர். பிறகு அவனுக்கு உதவி செய்பவனைப் போன்று (பாசாங்கு செய்தபடி) குரலை மாற்றிக்கொண்டு (அவனுக்கு அருகில்) வந்தேன். அப்போது அவன் மல்லாந்து படுத்திருந்தான். உடனே (எனது) வாளை அவனது வயிற்றில் வைத்துச் செலுத்தினேன். அப்போது (அவனது) எலும்பின் (மீது என் வாள் குத்துகின்ற) சப்தத்தை நான் கேட்டேன். பிறகு பதறிக்கொண்டே (அவனது அறையிலிருந்து) வெளியேறி ஏணிப்படிக்கு வந்தேன். இறங்க விரும்பினேன். (ஆனால்,) அதிலிருந்து நான் விழுந்துவிட்டேன். எனது கால் முறிந்துவிட்டது. எனவே, நான் அதை (எனது தலைப்பாகைத் துணியால்) கட்டினேன். பிறகு (கோட்டைக்கு வெளியிலிருந்த) என் சகாக்களிடம் நொண்டிக்கொண்டே வந்து அவர்களை நோக்கி, “நீங்கள் (விரைவாகச்) சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (காரியம் முடிந்துவிட்ட) நற்செய்தியைச் சொல்லுங்கள். (மரணச் செய்தி அறிவிப்பவனிடமிருந்து அபூராஃபிஉவின் மரணச்) செய்தியை நான் கேட்கும்வரையில் நான் (இங்கிருந்து) நகரமாட்டேன்” என்று கூறினேன். பிறகு அதிகாலை நேரத்தில் மரணச் செய்தி அறிவிப்பவன் (கோட்டைச் சுவர் மீது) ஏறி, “அபூராஃபிஉ இறந்துவிட்டார்” என்று அறிவிப்புச் செய்தான். உடனே நான் எழுந்து நடக்கலானேன். (அளவு கடந்த மகிழ்ச்சியால்) எனக்கு வலிகூடத் தெரியவில்லை. என் சகாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று சேர்வதற்கு முன் நான் சகாக்களைச் சென்றடைந்துவிட்டேன். ஆதலால், நானே நபி (ஸல்) அவர்களிடம் (அந்த) நற்செய்தியைச் சொன்னேன்.105 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்கள், “இதோ, (வானவர்) ஜிப்ரீல் போர்த் தளவாடங்களுடன் தமது குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப்பிடித்துக்கொண்டிருக்கிறார்” என்று கூறி னார்கள்.107 அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا عبد الوهاب، حدثنا خالد، عن عكرمة، عن ابن عباس رضى الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم يوم احد " هذا جبريل اخذ براس فرسه عليه اداة الحرب
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உஹுத் போர் நடந்து) எட்டு ஆண்டுகளுக்குப்பின் உஹுதில் கொல்லப்பட்டவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். (அது) உயிரோடுள்ளவர்களிடமும் இறந்தவர் களிடமும் (மறுமைப் பயணத்திற்கு) விடைபெறுவது போலிருந்தது. பிறகு அவர்கள் சொற்பொழிவுமேடை (மிம்பர்)மீது ஏறி, “நிச்சயமாக நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். (என்னைச் சந்திக்க) உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் (அல்கவ்ஸர் எனும்) தடாகம் ஆகும். நான் இங்கிருந்தே (மறுமையில் எனக்குப் பரிசளிக்கப்படவுள்ள) அந்தத் தடாகத்தைக் காண்கிறேன். நிச்சயமாக! (எனது மரணத்துக்குப் பின்னால்) நீங்கள் இணைவைப்பாளர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை; ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவரோடொருவர் (போட்டியிட்டு) மோதிக்கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.108 நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்த இறுதிப் பார்வையாக அது அமைந்தது. அத்தியாயம் :
