Loading...

Loading...
நூல்கள்
௧௬௩ ஹதீஸ்கள்
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களை (களிமண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘‘நீங்கள் சென்று அந்த வானவர் களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்கொள்ளுங்கள். அது தான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததி களின் முகமனும் ஆகும்” என்று சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘‘அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி பொழியட்டும்)” என்று கூறினார்கள். அதற்கு வான வர்கள், ‘‘உங்கள்மீதும் சாந்தியும் இறைக் கருணையும் பொழியட்டும்” என்று பதில் கூறினார்கள். யிஇறைவனின் கருணையும் (உங்கள்மீது பொழியட்டும்)› எனும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) கூடுதலாகச் சொன்னார்கள். ஆகவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில்தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை (மனிதப்) படைப்புகள் (உருவத்திலும், அழகிலும்) குறைந்துகொண்டே வருகின்றன. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثني عبد الله بن محمد، حدثنا عبد الرزاق، عن معمر، عن همام، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " خلق الله ادم وطوله ستون ذراعا، ثم قال اذهب فسلم على اوليك من الملايكة، فاستمع ما يحيونك، تحيتك وتحية ذريتك. فقال السلام عليكم. فقالوا السلام عليك ورحمة الله. فزادوه ورحمة الله. فكل من يدخل الجنة على صورة ادم، فلم يزل الخلق ينقص حتى الان
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் நுழையும் முதல் அணி ‘னர் பௌர்ணமி இரவில் (ஒளி வீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத் தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும்மாட்டார் கள்; எச்சில் துப்பவும்மாட்டார்கள்; மூக்குச் சிந்தவும்மாட்டார்கள். அவர்களுடைய சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களின் வியர்வை கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகை போடும்) தூப கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அகில் என்பது நறுமணக் குச்சியாகும். அவர்களுடைய துணைவியர் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்கவாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டி ருப்பார்கள். அவர்கள் தங்களுடைய தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத் தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا جرير، عن عمارة، عن ابي زرعة، عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " ان اول زمرة يدخلون الجنة على صورة القمر ليلة البدر، ثم الذين يلونهم على اشد كوكب دري في السماء اضاءة، لا يبولون ولا يتغوطون ولا يتفلون ولا يمتخطون، امشاطهم الذهب، ورشحهم المسك، ومجامرهم الالوة الانجوج عود الطيب، وازواجهم الحور العين، على خلق رجل واحد على صورة ابيهم ادم، ستون ذراعا في السماء
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் உண்மையைச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள்மீது குளிப்பு கடமையாகுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம். அவள் (மதன) நீரைப் பார்த்தால் (அவள்மீது குளிப்பு கடமையாகும்)” என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்டு நான் சிரித்தேன். ‘‘பெண் ணுக்குக்கூடவா தூக்க ஸ்கலிதம் ஏற்படும்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘பின் குழந்தை, (தோற்றத் தில்) அவளை ஒத்திருப்பது எதனால்?” என்று கேட்டார்கள்.3 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن هشام بن عروة، عن ابيه، عن زينب بنت ابي سلمة، عن ام سلمة، ان ام سليم، قالت يا رسول الله، ان الله لا يستحيي من الحق، فهل على المراة الغسل اذا احتلمت قال " نعم، اذا رات الماء ". فضحكت ام سلمة، فقالت تحتلم المراة فقال رسول الله صلى الله عليه وسلم " فبما يشبه الولد
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத மதத்திலிருந்தபோது) எட்டியது. உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘தங்களிடம் நான் மூன்று விஷயங் களைப் பற்றிக் கேட்கப்போகிறேன். அவற்றை ஓர் இறைதூதர் மட்டுமே அறிவார்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘1. இறுதி நாளின் அடையாளங் களில் முதலாவது அடையாளம் எது?2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்? அது (சாயலில்) தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘சற்று முன்புதான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்” என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், ‘‘வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக்கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்றுதிரட்டும். சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனது