ஹதீஸ்கள்
#4032
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பனுந் நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை (புவைரா எனுமிடத்தில்) எரித்தார்கள். இந்த (புவைரா) சம்பவம் குறித்தே (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் பின்வருமாறு பாடினார்கள்: புவைராவில்பற்றியது நெருப்பு;(கையாலாகாத குறைஷி)குலத்தாரானபனூ லுஅய் தலைவர்களுக்குஎளிதாகிப்போனது. அப்போது (முஸ்லிமாகாமல் இருந்த) அபூசுஃப்யான் பின் ஹாரிஸ், ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்கு (கவிதையிலேயே பின்வருமாறு) பதிலளித்தார்: அல்லாஹ்அச்செயலை நீடிக்கச்செய்யட்டும்!அதன்நாலா புறங்களிலும்அக்னிபற்றி எறியட்டும்! தெரியும் உனக்குபுவைராவிலிருந்துதொலைவில் இருப்பது யார்?நம்மிருவரின் ஊர்களில்சேதம் எதற்கு?93 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4032
- Book Index
- 81
Grades
- -