حدثنا محمد بن عبد الرحيم، اخبرنا زكرياء بن عدي، اخبرنا ابن المبارك، عن حيوة، عن يزيد بن ابي حبيب، عن ابي الخير، عن عقبة بن عامر، قال صلى رسول الله صلى الله عليه وسلم على قتلى احد بعد ثماني سنين، كالمودع للاحياء والاموات، ثم طلع المنبر فقال " اني بين ايديكم فرط، وانا عليكم شهيد، وان موعدكم الحوض، واني لانظر اليه من مقامي هذا، واني لست اخشى عليكم ان تشركوا، ولكني اخشى عليكم الدنيا ان تنافسوها ". قال فكانت اخر نظرة نظرتها الى رسول الله صلى الله عليه وسلم
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: இணைவைப்போரை அன்றைய (உஹுத் போர்) தினத்தில் நாங்கள் சந்தித்தோம். நபி (ஸல்) அவர்கள் (ஐம்பது) அம்பெய்யும் வீரர்களை (உஹுத் மலைக் கணவாயில்) அமர்த்தினார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்து, “(எதிரிகளான) அவர்களை நாங்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகராதீர்கள். எங்களை அவர்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகர வேண்டாம்; நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய (எண்ணி கீழே வர) வேண்டாம்” என்று கூறினார்கள். நாங்கள் அவர்களை (களத்தில்) சந்தித்தபோது அவர்கள் (தோல்வியுற்று) வெருண்டோடிவிட்டனர். பெண்களெல் லாம், (தம் கால்களில் அணிந்திருந்த) கால்தண்டைகள் வெளியில் தெரிய மலையில் ஓடிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அப்போது (அம்பெய்யும் குழுவினரான) அவர்கள், “(நமக்கே வெற்றி!) போர்ச் செல்வம்! போர்ச் செல்வம்! (சேகரிப்போம், வாருங்கள்)” என்று கூறலாயினர். அப்போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள் (தம் சகாக்களை நோக்கி), “என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “இந்த இடத்தைவிட்டு (எந்தச் சூழ்நிலையிலும்) நகராதீர்கள்' என அறுதியிட்டுக் கூறியுள்ளார்கள். (எனவே, போர்ச் செல்வங்களை எடுப்பதற்காக இங்கிருந்து நகர வேண்டாம்) என்று சொன்னார்கள். ஆனால், சகாக்கள் ஏற்க மறுத்துவிட்டனர். அவர்கள் மறுத்துவிடவே (எங்கு செல்கிறோம் என்று தெரியாதவாறு) திசைமாறிப் போயினர். (இறுதியில் முஸ்லிம்களில்) எழுபது பேர் கொல்லப்பட்டனர்.109 (அப்போது எதிரணித் தலைவர்) அபூசுஃப்யான் முன்வந்து, “(உங்கள்) கூட்டத்தில் முஹம்மத் இருக்கின்றாரா?” என்று (பலமுறை) கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவருக்குப் பதிலளிக்க வேண்டாம்” என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள். மீண்டும், “(உங்கள்) கூட்டத்தில் அபூகுஹாஃபாவின் மகன் (அபூபக்ர்) இருக்கிறாரா?” என்று கேட்டார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு நீங்கள் பதில் தர வேண்டாம்” என்று கூறிவிட்டார்கள். பிறகு, “கூட்டத்தில் கத்தாபின் மகன் (உமர்) இருக்கிறாரா?” என்று கேட்டுவிட்டு (பிறகு தம் தோழர்களின் பக்கம் திரும்பி), “இவர்களெல்லாரும் கொல்லப்பட்டுவிட்டனர்; இவர்கள் உயிருடன் இருந்தால் (என் அறை கூவலுக்குப்) பதிலளித்திருப்பார்கள்” என்று சொன்னார். (இதைக் கேட்டு) உமர் (ரலி) அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், “தவறாகச் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே! உனக்கு