ஹதீஸ்கள்
#3405
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிட் டார்கள். அப்போது ஒருமனிதர், ‘‘நிச்சயம் இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்” என்று (அதிருப்தியுடன்) கூறினார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். (அதைக் கேட்டு) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவுக்கென்றால் கோப(த்தின் அடையாள)த்தை நான் அவர்களின் முகத்தில் கண்டேன். பிறகு, ‘‘மூசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! இதை விட மிக அதிகமாக அவர் புண்படுத்தப் பட்டார்; இருப்பினும் அவர் (பொறுமை யுடன்) சகித்துக்கொண்டார்” என்று சொன் னார்கள்.84 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3405
- Book Index
- 78
Grades
- -