ஹதீஸ்கள்
#3389
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘இறுதியில், இறைத்தூதர்கள் (மக்கள்மீது) நம்பிக்கை இழந்து, அவர்க(ளின் ஆதரவாளர்க)ளும் தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டதோ என்று எண்ணத் தொடங்கியபோது, அவர்களுக்கு நமது உதவி வந்தது” (12:110) என்று அல்லாஹ் கூறுகின்றான். இந்த வசனத்தின் மூலத்தில், (யிதங்களி டம் பொய் சொல்லப்பட்டுவிட்டதோ’ என்பதைக் குறிப்பதற்கான சொல்லை) யிகுஃத்திபூ’ (இறைத்தூதர்கள் பொய்யர்கள் என மக்களால் கருதப்பட்டார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? அல்லது யிகுஃதிபூ’ (தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டது என இறைத்தூதர்களின் ஆதரவாளர்கள் எண்ணினர்) என்று வாசிக்க வேண்டுமா?” என்று நான் கேட்டேன்.64 ‘‘ யிகுத்திபூ’ (தாம் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டோமோ என்று இறைத்தூதர்கள் கருதலானார்கள் என்றுதான் ஓத வேண்டும்)” என ஆயிஷா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அதாவது இறைத் தூதர்களை அவர்களின் சமுதாயத்தார் ஏற்க மறுத்தனர். உடனே, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களுடைய சமுதாயத்தார் தங்களைப் பொய்ப்பிக்கிறார்கள் என்று இறைத்தூதர்கள் சந்தேகிக்கவில்லையே! உறுதியாக நம்பித்தானே இருந்தார்கள்? (ஆனால் யிழன்னூ’ லி நபிமார்கள் சந்தேகித்தார்கள் என்றுதானே குர்ஆனின் இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ளது. அவ்வாறிருக்க, நீங்கள் கூறுகின்றவாறு எப்படிப் பொருள் கொள்ள முடியும்?)” என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அன்பு (மகனே) உர்வா! அதை அவர்கள் உறுதியாக நம்பத்தான் செய்தார்கள். (எனவே, இந்த வசனத்தில், யிழன்னூ’ என்பதற்கு யிநபிமார்கள் உறுதியாக நம்பினார்கள்’ என்றே பொருள் கொள்ள வேண்டும்; சந்தேகித்தார்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது)” என்று பதில் கூறினார்கள்.65 அப்போது யிகத் குதிபூ (தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டது என்று நபி மார்கள் கருதலானார்கள்)› என்று இருக்க லாமோ...? என நான் கேட்டேன்.66 அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் காப்பாற்றட்டும். நபிமார்கள் தங்கள் இறைவனைப் பற்றி அப்படி (தங்களிடம் இறைவன் பொய் சொல்லிவிட்டதாக) நினைக்கவில்லை.67 இந்த வசனத்தின் பொருளாவது: இறைத்தூதர்களைப் பின்பற்றிய சமுதாயத்தார், தங்கள் இறைவனை நம்பி, இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்று, அதன் பிறகு (தாம் ஏற்றுக்கொண்ட மார்க்கத்தின் பாதையில் நேரிட்ட) துன்பங்கள் தொடர்ந்து நீடித்துக்கொண்டேபோய், இறை உதவியும் வரத் தாமதமாகிக் கொண்டிருந்த அந்த நிலையில்தான், அந்த இறைத் தூதர்கள் தம் சமுதாயத்தாரில் தமது செய்தியைப் பொய்யென்று கருதி, தம்மை ஏற்காமலிருந்துவிட்டவர்களைக் குறித்து நிராசையடைந்துவிட்டனர். மேலும், தம்மை ஏற்றுப் பின்பற்றியவர்கள்கூட (இறை உதவி வரத் தாமதமானதாலும் துன்ப துயரங்கள் நீண்டுகொண்டே போனதாலும்) நமது செய்தியைப் பொய் யென்று கருதுகின்றார்கள் என்றும் அவர்கள் எண்ணலானார்கள். அப்போதுதான் நமது உதவி அவர்களை வந்தடைந் தது.68 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் (தம் சகோதரரான) அவர் (யூசுஃப்) விஷயத்தில் நம்பிக்கை இழந்தபோது (இஸ்தைஅசூ) தனிமையில் ஆலோசனை கலந்தனர் (12:80). யியஇச’ (நம்பிக்கை இழத்தல்) என்பதன் யிஇஸ்தஃப்அல’ வாய் பாடே யிஇஸ்தைஅச’ என்பதாகும். அல்லாஹ்வின் அருள்மீது நம்பிக்கை இழந்துவிடாதீர்கள் (என யஅகூப் கூறினார்). (12:87) அதாவது நம்பிக்கை, எதிர்பார்ப்பைக் கைவிட்டுவிடாதீர்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، قال اخبرني عروة، انه سال عايشة رضى الله عنها زوج النبي صلى الله عليه وسلم ارايت قوله {حتى اذا استياس الرسل وظنوا انهم قد كذبوا} او كذبوا. قالت بل كذبهم قومهم. فقلت والله لقد استيقنوا ان قومهم كذبوهم وما هو بالظن. فقالت يا عرية، لقد استيقنوا بذلك. قلت فلعلها او كذبوا. قالت معاذ الله، لم تكن الرسل تظن ذلك بربها واما هذه الاية قالت هم اتباع الرسل الذين امنوا بربهم وصدقوهم، وطال عليهم البلاء، واستاخر عنهم النصر حتى اذا استياست ممن كذبهم من قومهم، وظنوا ان اتباعهم كذبوهم جاءهم نصر الله. قال ابو عبد الله {استياسوا} افتعلوا من ييست. {منه} من يوسف. {لا تياسوا من روح الله} معناه الرجاء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3389
- Book Index
- 63
Grades
- -