கவலை தரும் செய்தியைத்தான் உனக்காக அல்லாஹ் வைத்துள்ளான்” என்று பதிலடி கொடுத்தார்கள். அதற்கு அபூசுஃப்யான், “(கடவுள்) ஹுபலே! உன் கட்சி மேலோங்கிவிட்டது.” என்று கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள், “அவருக்குப் பதிலளியுங்கள்” என்று கூறினார்கள். “(அல்லாஹ்வின் தூதரே) நாங்கள் என்ன (பதில்) சொல்வது?” என்று மக்கள் கேட்டனர். “அல்லாஹ்வே மிகவும் உயர்ந்தவன்; மிகவும் மகத்துவமிக்கவன்” என்று கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அவ்வாறே பதில் தரப்பட்டது.) அபூசுஃப்யான், “எங்களுக்குத்தான் “உஸ்ஸா' (எனும் தெய்வம்) இருக்கின்றது; உங்களிடம் “உஸ்ஸா' இல்லையே” என்று கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள், “அவருக்குப் பதிலளியுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “நாங்கள் என்ன (பதில்) சொல்வது?” என்று வினவ நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் எங்களின் உதவியாளன்; உங்களுக்கு (அப்படியொரு) உதவியாளன் இல்லையே!” என்று சொல்லுங்கள் என்று பதிலளித்தார்கள். (அவ்வாறே முஸ்óம்கள் பதிலளித்தனர்.) “இந்த (உஹுதுடைய) நாள், பத்ர் போர் (நடந்த) நாளுக்குப் பதிலாகும். யுத்தம் என்பதே (கிணற்று) வாளிகள்தான். (மாறி மாறித்தான் இறைக்க முடியும். உங்கள் தோழர்களில்) அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள். அப்படிச் செய்யும்படி நான் கட்டளை யிடவுமில்லை. அது எனக்கு மனத் துன்பத்தை அளிக்கவும் செய்யாது” என்று அபூசுஃப்யான் கூறினார்.110 அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: இணைவைப்போரை அன்றைய (உஹுத் போர்) தினத்தில் நாங்கள் சந்தித்தோம். நபி (ஸல்) அவர்கள் (ஐம்பது) அம்பெய்யும் வீரர்களை (உஹுத் மலைக் கணவாயில்) அமர்த்தினார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்து, “(எதிரிகளான) அவர்களை நாங்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகராதீர்கள். எங்களை அவர்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகர வேண்டாம்; நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய (எண்ணி கீழே வர) வேண்டாம்” என்று கூறினார்கள். நாங்கள் அவர்களை (களத்தில்) சந்தித்தபோது அவர்கள் (தோல்வியுற்று) வெருண்டோடிவிட்டனர். பெண்களெல் லாம், (தம் கால்களில் அணிந்திருந்த) கால்தண்டைகள் வெளியில் தெரிய மலையில் ஓடிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அப்போது (அம்பெய்யும் குழுவினரான) அவர்கள், “(நமக்கே வெற்றி!) போர்ச் செல்வம்! போர்ச் செல்வம்! (சேகரிப்போம், வாருங்கள்)” என்று கூறலாயினர். அப்போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள் (தம் சகாக்களை நோக்கி), “என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “இந்த இடத்தைவிட்டு (எந்தச் சூழ்நிலையிலும்) நகராதீர்கள்' என அறுதியிட்டுக் கூறியுள்ளார்கள். (எனவே, போர்ச் செல்வங்களை எடுப்பதற்காக இங்கிருந்து நகர வேண்டாம்) என்று சொன்னார்கள். ஆனால், சகாக்கள் ஏற்க மறுத்துவிட்டனர். அவர்கள் மறுத்துவிடவே (எங்கு செல்கிறோம் என்று தெரியாதவாறு) திசைமாறிப் போயினர். (இறுதியில் முஸ்லிம்களில்) எழுபது