ஹதீஸ்கள்
#3328
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் உண்மையைச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள்மீது குளிப்பு கடமையாகுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம். அவள் (மதன) நீரைப் பார்த்தால் (அவள்மீது குளிப்பு கடமையாகும்)” என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்டு நான் சிரித்தேன். ‘‘பெண் ணுக்குக்கூடவா தூக்க ஸ்கலிதம் ஏற்படும்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘பின் குழந்தை, (தோற்றத் தில்) அவளை ஒத்திருப்பது எதனால்?” என்று கேட்டார்கள்.3 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن هشام بن عروة، عن ابيه، عن زينب بنت ابي سلمة، عن ام سلمة، ان ام سليم، قالت يا رسول الله، ان الله لا يستحيي من الحق، فهل على المراة الغسل اذا احتلمت قال " نعم، اذا رات الماء ". فضحكت ام سلمة، فقالت تحتلم المراة فقال رسول الله صلى الله عليه وسلم " فبما يشبه الولد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3328
- Book Index
- 3
Grades
- -
