ஹதீஸ்கள்
#3392
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (முதன் முதலாக தமக்கு வேத அறிவிப்பு அருளப்பட்ட பின்பு) நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம், தமது மனம் பதறியவராகத் திரும்பி வந்தார்கள். உடனே கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை (தம் ஒன்றுவிட்ட சகோதரரும் வேதம் கற்றவருமான) வரகா பின் நவ்ஃபல் அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். வரகா கிறித்தவராக மாறிவிட்டிருந்த ஒரு மனிதராயி ருந்தார். அவர், (நபி ஈசா (அலை) அவர்களுக்கு அருளப்பெற்ற வேதமான) இன்ஜீலை அரபி மொழியில் ஓதிவந்தார். வரகா, நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நீங்கள் என்ன பார்த்தீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் விவரம் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட வரகா, ‘‘இவர்தான் (இறைத்தூதர்) மூசாவின் மீது அல்லாஹ் இறங்கச் செய்த (வேத அறிவிப்பைக் கொண்டுவரும்) யிநாமூஸ்’ (வானவர்) ஆவார். (மார்க்கப் பிரசாரத்தில் ஈடுபட்டுப் பல சோதனைகளைச் சந்திக்கப்போகிற) உங்களுடைய காலத்தை நான் அடைந்து கொண்டால், உங்களுக்கு வலிமையுடன் கூடிய உதவியை நான் புரிவேன்” என்று கூறினார்.72 யிநாமூஸ்’ என்பவர், பிறருக்கு அறிவிக் காமல் மறைக்கின்ற விஷயங்களை (இறைக் கட்டளைப்படி) இறைத்தூதருக்கு அறிவிக்கும் வானவர் ஆவார். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، حدثنا الليث، قال حدثني عقيل، عن ابن شهاب، سمعت عروة، قال قالت عايشة رضى الله عنها فرجع النبي صلى الله عليه وسلم الى خديجة يرجف فواده، فانطلقت به الى ورقة بن نوفل، وكان رجلا تنصر يقرا الانجيل بالعربية. فقال ورقة ماذا ترى فاخبره. فقال ورقة هذا الناموس الذي انزل الله على موسى، وان ادركني يومك انصرك نصرا موزرا. الناموس صاحب السر الذي يطلعه بما يستره عن غيره
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3392
- Book Index
- 66
Grades
- -