நீர்(விந்து உயிரணு) முந்திக்கொண்டால் குழந்தை அவனது சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளது சாயலில் பிறக்கிறது” என்று பதிலளித்தார்கள். (உடனே) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், ‘‘தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என நான் உறுதிகூறுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் பொய்யில் ஊறித்திளைத்த சமுதாயத்தார் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்” என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வீட்டினுள் புகுந்து (மறைந்து)கொண் டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), ‘‘உங்களில் அப்துல்லாஹ் பின் சலாம் எத்தைகைய மனிதர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அவர் எங்களில் (மார்க்க) ஞானம் மிக்கவரும், எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்” என்று பதிலளித் தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்துல்லாஹ் (பின் சலாம்) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரெனில் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்று வானாக!” என்று சொன்னார்கள். உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக்கொண்டிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வெளியே வந்து, ‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்.” என்று சொன்னார்கள். உடனே யூதர்கள், ‘‘இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்” என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித் திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.4 அத்தியாயம் :
حدثنا بشر بن محمد، اخبرنا عبد الله، اخبرنا معمر، عن همام، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم نحوه يعني " لولا بنو اسراييل لم يخنز اللحم، ولولا حواء لم تخن انثى زوجها
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண்கள் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்துகொள்ளும்படி கூறும்) என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களை நல்ல விதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்துவிடுவாய். அதை அப்படியே விட்டுவிட்டால் அது கோணலாகவே இருக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்.5 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو كريب، وموسى بن حزام، قالا حدثنا حسين بن علي، عن زايدة، عن ميسرة الاشجعي، عن ابي حازم، عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " استوصوا بالنساء، فان المراة خلقت من ضلع، وان اعوج شىء في الضلع اعلاه، فان ذهبت تقيمه كسرته، وان تركته لم يزل اعوج، فاستوصوا بالنساء
உண்மையே பேசுபவரும், உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படு கிறீர்கள். பிறகு அவ்வாறே (நாற்பது நாட்களில்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறிவிடுகிறது. பிறகு, அவ்வாறே (இன்னொரு நாற்பது நாட்களில் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப்பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு, அல்லாஹ் அதனி டம் ஒரு வானவரை நான்கு கட்டளை களைத் தந்து அனுப்புகிறான். (அதன்படி) அதன் செயல்பாடு (எப்படியிருக்கும் என்று)ம் அதன் ஆயுளும், அதன் உணவும் (பிற வாழ்வாதாரங்களும் எவ்வளவு என்றும்) எழுதப்படுகின்றன. அக்குழந்தை நற்பேறற்றதா, நற்பேறுள்ளதா என்பதும் எழுதப்படுகிறது. பிறகு அதனுள் உயிர் ஊதப்படுகிறது. இதனால்தான், மனிதன் நரகவாசி களின் செயலைச் செய்தவண்ண மிருப்பான். இறுதியில், அவனுக்கும் நரகத்திற்குமிடையே ஒரு முழம் மட்டும் தான் இடைவெளி இருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக்கொள்ள, அவன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து சொர்க்கத்தில் நுழைந்துவிடுவான். ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் சொர்க்கத்திற்கு மிடையே ஒரு முழம்தான் இருக்கும். அப்போது, (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக்கொள்ள அவன் நரக வாசிகளின் செயலைச் செய்து நரகத்தில் புகுந்துவிடுவான். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6 அத்தியாயம் :
حدثنا عمر بن حفص، حدثنا ابي، حدثنا الاعمش، حدثنا زيد بن وهب، حدثنا عبد الله، حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق " ان احدكم يجمع في بطن امه اربعين يوما، ثم يكون علقة مثل ذلك، ثم يكون مضغة مثل ذلك، ثم يبعث الله اليه ملكا باربع كلمات، فيكتب عمله واجله ورزقه وشقي او سعيد، ثم ينفخ فيه الروح، فان الرجل ليعمل بعمل اهل النار حتى ما يكون بينه وبينها الا ذراع، فيسبق عليه الكتاب فيعمل بعمل اهل الجنة، فيدخل الجنة، وان الرجل ليعمل بعمل اهل الجنة، حتى ما يكون بينه وبينها الا ذراع فيسبق عليه الكتاب، فيعمل بعمل اهل النار فيدخل النار
