ஹதீஸ்கள்
#4047
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் அன்பை நாடியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கான பிரதிபலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. எங்களில் சிலர் தம் பிரதிபலனை (இவ்வுலகத்தில்) அனுபவிக்காமலேயே சென்றுவிட்டனர். அவர்களில் ஒருவர் தான், முஸ்அப் பின் உமைர் (ரலி). அவர் உஹுத் போர் நாளன்று கொல்லப்பட்டார். அவர் கோடுபோட்ட வண்ணத் துணி ஒன்றை மட்டுமே விட்டுச்சென்றார். அதைக் கொண்டு அவரது தலையை நாங்கள் மறைத்தால் அவருடைய இரு கால்கள் வெளியில் தெரிந்தன; கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. அப்போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், “அவரது தலையை அத்துணி யால் மறைத்துவிட்டு, அவரது கால்மீது “இத்கிர்' புல்லையிடுங்கள் -அல்லது அவரது கால் மீது சிறிது “இத்கிர்' புல்லைப் போடுங்கள்” என்று கூறினார்கள். (உஹுத் போரில் கலந்துகொண்ட) எங்களில் வேறுசிலர் இருக்கிறார்கள். அவர்களின் (தியாகத்திற்கான) பிரதிபலன் (இந்த உலகிலும்) கனிந்துவிட்டது. அதை அவர்கள் பறித்து (அனுபவித்து)க்கொண்டார்கள்.114 அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، حدثنا زهير، حدثنا الاعمش، عن شقيق، عن خباب رضى الله عنه قال هاجرنا مع رسول الله صلى الله عليه وسلم نبتغي وجه الله، فوجب اجرنا على الله، ومنا من مضى او ذهب لم ياكل من اجره شييا، كان منهم مصعب بن عمير قتل يوم احد، لم يترك الا نمرة، كنا اذا غطينا بها راسه خرجت رجلاه، واذا غطي بها رجلاه خرج راسه، فقال لنا النبي صلى الله عليه وسلم " غطوا بها راسه، واجعلوا على رجله الاذخر او قال القوا على رجله من الاذخر ". ومنا من قد اينعت له ثمرته فهو يهدبها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4047
- Book Index
- 93
Grades
- -
