ஹதீஸ்கள்
#4032
ஸஹீஹ் அல்-புகாரீ - Military Expeditions
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பனுந் நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை (புவைரா எனுமிடத்தில்) எரித்தார்கள். இந்த (புவைரா) சம்பவம் குறித்தே (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் பின்வருமாறு பாடினார்கள்: புவைராவில்பற்றியது நெருப்பு;(கையாலாகாத குறைஷி)குலத்தாரானபனூ லுஅய் தலைவர்களுக்குஎளிதாகிப்போனது. அப்போது (முஸ்லிமாகாமல் இருந்த) அபூசுஃப்யான் பின் ஹாரிஸ், ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்கு (கவிதையிலேயே பின்வருமாறு) பதிலளித்தார்: அல்லாஹ்அச்செயலை நீடிக்கச்செய்யட்டும்!அதன்நாலா புறங்களிலும்அக்னிபற்றி எறியட்டும்! தெரியும் உனக்குபுவைராவிலிருந்துதொலைவில் இருப்பது யார்?நம்மிருவரின் ஊர்களில்சேதம் எதற்கு?93 அத்தியாயம் :
حدثني اسحاق، اخبرنا حبان، اخبرنا جويرية بن اسماء، عن نافع، عن ابن عمر رضى الله عنهما ان النبي صلى الله عليه وسلم حرق نخل بني النضير قال ولها يقول حسان بن ثابت وهان على سراة بني لوى حريق بالبويرة مستطير قال فاجابه ابو سفيان بن الحارث ادام الله ذلك من صنيع وحرق في نواحيها السعير ستعلم اينا منها بنزه وتعلم اى ارضينا تضير
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Military Expeditions
- Hadith Index
- #4032
- Book Index
- 81
Grades
- -