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக, அல்லாஹ் (தாயின்) கருவறையில் வானவர் ஒருவரைப் பொறுப்பாளராக நியமிக்கிறான். அவர், ‘‘இறைவா! (இது ஒரு துளி) விந்து. இறைவா! இது, பற்றித் தொங்கும் கரு. இறைவா! இது (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத் துண்டு” என்று கூறிக் கொண்டிருப்பார். அதைப் படைத்(து உயிர் தந்)திட அல்லாஹ் நாடும்போது, ‘‘இறைவா! இது ஆணா அல்லது பெண்ணா? நற்பாக்கியம் பெற்றதா? துர் பாக்கியம் உடையதா? (இதன்) வாழ் வாதாரம் எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு?” என்று கேட்பார். (அல்லாஹ்வால் இவையனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு) தாயின் வயிற்றில் அது இருக்கும்போது எழுதப்படும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7 அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا حماد بن زيد، عن عبيد الله بن ابي بكر بن انس، عن انس بن مالك رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " ان الله وكل في الرحم ملكا فيقول يا رب نطفة، يا رب علقة، يا رب مضغة، فاذا اراد ان يخلقها قال يا رب، اذكر ام يا رب انثى يا رب شقي ام سعيد فما الرزق فما الاجل فيكتب كذلك في بطن امه
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: (மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக இலேசான வேதனை தரப்படுபவரிடம், ‘‘பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத்தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனை’லிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாய் அல்லவா?” என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், ‘‘ஆம்” என்று பதிலளிப்பான். அப்போது அல்லாஹ், ‘‘நீ ஆதமின் முதுகுத்தண்டில் (கருவாகாமல்) இருந்தபோது இதைவிட இலேசான ஒன்றை, எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக்கொள்ளவில்லை” என்று கூறுவான். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا قيس بن حفص، حدثنا خالد بن الحارث، حدثنا شعبة، عن ابي عمران الجوني، عن انس، يرفعه " ان الله، يقول لاهون اهل النار عذابا لو ان لك ما في الارض من شىء كنت تفتدي به قال نعم. قال فقد سالتك ما هو اهون من هذا وانت في صلب ادم ان لا تشرك بي. فابيت الا الشرك
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (உலகில்) ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும்போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம் (அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர்தான் முதன் முதலாக கொலை செய்து (ஒரு முன் மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டுவந்தவர்.8 இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عمر بن حفص بن غياث، حدثنا ابي، حدثنا الاعمش، قال حدثني عبد الله بن مرة، عن مسروق، عن عبد الله رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تقتل نفس ظلما الا كان على ابن ادم الاول كفل من دمها، لانه اول من سن القتل
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன. இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.9 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
قال قال الليث عن يحيى بن سعيد، عن عمرة، عن عايشة، رضى الله عنها قالت سمعت النبي صلى الله عليه وسلم يقول " الارواح جنود مجندة، فما تعارف منها ايتلف، وما تناكر منها اختلف ". وقال يحيى بن ايوب حدثني يحيى بن سعيد بهذا
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியுள்ள பண்புகளைக் கொண்டு புகழ்ந்த பிறகு தஜ்ஜாலைப் பற்றிக் கூறினார்கள்.11 அப்போது, ‘‘நான் உங்களை அவனைக் குறித்து எச்சரிக்கின்றேன். எந்த இறைத் தூதரும் அவனைக் குறித்து தம் சமூகத் தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் அவர்கள் தம் சமூகத்தாருக்கு (அவனைக் குறித்து) எச்சரித்திருக்கிறார்கள். ஆனால், நான் அவனைப் பற்றி (இதுவரை) எந்த இறைத்தூதரும் தன் சமூகத்தாருக்குக் கூறாத ஒரு அடை யாளத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன். ஆனால், அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا عبدان، اخبرنا عبد الله، عن يونس، عن الزهري، قال سالم وقال ابن عمر رضى الله عنهما قام رسول الله صلى الله عليه وسلم في الناس فاثنى على الله بما هو اهله، ثم ذكر الدجال، فقال " اني لانذركموه، وما من نبي الا انذره قومه، لقد انذر نوح قومه، ولكني اقول لكم فيه قولا لم يقله نبي لقومه، تعلمون انه اعور، وان الله ليس باعور
