ஹதீஸ்கள்
#3334
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: (மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக இலேசான வேதனை தரப்படுபவரிடம், ‘‘பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத்தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனை’லிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாய் அல்லவா?” என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், ‘‘ஆம்” என்று பதிலளிப்பான். அப்போது அல்லாஹ், ‘‘நீ ஆதமின் முதுகுத்தண்டில் (கருவாகாமல்) இருந்தபோது இதைவிட இலேசான ஒன்றை, எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக்கொள்ளவில்லை” என்று கூறுவான். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا قيس بن حفص، حدثنا خالد بن الحارث، حدثنا شعبة، عن ابي عمران الجوني، عن انس، يرفعه " ان الله، يقول لاهون اهل النار عذابا لو ان لك ما في الارض من شىء كنت تفتدي به قال نعم. قال فقد سالتك ما هو اهون من هذا وانت في صلب ادم ان لا تشرك بي. فابيت الا الشرك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3334
- Book Index
- 9
Grades
- -