பேர் கொல்லப்பட்டனர்.109 (அப்போது எதிரணித் தலைவர்) அபூசுஃப்யான் முன்வந்து, “(உங்கள்) கூட்டத்தில் முஹம்மத் இருக்கின்றாரா?” என்று (பலமுறை) கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவருக்குப் பதிலளிக்க வேண்டாம்” என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள். மீண்டும், “(உங்கள்) கூட்டத்தில் அபூகுஹாஃபாவின் மகன் (அபூபக்ர்) இருக்கிறாரா?” என்று கேட்டார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு நீங்கள் பதில் தர வேண்டாம்” என்று கூறிவிட்டார்கள். பிறகு, “கூட்டத்தில் கத்தாபின் மகன் (உமர்) இருக்கிறாரா?” என்று கேட்டுவிட்டு (பிறகு தம் தோழர்களின் பக்கம் திரும்பி), “இவர்களெல்லாரும் கொல்லப்பட்டுவிட்டனர்; இவர்கள் உயிருடன் இருந்தால் (என் அறை கூவலுக்குப்) பதிலளித்திருப்பார்கள்” என்று சொன்னார். (இதைக் கேட்டு) உமர் (ரலி) அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், “தவறாகச் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே! உனக்கு கவலை தரும் செய்தியைத்தான் உனக்காக அல்லாஹ் வைத்துள்ளான்” என்று பதிலடி கொடுத்தார்கள். அதற்கு அபூசுஃப்யான், “(கடவுள்) ஹுபலே! உன் கட்சி மேலோங்கிவிட்டது.” என்று கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள், “அவருக்குப் பதிலளியுங்கள்” என்று கூறினார்கள். “(அல்லாஹ்வின் தூதரே) நாங்கள் என்ன (பதில்) சொல்வது?” என்று மக்கள் கேட்டனர். “அல்லாஹ்வே மிகவும் உயர்ந்தவன்; மிகவும் மகத்துவமிக்கவன்” என்று கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அவ்வாறே பதில் தரப்பட்டது.) அபூசுஃப்யான், “எங்களுக்குத்தான் “உஸ்ஸா' (எனும் தெய்வம்) இருக்கின்றது; உங்களிடம் “உஸ்ஸா' இல்லையே” என்று கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள், “அவருக்குப் பதிலளியுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “நாங்கள் என்ன (பதில்) சொல்வது?” என்று வினவ நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் எங்களின் உதவியாளன்; உங்களுக்கு (அப்படியொரு) உதவியாளன் இல்லையே!” என்று சொல்லுங்கள் என்று பதிலளித்தார்கள். (அவ்வாறே முஸ்óம்கள் பதிலளித்தனர்.) “இந்த (உஹுதுடைய) நாள், பத்ர் போர் (நடந்த) நாளுக்குப் பதிலாகும். யுத்தம் என்பதே (கிணற்று) வாளிகள்தான். (மாறி மாறித்தான் இறைக்க முடியும். உங்கள் தோழர்களில்) அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள். அப்படிச் செய்யும்படி நான் கட்டளை யிடவுமில்லை. அது எனக்கு மனத் துன்பத்தை அளிக்கவும் செய்யாது” என்று அபூசுஃப்யான் கூறினார்.110 அத்தியாயம் :
இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் (அவர்கள் நோன்பை நிறைவு செய்யும் நேரத்தில்) உணவு கொண்டுவரப்பட்டது. (அன்று பகல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். அப்போது அவர்கள், “முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் (உஹுத் போரில்) கொல்லப்பட்டார்கள்- அவர் என்னைவிடச் சிறந்தவர்-அவர் ஒரு சால்வையால் கஃபனிடப்பட்டார். (அந்தச் சால்வையால்) அவரது தலை மூடப்பட்டால், அவருடைய இரு கால்கள் வெளியே