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப்போகிறேன்; வேறெந்த இறைத்தூதரும் அதைத் தம் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம், நரகம் போன்ற வற்றைக் கொண்டுவருவான். அவன் எதைச் சொர்க்கம் என்று கூறுகின்றானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்துத் தம் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கின்றேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا شيبان، عن يحيى، عن ابي سلمة، سمعت ابا هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " الا احدثكم حديثا عن الدجال ما حدث به نبي قومه، انه اعور، وانه يجيء معه بمثال الجنة والنار، فالتي يقول انها الجنة. هي النار، واني انذركم كما انذر به نوح قومه
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமையில் நூஹ் அவர்களும் அவர்களின் சமுதாயத்தாரும் வருவார்கள். அப்போது அல்லாஹ் (நூஹ் (அலை) அவர்களை நோக்கி), ‘‘(எனது செய்தியை நீங்கள் உங்கள் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்துவிட்டீர்களா?” என்று கேட்பான். அதற்கு நூஹ் அவர்கள், ‘‘ஆம், என் இறைவா! (எடுத்துரைத்து விட்டேன்)” என்று பதிலளிப்பார்கள். பிறகு அல்லாஹ் நூஹ் அவர்களுடைய சமுதாயத்தாரிடம், ‘‘இவர் உங்களுக்கு (என் செய்தியை) எடுத்துரைத்துவிட்டாரா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், ‘‘இல்லை. எங்களிடம் எந்த இறைத்தூதரும் வரவில்லை” என்று பதில் கூறுவார்கள். அப்போது அல்லாஹ் நூஹ் அவர்களிடம், ‘‘உங்களுக்காகச் சாட்சியம் சொல்பவர் யார்?” என்று கேட்பான். நூஹ் அவர்கள், ‘‘முஹம்மத் (ஸல்) அவர்களும் அவர்களுடைய சமுதாயத்தாரும் (எனக்காகச் சாட்சியம் சொல்வார்கள்)” என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே நாம் நூஹ் அவர்கள் (இறைச் செய்தியைத் தம் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்துவிட்டார்கள் என்று சாட்சியம் சொல்வோம். ‘‘அவ்வாறே உங்களை மக்களுக்குச் சாட்சியம் சொல்வதற்காக நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம்” (2:143) எனும் புகழோங்கிய இறைவனின் வசனம் இதைத் தான் குறிக்கின்றது. யிநடுநிலையா” (வசத்) எனும் சொல் லின் கருத்து ‘நீதியா” என்பதாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا عبد الواحد بن زياد، حدثنا الاعمش، عن ابي صالح، عن ابي سعيد، قال قال رسول الله صلى الله عليه وسلم " يجيء نوح وامته فيقول الله تعالى هل بلغت فيقول نعم، اى رب. فيقول لامته هل بلغكم فيقولون لا، ما جاءنا من نبي. فيقول لنوح من يشهد لك فيقول محمد صلى الله عليه وسلم وامته، فنشهد انه قد بلغ، وهو قوله جل ذكره {وكذلك جعلناكم امة وسطا لتكونوا شهداء على الناس} والوسط العدل
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன், ஒரு விருந்தில் இருந்தோம். அப்போது (சமைக்கப்பட்ட) முன்கால் சப்பை ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் வழங்கப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் விருப்ப மானதாக இருந்துவந்தது. நபி (ஸல்) அவர்கள் (அதைத் தம்) பற்களால் கடித்து அதிலிருந்து சிறிது உண்டார்கள். பிறகு கூறினார்கள்: ‘‘நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன். (மறுமை நாளில்) அல்லாஹ் (மக்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்ப்பவர் அந்த மக்களைப் பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியுறுவார்கள். சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி), ‘‘நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்பவரைத் (தேடிப்)பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்பார்கள். மக்கள் சிலர், ‘‘உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)” என்று கூறுவார்கள். ஆகவே, மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, ‘‘ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள். உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியும்படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம்பணிந் தார்கள். உங்களைச் சொர்க்கத்தில் குடி யமர்த்தினான். நீங்கள் உங்கள் இறைவனி டம் எங்களுக்காகப் பரிந்துரை செய்ய மாட்டீர்களா? நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்க ளுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையை யும் நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘‘(நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் என்மீது (கடும்) கோபம் கொண்டான். அதற்குமுன் அதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. அதற்குப் பிறகும் அதைப்போல் அவன் கோபம் கொள்ளமாட்டான். (நான் நெருங் கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னைத் தடுத்தான். நான் (அவனுக்கு) மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளேன். (ஆகவே,) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங் கள். நீங்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள். உடனே மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று, ‘‘நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பட்ட) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ், யிநன்றி செலுத்தும் அடியார்’ என்று குறிப்பிட்டுள்ளான்.12 நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் அவல நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்துள்ள (இந்தத் துன்ப) நிலையை நீங்கள் காணவில்லையா? எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரைக்க மாட்டீர்களா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், ‘‘என் இறைவன் இன்று என்மீது (கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்குமுன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப்போல் கோபம் கொள்ளமாட்டான். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் (இறுதி) நபி (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார். மக்கள் என்னிடம் வருவார்கள். நான் இறை அரியணைக்குக் கீழே சஜ்தா செய்வேன். அப்போது ‘‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துவீராக! பரிந் துரை செய்யுங்கள். (உங்கள்) பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும். கேளுங்கள். அது உங்களுக்குத் தரப்படும்” என்று (இறை வனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அறிவிப்பாளர் முஹம்மத் பின் உபைத் (ரஹ்) அவர்கள், ‘‘இந்த ஹதீஸ் முழுமையாக எனக்கு நினைவில்லை” என்று கூறுகிறார்கள்.13 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிஃபஹல் மின்(ம்) முத்தகிர் (அறிவுரை பெறுபவர் எவராவது இருக்கின்றாரா?) எனும் (குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள) இறைவசனத்தைப் பொதுவாக மக்கள் ஓதும் பிரபலமான முறைப்படி யிஃப ஹல்மின்(ம்) முத்தகிர்’ என்றே ஓதினார்கள். (வெகுசிலர் ஓதுவதைப்போல் யிமுஸ்தகிர்’ என்று பிரித்தோ, வேறொரு முறைப்படி யிமுஸ்ஸக்கிர்’ என்றோ ஓதவில்லை)14 அத்தியாயம் :
حدثنا نصر بن علي بن نصر، اخبرنا ابو احمد، عن سفيان، عن ابي اسحاق، عن الاسود بن يزيد، عن عبد الله رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قرا {فهل من مدكر} مثل قراءة العامة
அபூதர் (ரலி) அவர்கள் அறி வித்து வந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை (முகடு) பிரிக்கப்பட்டது. (அங்கிருந்து வானவர்) ஜிப்ரீல் அவர்கள் இறங்கி (வந்து) என் நெஞ்சைப் பிளந் தார்கள். பிறகு அதை, ‘ஸம்ஸம்’ தண்ணீ ரால் கழுவினார்கள். பிறகு நுண்ணறி வாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத் தட்டு ஒன்றைக் கொண்டுவந்து என் நெஞ்சில் அதை ஊற்றி (நிரப்பி) னார்கள். பிறகு என் கையைப் பிடித்து என்னை அழைத்துக்கொண்டு வானத் திற்கு ஏறிச் சென்றார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள வானத் திற்கு வந்தபோது வானத்தின் காவலரி டம், ‘‘திறங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘‘யார் அது?” என்று கேட்டார். ஜிப்ரீல் அவர்கள், ‘‘இதோ ஜிப்ரீல்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், ‘‘உங்களுடன் வேறெவரேனும் இருக்கிறரா?” என்று கேட்டார். அவர்கள், ‘‘என்னுடன் முஹம்மத் அவர்கள் இருக்கிறார்கள்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், ‘‘(அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (ஆள்) அனுப்பப் பட்டதா?” என்று கேட்க, ஜிப்ரீல் அவர்கள், ‘‘ஆம், திறங்கள்” என்று கூறினார்கள். (முதல் வானத்தின் கதவு திறக்கப் பட்டு) நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் இருந்தார். அவரது வலப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர்; இடப் பக்கத் திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப் பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) ‘‘நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!” என்று கூறினார். நான் ‘‘ஜிப்ரீலே! இவர் யார்?” என்று கேட்டேன். அவர், ‘‘இவர் ஆதம் (அலை) அவர்கள்; அவர்களுடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அவர்களுடைய சந்ததிகள். அவர்களில் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான், அவர்கள் வலப் பக்கம் (சொர்க்கவாசிகளான) தம் மக்களைப் பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கி றார்கள்; இடப் பக்கம் (நரகவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும்போது (வேதனைப் பட்டு) அழுகிறார்கள்” என்று பதிலளித் தார்கள். பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல் (இன்னும் உயரத்திற்கு) ஏறிச் சென்றார்கள். பிறகு இரண்டாம் வானத்திற்கு வந்து அதன் காவலரிடம், ‘‘திறங்கள்” என்று கூறினார்கள். