ஹதீஸ்கள்
#3388
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி அவதூறு பேசப்பட்டபோது (நடந்தவை பற்றி அவர்களின் தாயாரான) உம்மு ரூமான் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள்:62 நான் ஆயிஷாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்போது அன்சாரிப் பெண் ஒருத்தி எங்களிடம், ‘‘இன்னாரை (மிஸ்தஹ் பின் உஸாஸா (ரலி) அவர்களை) அல்லாஹ் நிந்திக்கட்டும்” என்று கூறியபடி வந்தாள். நான், ‘‘ஏன் (இப்படிச் சொல்கிறாய்?)” என்று கேட்டேன். அதற்கு அவள், ‘‘(அவதூறுச்) செய்தியை அவர் (அறியாமையால்) பரப்பிவருகிறார்” என்று பதிலளித்தாள். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘எந்த (அவ தூறுச்) செய்தியை?” என்று கேட்டார். அவள் அந்த அவதூறுச் செய்தியைத் தெரிவித்தாள். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘இதை (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களும் (என் கணவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் செவியுற்றார்களா?” என்று கேட்டார். நான், ‘‘ஆம் (செவியுற்றார்கள்)” என்று பதில் சொன்னேன். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் மூர்ச்சையடைந்து விழுந்துவிட்டார்கள். பிறகு குளிர் காய்ச்சலுடன்தான் மூர்ச்சை தெளிந்து கண் விழித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து, ‘‘இவளுக் கென்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நான், ‘‘தன்னைப் பற்றிப் பேசப்பட்ட அவதூறுச் செய்தியைக் கேள்விப்பட்ட காரணத்தால் அவருக்குச் காய்ச்சல் ஏற்பட்டுவிட்டது” என்று பதிலளித்தேன். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் (படுக்கையிலிருந்து எழுந்து) உட்கார்ந்து கொண்டு, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் சத்தியம் செய்தாலும் நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள். நான் (நடந்ததை எடுத்துச் சொல்லி) சமாதானப்படுத்தினாலும் நீங்கள் ஒப்புக்கொள்ளமாட்டீர்கள். எனக்கும் உங்களுக்கும் உவமை யஅகூப் (அலை) அவர்களுடையவும் அவர்களின் பிள்ளைகளுடையவும் நிலையாகும். (யஅகூப் (அலை) அவர்கள் சொன்னதைப் போன்றே நீங்கள் புனைந்துரைக்கும் விஷயத்தில்) அல்லாஹ்தான் உதவி கோரத் தகுதியானவன் ஆவான்” என்று சொன்னார்கள்.63 உடனே நபி (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். அதைத் தொடர்ந்து அல்லாஹ், தான் அருளிய (ஆயிஷா (ரலி) அவர்கள் நிரபராதி என்று அறிவிக்கும்) வசனத்தை அருளினான். நபி (ஸல்) அவர்கள் அதை ஆயிஷாவுக்குத் தெரிவித்தார்கள். அதைச் செவியுற்றவுடன் ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘(இதற்காக) அல்லாஹ்வுக்கு (மட்டுமே) நான் நன்றி செலுத்துகிறேன். வேறெவருக்கும் நன்றி செலுத்தமாட்டேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3388
- Book Index
- 62
Grades
- -