தெரிந்தன. அவருடைய இரு கால்கள் (அதனால்) மூடப்பட்டால், தலை வெளியில் தெரிந்தது” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மேலும், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், (பின்வருமாறு) கூறியதாக நான் எண்ணுகிறேன்: ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் (உஹுத் போரில்) கொல்லப்பட்டார்கள். அவர் என்னைவிடச் சிறந்தவர். (அவரும் அதுபோலவே பற்றாக்குறை மிக்க சிறிய சால்வையாலேயே கஃபனிடப்பட்டார்) பிறகு (அந்த ஏழ்மை நிலை நம்மைவிட்டு நீங்கி, இதோ, நீங்கள் காண்கிறீர்களே) இந்த அளவுக்கு நமக்கு இந்த உலகின் வசதி வாய்ப்புகள் வழங்கப்பட்டன; அல்லது இந்த உலக(ச் செல்வ)த்திலிருந்து (இதோ, நீங்கள் காண்கின்றீர்களே) இந்த அளவுக்கு நமக்குத் தரப்பட்டது. நாங்கள் புரிந்த நல்லறங்களுக்குப் பிரதிபலன் மிக விரைவாக (இவ்வுலகிலேயே) நமக்குக் கொடுக்கப்பட்டுவிட்டதோ என்று நாம் அஞ்சுகிறோம்” என்று கூறினார்கள். பிறகு (தமக்காகக் கொண்டுவரப்பட்ட) உணவை (உண்ணாமல் அப்படியே) விட்டுவிட்டு அழலானார்கள்.112 அத்தியாயம் :
حدثنا عبدان، حدثنا عبد الله، اخبرنا شعبة، عن سعد بن ابراهيم، عن ابيه، ابراهيم ان عبد الرحمن بن عوف، اتي بطعام، وكان صايما فقال قتل مصعب بن عمير، وهو خير مني، كفن في بردة، ان غطي راسه بدت رجلاه، وان غطي رجلاه بدا راسه واراه قال وقتل حمزة وهو خير مني، ثم بسط لنا من الدنيا ما بسط، او قال اعطينا من الدنيا ما اعطينا، وقد خشينا ان تكون حسناتنا عجلت لنا. ثم جعل يبكي حتى ترك الطعام
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போரின்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் கொல்லப்பட்டால் எங்கே (இருப்பேன்)?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கத்தில்' என்று பதிலளித்தார்கள். (அந்த மனிதர்) தமது கையிலிருந்த பேரீச்சங்கனிகளை உடனே தூக்கி எறிந்துவிட்டு (களத்தில் குதித்து), தாம் கொல்லப்படும்வரையில் போரிட்டார்.113 அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا سفيان، عن عمرو، سمع جابر بن عبد الله رضى الله عنهما قال قال رجل للنبي صلى الله عليه وسلم يوم احد ارايت ان قتلت فاين انا قال " في الجنة " فالقى تمرات في يده، ثم قاتل حتى قتل
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் அன்பை நாடியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கான பிரதிபலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. எங்களில் சிலர் தம் பிரதிபலனை (இவ்வுலகத்தில்) அனுபவிக்காமலேயே சென்றுவிட்டனர். அவர்களில் ஒருவர் தான், முஸ்அப் பின் உமைர் (ரலி). அவர் உஹுத் போர் நாளன்று கொல்லப்பட்டார். அவர் கோடுபோட்ட வண்ணத் துணி ஒன்றை மட்டுமே விட்டுச்சென்றார். அதைக் கொண்டு அவரது தலையை நாங்கள் மறைத்தால் அவருடைய இரு கால்கள் வெளியில் தெரிந்தன; கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. அப்போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், “அவரது தலையை அத்துணி யால் மறைத்துவிட்டு, அவரது கால்மீது “இத்கிர்' புல்லையிடுங்கள் -அல்லது அவரது கால் மீது சிறிது “இத்கிர்' புல்லைப் போடுங்கள்” என்று