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போலவே ஜிப்ரீல் அவர்கள் பதில் கூறிய பின் வாயிலைத்) திறந்தார். அனஸ் (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள், வானங்களில் இத்ரீஸ் (அலை), மூசா (அலை), ஈசா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டதாகக் கூறினார்களே தவிர அவர் களுடைய இருப்பிடங்கள் எங்கிருந்தன என்று அவர்கள் எனக்குக் குறிப்பிட்டுக் கூறவில்லை. அவர்கள் ஆதம் (அலை) அவர்களை அண்மையிலுள்ள (முதல்) வானத்தில் கண்டதாகவும் இப்ராஹீம் (அலை) அவர்களை ஆறாவது வானத்தில் கண்டதாகவும் மட்டுமே சொன்னார்கள்” என்று அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அனஸ் (ரலி) அவர்கள் மேலும் கூறினார்கள்: ‘‘ஜிப்ரீல் (அலை) அவர்கள் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கடந்து சென்ற போது, ‘‘நல்ல இறைத்தூதரே வருக! நல்ல சகோதரரே, வருக!” என்று கூறினார்கள். நான், ‘‘இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘இவர் இத்ரீஸ்” என்று கூறினார்கள். பிறகு மூசா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், ‘‘நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக” என்று கூறினார்கள். நான், ‘‘இவர் யார்?” என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அவர்கள், ‘‘இவர் மூசா” என்று கூறினார்கள். பிறகு நான், ஈசா அவர்களைக் கடந்து சென்றேன். அவர்களும், ‘‘நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக!” என்று கூறினார்கள். நான், ‘‘இவர் யார்?” என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், ‘‘(இவர்) ஈசா” என்று பதிலளித் தார்கள். பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர் களைக் கடந்து சென்றேன். அவர்கள், ‘‘நல்ல நபியே, வருக! நல்ல மகனே, வருக!” என்று கூறினார்கள். நான், ‘‘இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு, ‘‘இவர் இப்ராஹீம்” என்று ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்தார்கள்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அபூஹய்யா அல்அன்சாரி (ரலி) அவர்கள் ஆகிய இருவரும் அறிவித்ததாக இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு மேலே சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்திற்கு வந்தபோது அங்கு நான் (வானவர்கள் விதிகளை எழுதிக்கொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன். இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களும் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அப்போது அல்லாஹ் என்மீது (என் சமுதாயத்தாருக்காக) ஐம்பது தொழுகை களைக் கடமையாக்கினான். அதைப் பெற்றுக்கொண்டு நான் திரும்பியபோது மூசா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது மூசா அவர்கள், ‘‘உங்கள் சமுதாயத்தார் மீது என்ன கடமையாக்கப்பட்டது?” என்று கேட்டார்கள். நான், ‘‘அவர்கள்மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ள”’ என்று பதிலளித்தேன். அவர்கள், ‘‘அப்படியானால் உங்கள் இறைவனிடம் திரும்பிச்சென்று (சற்று குறைத்துக் கடமையாக்கும்படி) கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறை வேற்ற முடியாது” என்று கூறினார்கள். உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்று (தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி) கேட்டேன். அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். மூசா அவர்களிடம் திரும்பிச் சென்றபோது, ‘‘உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறி முன்புபோல் (‘‘உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது”) என்று கூறினார்கள். (நான் அவ்வாறே திரும்ப இறைவனிடம் சென்று இன்னும் குறைக்கும்படி கோர) அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். நான் மூசா அவர்களிடம் மீண்டும் சென்று கூறிய போது, ‘‘உங்கள் இறைவனிடம் திரும்பச் சென்று இன்னும் குறைத்துக் கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தார் அதற்குச் சக்தி பெறமாட்டார்கள்” என்று கூற, நான் திரும்பிச் சென்று, என் இறைவனிடம் (இன்னும் சற்று குறைக்கும்படி) கேட்டேன். அதற்கு அவன், ‘‘அவை ஐந்து (வேளைத் தொழுகைகள்) ஆகும். அவையே (பிரதிபலனில்) ஐம்பது (வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். (ஒருமுறை சொல்லப் பட்ட) சொல் என்னிடம் மாற்றப்படுவதில்லை” என்று கூறினான். உடனே, நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். அவர்கள், ‘‘உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். நான், ‘‘என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகின்றேன்” என்று பதிலளித்தேன். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (வானுலகின் எல்லையான) யிசித்ரத்துல் முன்தஹா’வுக்குச் சென்றார்கள். அப்போது நான் அறிய முடியாதபடி பல வண்ணங்கள் அதைச் சூழ்ந்து மூடியிருந்தன. பிறகு நான் உள்ளே அனுமதிக்கப்பட்டேன். அப்போது அங்கே முத்தாலான கூடாரங்களைக் கண்டேன். அதன் மண் (நறுமணம் வீசும்) கஸ்தூரியாக இருந்தது.17 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (அகழ்ப் போரின்போது) கீழைக் காற்றால் (‘ஸபா’) வெற்றியளிக்கப்பட்டேன். யிஆத்’ சமுதாயத்தார் மேலைக் காற்றால் (யிதபூர்’) அழிக்கப்பட்டனர் இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.19 அத்தியாயம் :
