ஹதீஸ்கள்
#3393
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட (மிஃராஜ்) இரவைப் பற்றி(ய செய்திகளை) எங்களுக்கு அறிவித் தார்கள்: நான் ஐந்தாவது வானத்திற்குச் சென்றபோது, அங்கே ஹாரூன் அவர்கள் இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘இவர்கள்தான் ஹாரூன் அவர்கள். இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் என் சலாமுக்கு பதிலுரைத்தார்கள். பிறகு, ‘‘நல்ல சகோதரரே வருக! நல்ல நபியே வருக!” என்று சொன்னார்கள்.73 இதே நபிமொழி அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து வேறு இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا هدبة بن خالد، حدثنا همام، حدثنا قتادة، عن انس بن مالك، عن مالك بن صعصعة، ان رسول الله صلى الله عليه وسلم حدثهم عن ليلة اسري به حتى اتى السماء الخامسة، فاذا هارون قال هذا هارون فسلم عليه. فسلمت عليه، فرد ثم قال مرحبا بالاخ الصالح والنبي الصالح. تابعه ثابت وعباد بن ابي علي عن انس عن النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3393
- Book Index
- 67
Grades
- -