கூறினார்கள். (உஹுத் போரில் கலந்துகொண்ட) எங்களில் வேறுசிலர் இருக்கிறார்கள். அவர்களின் (தியாகத்திற்கான) பிரதிபலன் (இந்த உலகிலும்) கனிந்துவிட்டது. அதை அவர்கள் பறித்து (அனுபவித்து)க்கொண்டார்கள்.114 அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، حدثنا زهير، حدثنا الاعمش، عن شقيق، عن خباب رضى الله عنه قال هاجرنا مع رسول الله صلى الله عليه وسلم نبتغي وجه الله، فوجب اجرنا على الله، ومنا من مضى او ذهب لم ياكل من اجره شييا، كان منهم مصعب بن عمير قتل يوم احد، لم يترك الا نمرة، كنا اذا غطينا بها راسه خرجت رجلاه، واذا غطي بها رجلاه خرج راسه، فقال لنا النبي صلى الله عليه وسلم " غطوا بها راسه، واجعلوا على رجله الاذخر او قال القوا على رجله من الاذخر ". ومنا من قد اينعت له ثمرته فهو يهدبها
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، قال عمرو سمعت جابر بن عبد الله رضى الله عنهما يقول قال رسول الله صلى الله عليه وسلم " من لكعب بن الاشرف فانه قد اذى الله ورسوله ". فقام محمد بن مسلمة فقال يا رسول الله اتحب ان اقتله قال " نعم ". قال فاذن لي ان اقول شييا. قال " قل ". فاتاه محمد بن مسلمة فقال ان هذا الرجل قد سالنا صدقة، وانه قد عنانا، واني قد اتيتك استسلفك. قال وايضا والله لتملنه قال انا قد اتبعناه فلا نحب ان ندعه حتى ننظر الى اى شىء يصير شانه، وقد اردنا ان تسلفنا وسقا، او وسقين وحدثنا عمرو غير مرة، فلم يذكر وسقا او وسقين او فقلت له فيه وسقا او وسقين فقال ارى فيه وسقا او وسقين فقال نعم ارهنوني. قالوا اى شىء تريد قال فارهنوني نساءكم. قالوا كيف نرهنك نساءنا وانت اجمل العرب قال فارهنوني ابناءكم. قالوا كيف نرهنك ابناءنا فيسب احدهم، فيقال رهن بوسق او وسقين. هذا عار علينا، ولكنا نرهنك اللامة قال سفيان يعني السلاح فواعده ان ياتيه، فجاءه ليلا ومعه ابو نايلة وهو اخو كعب من الرضاعة، فدعاهم الى الحصن، فنزل اليهم فقالت له امراته اين تخرج هذه الساعة فقال انما هو محمد بن مسلمة، واخي ابو نايلة وقال غير عمرو قالت اسمع صوتا كانه يقطر منه الدم. قال انما هو اخي محمد بن مسلمة ورضيعي ابو نايلة ان الكريم لو دعي الى طعنة بليل لاجاب قال ويدخل محمد بن مسلمة معه رجلين قيل لسفيان سماهم عمرو قال سمى بعضهم قال عمرو جاء معه برجلين وقال غير عمرو ابو عبس بن جبر، والحارث بن اوس وعباد بن بشر قال عمرو وجاء معه برجلين فقال اذا ما جاء فاني قايل بشعره فاشمه، فاذا رايتموني استمكنت من راسه فدونكم فاضربوه. وقال مرة ثم اشمكم. فنزل اليهم متوشحا وهو ينفح منه ريح الطيب، فقال ما رايت كاليوم ريحا اى اطيب وقال غير عمرو قال عندي اعطر نساء العرب واكمل العرب قال عمرو فقال اتاذن لي ان اشم راسك قال نعم، فشمه، ثم اشم اصحابه ثم قال اتاذن لي قال نعم. فلما استمكن منه قال دونكم. فقتلوه ثم اتوا النبي صلى الله عليه وسلم فاخبروه