حدثني محمد بن عرعرة، حدثنا شعبة، عن الحكم، عن مجاهد، عن ابن عباس رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " نصرت بالصبا، واهلكت عاد بالدبور
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அலீ (ரலி) அவர்கள் (யமனிலிருந்து) நபி (ஸல்) அவர்களிடம் சிறிய தங்கக் கட்டி ஒன்றை அனுப்பிவைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் அக்ரஉ பின் ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷியீ (ரலி), உயைனா பின் பத்ர் அல் ஃபஸாரீ (ரலி), பனூ நப்ஹான் குலத்தாரில் ஒருவ ரான ஸைத் அத்தாயீ (ரலி), பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா பின் உலாஸா அல்ஆமிரி (ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள். அதனால் குறைஷியரும் அன்சாரிகளும் கோபமடைந்து, ‘‘நஜ்த்வாசிகளின் தலைவர் களுக்குக் கொடுக்கிறார்; நம்மை விட்டு விடுகிறாரே” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் கள் (இப்போதுதான் இஸ்லாத்தைத் தழுவி யிருப்பதால்) அவர்களுடைய உள்ளங் களை (முழுமையாக) இணக்கமாக்கு வதற்காக (அவர்களுடன் நேசம் பாராட்டும் விதத்தில்)தான் கொடுத்தேன்” என்று கூறினார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் உப்பியிருந்த, நெற்றியோரங்கள் உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் முன்வந்து, ‘யிமுஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘‘நானே (அல்லாஹ்வுக்கு) மாறு செய்தால் வேறெவர்தான் அவனுக்குக் கீழ்ப்படிவார்? பூமியில் வசிப்பவர்கள் விஷயத்தில் அல்லாஹ் என்மீது நம்பிக்கை வைத்திருக்க, நீங்கள் என்மீது நம்பிக்கை வைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்கள். அப்போது வேறொரு மனிதர் இப்படி (குறை) சொன்னவரைக் கொல்வதற்கு அனுமதி கேட்டார். அனுமதி கேட்ட அவர் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் தான் என்று நினைக்கின்றேன்லி அவரை நபி (ஸல்) அவர்கள், (இதைச் சொன்னவரைக் கொல்ல வேண்டாமென்று) தடுத்துவிட்டார்கள். (குறை சொன்ன) அந்த ஆள் திரும்பிச் சென்றபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து லிஅல்லது இவரின் பின்னேலி ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களு டைய தொண்டைக் குழிகளை தாண்டிச் செல்லாது. அவர்கள் வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறிவிடு வதைப்போல் மார்க்கத்திலிருந்து வெளி யேறிவிடுவார்கள்; இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்; சிலைவழிபாடு புரிபவர் களை விட்டுவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் யிஆத்’ கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நான் நிச்சயம் அழித்து விடுவேன்.” என்று கூறினார்கள்.20 அத்தியாயம் :
قال وقال ابن كثير عن سفيان، عن ابيه، عن ابن ابي نعم، عن ابي سعيد رضى الله عنه قال بعث علي رضى الله عنه الى النبي صلى الله عليه وسلم بذهيبة فقسمها بين الاربعة الاقرع بن حابس الحنظلي ثم المجاشعي، وعيينة بن بدر الفزاري، وزيد الطايي ثم احد بني نبهان، وعلقمة بن علاثة العامري ثم احد بني كلاب، فغضبت قريش والانصار، قالوا يعطي صناديد اهل نجد ويدعنا. قال " انما اتالفهم ". فاقبل رجل غاير العينين مشرف الوجنتين، ناتي الجبين، كث اللحية، محلوق فقال اتق الله يا محمد. فقال " من يطع الله اذا عصيت، ايامنني الله على اهل الارض فلا تامنوني ". فساله رجل قتله احسبه خالد بن الوليد فمنعه، فلما ولى قال " ان من ضيضي هذا او في عقب هذا قوم يقرءون القران، لا يجاوز حناجرهم، يمرقون من الدين مروق السهم من الرمية، يقتلون اهل الاسلام، ويدعون اهل الاوثان، لين انا ادركتهم لاقتلنهم قتل عاد
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் யிஃப ஹல் மின்(ம்) முத்த(க்)கிர்’ (அறிவுரை பெறுபவர் எவரேனும் உண்டா?) எனும் (குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள) இறைவசனத்தை ஓதுவதை நான் செவியுற்றேன்.21 அத்தியாயம் :
حدثنا خالد بن يزيد، حدثنا اسراييل، عن ابي اسحاق، عن الاسود، قال سمعت عبد الله، قال سمعت النبي صلى الله عليه وسلم يقرا {فهل من مدكر}
