ஹதீஸ்கள்
#3397
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஒரு நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள் லி அதாவது ஆஷூராவுடைய (முஹர்ரம் 10ஆவது) நாளில் (யூதர்கள்) நோன்பு நோற்றுவந்ததை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்லி யூதர்கள், ‘‘இது மாபெரும் நாள். மூசா (அலை) அவர்களை இந்த நாளில்தான் அல்லாஹ் காப்பாற்றினான்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் அவர்களைவிட மூசா அவர்களுக்கு மிக நெருக்கமானவன்” என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் (கூடுதலான) நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள்.76 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3397
- Book Index
- 70
Grades
- -