ஹதீஸ்கள்
#4028
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
இப்னு உமர் (ரó) அவர்கள் கூறியதாவது: (மதீனா யூதர்களான பனுந்) நளீர் குலத்தாரும் (பனூ) குறைழா குலத்தாரும் (நபி (ஸல்) அவர்கள்மீது) போர் தொடுத்தனர். எனவே, பனுந் நளீர் குலத்தாரை நபி (ஸல்) அவர்கள் நாடு கடத்தினார்கள். (பனூ) குறைழா குலத்தார் (வருத்தம் தெரிவித்ததால் அவர்கள்)மீது கருணைகாட்டி (மன்னித்து) அவர்களை அங்கேயே (வசிக்க) விட்டுவிட்டார்கள். (ஆனால், பனூ) குறைழா குலத்தாரும் போர் தொடுத்தபோது அவர்களுடைய ஆண்களைக் கொலை செய்தார்கள். மேலும், அவர்களுடைய பெண்களையும் அவர்களுடைய குழந்தைகளையும், அவர்களுடைய உடைமைகளையும் முஸ்லிம்களுக்கு மத்தியில் (போர்ச் செல்வமாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களுடன் வந்து சேர்ந்துகொண்ட (பனூ குறைழா குலத்தார்) சிலருக்கு அவர்கள் பாதுகாப்பு வழங்கினார்கள். அந்தச் சிலர் முஸ்லிம்களாக மாறிவிட்டனர். அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களின் குலத்தாரான “பனூ கைனுகா' கூட்டத்தாரையும், பனூ ஹாரிஸா (குலத்தாரான) யூதர்களையும், மதீனா நகரத்தைச் சேர்ந்த யூதர்கள் அனைவரையும் (ஆக) மதீனாவிலிருந்த எல்லா யூதர்களையும் நாடு கடத்திவிட்டார்கள்.87 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4028
- Book Index
- 77
Grades
- -