حدثنا محمد بن سلام، اخبرنا الفزاري، عن حميد، عن انس رضى الله عنه قال بلغ عبد الله بن سلام مقدم رسول الله صلى الله عليه وسلم المدينة، فاتاه، فقال اني سايلك عن ثلاث لا يعلمهن الا نبي، {قال ما} اول اشراط الساعة وما اول طعام ياكله اهل الجنة ومن اى شىء ينزع الولد الى ابيه ومن اى شىء ينزع الى اخواله فقال رسول الله صلى الله عليه وسلم " خبرني بهن انفا جبريل ". قال فقال عبد الله ذاك عدو اليهود من الملايكة. فقال رسول الله صلى الله عليه وسلم " اما اول اشراط الساعة فنار تحشر الناس من المشرق الى المغرب. واما اول طعام ياكله اهل الجنة فزيادة كبد حوت. واما الشبه في الولد فان الرجل اذا غشي المراة فسبقها ماوه كان الشبه له، واذا سبق ماوها كان الشبه لها ". قال اشهد انك رسول الله. ثم قال يا رسول الله ان اليهود قوم بهت، ان علموا باسلامي قبل ان تسالهم بهتوني عندك، فجاءت اليهود ودخل عبد الله البيت، فقال رسول الله صلى الله عليه وسلم " اى رجل فيكم عبد الله بن سلام ". قالوا اعلمنا وابن اعلمنا واخبرنا وابن اخيرنا. فقال رسول الله صلى الله عليه وسلم " افرايتم ان اسلم عبد الله ". قالوا اعاذه الله من ذلك. فخرج عبد الله اليهم فقال اشهد ان لا اله الا الله، واشهد ان محمدا رسول الله. فقالوا شرنا وابن شرنا. ووقعوا فيه
حدثني اسحاق بن نصر، حدثنا محمد بن عبيد، حدثنا ابو حيان، عن ابي زرعة، عن ابي هريرة رضى الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم في دعوة، فرفع اليه الذراع، وكانت تعجبه، فنهس منها نهسة وقال " انا سيد القوم يوم القيامة، هل تدرون بمن يجمع الله الاولين والاخرين في صعيد واحد فيبصرهم الناظر ويسمعهم الداعي، وتدنو منهم الشمس، فيقول بعض الناس الا ترون الى ما انتم فيه، الى ما بلغكم، الا تنظرون الى من يشفع لكم الى ربكم فيقول بعض الناس ابوكم ادم، فياتونه فيقولون يا ادم انت ابو البشر، خلقك الله بيده ونفخ فيك من روحه، وامر الملايكة فسجدوا لك، واسكنك الجنة، الا تشفع لنا الى ربك الا ترى ما نحن فيه وما بلغنا فيقول ربي غضب غضبا لم يغضب قبله مثله، ولا يغضب بعده مثله، ونهاني عن الشجرة فعصيته، نفسي نفسي، اذهبوا الى غيري، اذهبوا الى نوح. فياتون نوحا فيقولون يا نوح انت اول الرسل الى اهل الارض، وسماك الله عبدا شكورا، اما ترى الى ما نحن فيه الا ترى الى ما بلغنا الا تشفع لنا الى ربك فيقول ربي غضب اليوم غضبا لم يغضب قبله مثله، ولا يغضب بعده مثله، نفسي نفسي، ايتوا النبي صلى الله عليه وسلم، فياتوني، فاسجد تحت العرش فيقال يا محمد ارفع راسك واشفع تشفع، وسل تعطه ". قال محمد بن عبيد لا احفظ سايره
قال عبدان اخبرنا عبد الله، اخبرنا يونس، عن الزهري، ح حدثنا احمد بن صالح، حدثنا عنبسة، حدثنا يونس، عن ابن شهاب، قال قال انس كان ابو ذر رضى الله عنه يحدث ان رسول الله صلى الله عليه وسلم قال " فرج سقف بيتي وانا بمكة، فنزل جبريل، ففرج صدري، ثم غسله بماء زمزم، ثم جاء بطست من ذهب ممتلي حكمة وايمانا فافرغها في صدري، ثم اطبقه ثم اخذ بيدي، فعرج بي الى السماء، فلما جاء الى السماء الدنيا، قال جبريل لخازن السماء افتح. قال من هذا قال هذا جبريل. قال معك احد قال معي محمد. قال ارسل اليه قال نعم، فافتح. فلما علونا السماء اذا رجل عن يمينه اسودة، وعن يساره اسودة، فاذا نظر قبل يمينه ضحك، واذا نظر قبل شماله بكى فقال مرحبا بالنبي الصالح والابن الصالح. قلت من هذا يا جبريل قال هذا ادم، وهذه الاسودة عن يمينه، وعن شماله نسم بنيه، فاهل اليمين منهم اهل الجنة، والاسودة التي عن شماله اهل النار، فاذا نظر قبل يمينه ضحك، واذا نظر قبل شماله بكى، ثم عرج بي جبريل، حتى اتى السماء الثانية، فقال لخازنها افتح. فقال له خازنها مثل ما قال الاول، ففتح ". قال انس فذكر انه وجد في السموات ادريس وموسى وعيسى وابراهيم، ولم يثبت لي كيف منازلهم، غير انه قد ذكر انه وجد ادم في السماء الدنيا، وابراهيم في السادسة. وقال انس فلما مر جبريل بادريس. قال مرحبا بالنبي الصالح والاخ الصالح. فقلت من هذا قال هذا ادريس، ثم مررت بموسى فقال مرحبا بالنبي الصالح والاخ الصالح. قلت من هذا قال هذا موسى. ثم مررت بعيسى، فقال مرحبا بالنبي الصالح والاخ الصالح. قلت من هذا قال عيسى. ثم مررت بابراهيم، فقال مرحبا بالنبي الصالح والابن الصالح. قلت من هذا قال هذا ابراهيم. قال واخبرني ابن حزم ان ابن عباس وابا حبة الانصاري كانا يقولان قال النبي صلى الله عليه وسلم " ثم عرج بي حتى ظهرت لمستوى اسمع صريف الاقلام ". قال ابن حزم وانس بن مالك رضى الله عنهما قال النبي صلى الله عليه وسلم " ففرض الله على خمسين صلاة، فرجعت بذلك حتى امر بموسى، فقال موسى ما الذي فرض على امتك قلت فرض عليهم خمسين صلاة. قال فراجع ربك، فان امتك لا تطيق ذلك. فرجعت فراجعت ربي فوضع شطرها، فرجعت الى موسى، فقال راجع ربك، فذكر مثله، فوضع شطرها، فرجعت الى موسى، فاخبرته فقال راجع ربك، فان امتك لا تطيق ذلك، فرجعت فراجعت ربي فقال هي خمس، وهى خمسون، لا يبدل القول لدى. فرجعت الى موسى، فقال راجع ربك. فقلت قد استحييت من ربي، ثم انطلق، حتى اتى السدرة المنتهى، فغشيها الوان لا ادري ما هي، ثم ادخلت {الجنة} فاذا فيها جنابذ اللولو واذا ترابها المسك