حدثنا يوسف بن موسى، حدثنا عبيد الله بن موسى، عن اسراييل، عن ابي اسحاق، عن البراء، قال بعث رسول الله صلى الله عليه وسلم الى ابي رافع اليهودي رجالا من الانصار، فامر عليهم عبد الله بن عتيك، وكان ابو رافع يوذي رسول الله صلى الله عليه وسلم ويعين عليه، وكان في حصن له بارض الحجاز، فلما دنوا منه، وقد غربت الشمس، وراح الناس بسرحهم فقال عبد الله لاصحابه اجلسوا مكانكم، فاني منطلق، ومتلطف للبواب، لعلي ان ادخل. فاقبل حتى دنا من الباب ثم تقنع بثوبه كانه يقضي حاجة، وقد دخل الناس، فهتف به البواب يا عبد الله ان كنت تريد ان تدخل فادخل، فاني اريد ان اغلق الباب. فدخلت فكمنت، فلما دخل الناس اغلق الباب، ثم علق الاغاليق على وتد قال فقمت الى الاقاليد، فاخذتها ففتحت الباب، وكان ابو رافع يسمر عنده، وكان في علالي له، فلما ذهب عنه اهل سمره صعدت اليه، فجعلت كلما فتحت بابا اغلقت على من داخل، قلت ان القوم نذروا بي لم يخلصوا الى حتى اقتله. فانتهيت اليه، فاذا هو في بيت مظلم وسط عياله، لا ادري اين هو من البيت فقلت يا ابا رافع. قال من هذا فاهويت نحو الصوت، فاضربه ضربة بالسيف، وانا دهش فما اغنيت شييا، وصاح فخرجت من البيت، فامكث غير بعيد ثم دخلت اليه فقلت ما هذا الصوت يا ابا رافع. فقال لامك الويل، ان رجلا في البيت ضربني قبل بالسيف، قال فاضربه ضربة اثخنته ولم اقتله، ثم وضعت ظبة السيف في بطنه حتى اخذ في ظهره، فعرفت اني قتلته، فجعلت افتح الابواب بابا بابا حتى انتهيت الى درجة له، فوضعت رجلي وانا ارى اني قد انتهيت الى الارض فوقعت في ليلة مقمرة، فانكسرت ساقي، فعصبتها بعمامة، ثم انطلقت حتى جلست على الباب فقلت لا اخرج الليلة حتى اعلم اقتلته فلما صاح الديك قام الناعي على السور فقال انعى ابا رافع تاجر اهل الحجاز. فانطلقت الى اصحابي فقلت النجاء، فقد قتل الله ابا رافع. فانتهيت الى النبي صلى الله عليه وسلم فحدثته فقال " ابسط رجلك ". فبسطت رجلي، فمسحها، فكانها لم اشتكها قط
حدثنا احمد بن عثمان، حدثنا شريح هو ابن مسلمة حدثنا ابراهيم بن يوسف، عن ابيه، عن ابي اسحاق، قال سمعت البراء رضى الله عنه قال بعث رسول الله صلى الله عليه وسلم الى ابي رافع عبد الله بن عتيك وعبد الله بن عتبة في ناس معهم، فانطلقوا حتى دنوا من الحصن، فقال لهم عبد الله بن عتيك امكثوا انتم حتى انطلق انا فانظر. قال فتلطفت ان ادخل الحصن، ففقدوا حمارا لهم قال فخرجوا بقبس يطلبونه قال فخشيت ان اعرف قال فغطيت راسي كاني اقضي حاجة، ثم نادى صاحب الباب من اراد ان يدخل فليدخل قبل ان اغلقه. فدخلت ثم اختبات في مربط حمار عند باب الحصن، فتعشوا عند ابي رافع وتحدثوا حتى ذهبت ساعة من الليل، ثم رجعوا الى بيوتهم، فلما هدات الاصوات ولا اسمع حركة خرجت قال ورايت صاحب الباب حيث وضع مفتاح الحصن، في كوة فاخذته ففتحت به باب الحصن. قال قلت ان نذر بي القوم انطلقت على مهل، ثم عمدت الى ابواب بيوتهم، فغلقتها عليهم من ظاهر، ثم صعدت الى ابي رافع في سلم، فاذا البيت مظلم قد طفي سراجه، فلم ادر اين الرجل، فقلت يا ابا رافع. قال من هذا قال فعمدت نحو الصوت فاضربه، وصاح فلم تغن شييا قال ثم جيت كاني اغيثه فقلت ما لك يا ابا رافع وغيرت صوتي. فقال الا اعجبك لامك الويل، دخل على رجل فضربني بالسيف. قال فعمدت له ايضا فاضربه اخرى فلم تغن شييا، فصاح وقام اهله، قال ثم جيت وغيرت صوتي كهيية المغيث، فاذا هو مستلق على ظهره، فاضع السيف في بطنه ثم انكفي عليه حتى سمعت صوت العظم، ثم خرجت دهشا حتى اتيت السلم اريد ان انزل، فاسقط منه فانخلعت رجلي فعصبتها، ثم اتيت اصحابي احجل فقلت انطلقوا فبشروا رسول الله صلى الله عليه وسلم فاني لا ابرح حتى اسمع الناعية، فلما كان في وجه الصبح صعد الناعية فقال انعى ابا رافع. قال فقمت امشي ما بي قلبة، فادركت اصحابي قبل ان ياتوا النبي صلى الله عليه وسلم فبشرته
