ஹதீஸ்கள்
#4031
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தேசத் துரோகிகளும் கொடுஞ்செயல் புரிந்தவர்களுமான) பனுந் நளீர் குலத் தாரின் பேரீச்சமரங்களை (போர்க் கால நடவடிக்கையாக) எரித்துவிட்டார்கள். இன்னும் (சிலவற்றை) வெட்டிவிட்டார்கள்.90 அது “புவைரா' என்னும் இடமாகும்.91 எனவேதான், “நீங்கள் சில பேரீச்சமரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் நிற்கும்படி விட்டுவிட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன்தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்திவிடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்)” எனும் (59:5) இறைவசனம் அருளப்பெற்றது.92 அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا الليث، عن نافع، عن ابن عمر رضى الله عنهما قال حرق رسول الله صلى الله عليه وسلم نخل بني النضير وقطع وهى البويرة فنزلت {ما قطعتم من لينة او تركتموها قايمة على اصولها فباذن الله}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4031
- Book Index
- 80
Grades
- -
