ஹதீஸ்கள்
#3327
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் நுழையும் முதல் அணி ‘னர் பௌர்ணமி இரவில் (ஒளி வீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத் தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும்மாட்டார் கள்; எச்சில் துப்பவும்மாட்டார்கள்; மூக்குச் சிந்தவும்மாட்டார்கள். அவர்களுடைய சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களின் வியர்வை கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகை போடும்) தூப கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அகில் என்பது நறுமணக் குச்சியாகும். அவர்களுடைய துணைவியர் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்கவாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டி ருப்பார்கள். அவர்கள் தங்களுடைய தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத் தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا جرير، عن عمارة، عن ابي زرعة، عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " ان اول زمرة يدخلون الجنة على صورة القمر ليلة البدر، ثم الذين يلونهم على اشد كوكب دري في السماء اضاءة، لا يبولون ولا يتغوطون ولا يتفلون ولا يمتخطون، امشاطهم الذهب، ورشحهم المسك، ومجامرهم الالوة الانجوج عود الطيب، وازواجهم الحور العين، على خلق رجل واحد على صورة ابيهم ادم، ستون ذراعا في السماء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3327
- Book Index
- 2
Grades
- -
