Loading...
Loading...
நூல்கள்
163 ஹதீஸ்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், லூத் (அலை) அவர்களுக் குக் கருணை புரிவானாக! அவர்கள் பலம் வாய்ந்த ஓர் உதவியாளனிடமே தஞ்சம் புகுந்தவர்களாக இருந்தார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் (அடைபட் டுக்) கிடந்த காலம்...
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி அவதூறு பேசப்பட்டபோது (நடந்தவை பற்றி அவர்களின் தாயாரான) உம்மு ரூமான் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள்:62 நான் ஆயிஷாவுடன் உட்கார்ந்த...
உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘இறுதியில், இறைத்தூதர்கள் (மக்கள்மீது) நம்பிக்கை இழந்து, அவர்க(ளின் ஆதரவாளர்க)ளும் தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டதோ என்று எண்ணத்...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகன்தான் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின...
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: அய்யூப் (அலை) அவர்கள் தமது ஆடை முழுவதையும் களைந்துவிட்டு குளித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது தங்கத்தாலான வெட்டுக்கிளி ஒன்றின் கால் வந்து விழுந்தது. உடனே அவர்கள் அதைத் தமது துணியில் எடுக்க...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (முதன் முதலாக தமக்கு வேத அறிவிப்பு அருளப்பட்ட பின்பு) நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம், தமது மனம் பதறியவராகத் திரும்பி வந்தார்கள். உடனே கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல...
மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட (மிஃராஜ்) இரவைப் பற்றி(ய செய்திகளை) எங்களுக்கு அறிவித் தார்கள்: நான் ஐந்தாவது வானத்திற்குச் சென்ற...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னை (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் நான் மூசா அவர்களைப் பார்த்தேன். அவர்கள், ‘ஷனூஆ’ குலத்து மனிதர்களில் ஒருவரைப் போல் (எண்ணெய் தடவிப்) படிந்த தொங்கலான தலை ம...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஒரு நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள் லி அதாவது ஆஷூராவுடைய (முஹர்ரம் 10ஆவது) நாளில் (யூதர்கள்) நோன்பு நோற்றுவந்ததை இப்னு அப்பாஸ்...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையடைந்துவிடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூசா (அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் இறை அரியணையின் க...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்ரவேலர்கள் மட்டும் இருந்திரா விட்டால் இறைச்சி துர்நாற்றமெடுக்காது. ஹவ்வா (ஏவாள்) அவர்கள் மட்டும் இருந்திராவிட்டால் பெண், தன் கணவனை எக்காலத்திலும் (ஆசையூட்டி) ஏமாற்ற மாட்டாள். இதை அபூஹுரைர...
உபைதுல்லாஹ் பின் அப்தில் லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஹுர்ரு பின் கைஸ் அல்ஃபஸாரீ (ரலி) அவர்களுடன் மூசா (அலை) அவர்களு டைய தோழர் யார் என்பது தொடர்பாக (கருத்து வேறுபாடு கொண்டு) தர்க்கித்தார் கள...
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நவ்ஃப் அல்பிக்காலீ என்பவர், யிகளிர்’ (அலை) அவர்களின் தோழரான மூசா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூசா (அலை) அவர்கள் அல்லர்; அவ...
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: களிர் (அலை) அவர்கள் ஒரு காய்ந்த பொட்டல் பூமியின் மீது அமர்ந்தார்கள். உடனே அவர்களுக்குப் பின்னே அது பசுமையான (கதிர்களுடைய)தாக (உயிர் பெற்று) அசையலாயிற்று. அதனால்தான் அவர்களுக்கு யிகளிர்’ (பசு...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்ரவேலர்களுக்கு, ‘‘(ஊருக்குள் நுழையும்போது) அதன் வாசலில், சிரம் தாழ்த்தியவாறும் யிஹித்தத்துன்’ (யிபாவமன்னிப்புக் கோருகிறோம்’) என்று சொல்லியவாறும் நுழையுங்கள்” என்று கட்டளையிட...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூசா (அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும் அதிகமாக (தம் உடலை) மறைத்துக்கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுடைய மேனியிலிருந்து சிறிதளவுகூட வெளியே தெரியாது. அவர்கள் (அத...
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிட் டார்கள். அப்போது ஒருமனிதர், ‘‘நிச்சயம் இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்” என்று (அதிருப்தியுடன...
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (யிமர்ருழ் ழஹ்ரான்’ எனுமி டத்தில்) ‘அராக்’ (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக்கொண்டு இருந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர...
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: யிமலக்குல் மவ்த்’ (உயிரை எடுத்துச் செல்ல வரும் வானவர்) மூசா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் அவர் வந்தபோது மூசா (அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்துவிட்டார்கள். உடனே அவர் த...