ஹதீஸ்கள்
#4045
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் (அவர்கள் நோன்பை நிறைவு செய்யும் நேரத்தில்) உணவு கொண்டுவரப்பட்டது. (அன்று பகல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். அப்போது அவர்கள், “முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் (உஹுத் போரில்) கொல்லப்பட்டார்கள்- அவர் என்னைவிடச் சிறந்தவர்-அவர் ஒரு சால்வையால் கஃபனிடப்பட்டார். (அந்தச் சால்வையால்) அவரது தலை மூடப்பட்டால், அவருடைய இரு கால்கள் வெளியே தெரிந்தன. அவருடைய இரு கால்கள் (அதனால்) மூடப்பட்டால், தலை வெளியில் தெரிந்தது” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மேலும், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், (பின்வருமாறு) கூறியதாக நான் எண்ணுகிறேன்: ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் (உஹுத் போரில்) கொல்லப்பட்டார்கள். அவர் என்னைவிடச் சிறந்தவர். (அவரும் அதுபோலவே பற்றாக்குறை மிக்க சிறிய சால்வையாலேயே கஃபனிடப்பட்டார்) பிறகு (அந்த ஏழ்மை நிலை நம்மைவிட்டு நீங்கி, இதோ, நீங்கள் காண்கிறீர்களே) இந்த அளவுக்கு நமக்கு இந்த உலகின் வசதி வாய்ப்புகள் வழங்கப்பட்டன; அல்லது இந்த உலக(ச் செல்வ)த்திலிருந்து (இதோ, நீங்கள் காண்கின்றீர்களே) இந்த அளவுக்கு நமக்குத் தரப்பட்டது. நாங்கள் புரிந்த நல்லறங்களுக்குப் பிரதிபலன் மிக விரைவாக (இவ்வுலகிலேயே) நமக்குக் கொடுக்கப்பட்டுவிட்டதோ என்று நாம் அஞ்சுகிறோம்” என்று கூறினார்கள். பிறகு (தமக்காகக் கொண்டுவரப்பட்ட) உணவை (உண்ணாமல் அப்படியே) விட்டுவிட்டு அழலானார்கள்.112 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4045
- Book Index
- 91
Grades
- -