حدثنا عبيد الله بن موسى، عن اسراييل، عن ابي اسحاق، عن البراء رضى الله عنه قال لقينا المشركين يوميذ، واجلس النبي صلى الله عليه وسلم جيشا من الرماة، وامر عليهم عبد الله وقال " لا تبرحوا، ان رايتمونا ظهرنا عليهم فلا تبرحوا وان رايتموهم ظهروا علينا فلا تعينونا ". فلما لقينا هربوا حتى رايت النساء يشتددن في الجبل، رفعن عن سوقهن قد بدت خلاخلهن، فاخذوا يقولون الغنيمة الغنيمة. فقال عبد الله عهد الى النبي صلى الله عليه وسلم ان لا تبرحوا. فابوا، فلما ابوا صرف وجوههم، فاصيب سبعون قتيلا، واشرف ابو سفيان فقال افي القوم محمد فقال " لا تجيبوه ". فقال افي القوم ابن ابي قحافة قال " لا تجيبوه ". فقال افي القوم ابن الخطاب فقال ان هولاء قتلوا، فلو كانوا احياء لاجابوا، فلم يملك عمر نفسه فقال كذبت يا عدو الله، ابقى الله عليك ما يخزيك. قال ابو سفيان اعل هبل. فقال النبي صلى الله عليه وسلم " اجيبوه ". قالوا ما نقول قال " قولوا الله اعلى واجل ". قال ابو سفيان لنا العزى ولا عزى لكم. فقال النبي صلى الله عليه وسلم " اجيبوه ". قالوا ما نقول قال " قولوا الله مولانا ولا مولى لكم ". قال ابو سفيان يوم بيوم بدر، والحرب سجال، وتجدون مثلة لم امر بها ولم تسوني. اخبرني عبد الله بن محمد، حدثنا سفيان، عن عمرو، عن جابر، قال اصطبح الخمر يوم احد ناس ثم قتلوا شهداء
حدثنا عبيد الله بن موسى، عن اسراييل، عن ابي اسحاق، عن البراء رضى الله عنه قال لقينا المشركين يوميذ، واجلس النبي صلى الله عليه وسلم جيشا من الرماة، وامر عليهم عبد الله وقال " لا تبرحوا، ان رايتمونا ظهرنا عليهم فلا تبرحوا وان رايتموهم ظهروا علينا فلا تعينونا ". فلما لقينا هربوا حتى رايت النساء يشتددن في الجبل، رفعن عن سوقهن قد بدت خلاخلهن، فاخذوا يقولون الغنيمة الغنيمة. فقال عبد الله عهد الى النبي صلى الله عليه وسلم ان لا تبرحوا. فابوا، فلما ابوا صرف وجوههم، فاصيب سبعون قتيلا، واشرف ابو سفيان فقال افي القوم محمد فقال " لا تجيبوه ". فقال افي القوم ابن ابي قحافة قال " لا تجيبوه ". فقال افي القوم ابن الخطاب فقال ان هولاء قتلوا، فلو كانوا احياء لاجابوا، فلم يملك عمر نفسه فقال كذبت يا عدو الله، ابقى الله عليك ما يخزيك. قال ابو سفيان اعل هبل. فقال النبي صلى الله عليه وسلم " اجيبوه ". قالوا ما نقول قال " قولوا الله اعلى واجل ". قال ابو سفيان لنا العزى ولا عزى لكم. فقال النبي صلى الله عليه وسلم " اجيبوه ". قالوا ما نقول قال " قولوا الله مولانا ولا مولى لكم ". قال ابو سفيان يوم بيوم بدر، والحرب سجال، وتجدون مثلة لم امر بها ولم تسوني. اخبرني عبد الله بن محمد، حدثنا سفيان، عن عمرو، عن جابر، قال اصطبح الخمر يوم احد ناس ثم قتلوا شهداء