ஹதீஸ்கள்
#3338
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப்போகிறேன்; வேறெந்த இறைத்தூதரும் அதைத் தம் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம், நரகம் போன்ற வற்றைக் கொண்டுவருவான். அவன் எதைச் சொர்க்கம் என்று கூறுகின்றானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்துத் தம் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கின்றேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا شيبان، عن يحيى، عن ابي سلمة، سمعت ابا هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " الا احدثكم حديثا عن الدجال ما حدث به نبي قومه، انه اعور، وانه يجيء معه بمثال الجنة والنار، فالتي يقول انها الجنة. هي النار، واني انذركم كما انذر به نوح قومه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3338
- Book Index
- 13
Grades
- -
