ஹதீஸ்கள்
#3394
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னை (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் நான் மூசா அவர்களைப் பார்த்தேன். அவர்கள், ‘ஷனூஆ’ குலத்து மனிதர்களில் ஒருவரைப் போல் (எண்ணெய் தடவிப்) படிந்த தொங்கலான தலை முடியுடையவர்களாக இருந்தார்கள். நான் ஈசா அவர்களைப் பார்த்தேன். அவர்கள் நடுத்தர வயதுடைய சிவப்பான மனிதராகவும் (அப்போதுதான்) குளியலறை’லிருந்து வெளியே வந்த வரைப் போன்றும் இருந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததி களிலேயே அவர்களுக்கு (தோற்றத்தில்) மிகவும் ஒப்பாக இருப்பவன் நான்தான். பிறகு என்னிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அவ்விரண்டில் ஒன்றில் பால் இருந்தது; மற்றொன்றில் மது இருந்தது. (வானவர்) ஜிப்ரீல் அவர்கள், ‘‘இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர் களோ அதை அருந்துங்கள்” என்று கூறி னார்கள். நான் பாலை எடுத்து அருந்தி னேன். ‘‘நீங்கள் இயல்பான (பானத்)தை எடுத்துக்கொண்டீர்கள். மதுவை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறிப்போயிருக்கும்” என்று சொன் னார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام بن يوسف، اخبرنا معمر، عن الزهري، عن سعيد بن المسيب، عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليلة اسري به " رايت موسى واذا رجل ضرب رجل، كانه من رجال شنوءة، ورايت عيسى، فاذا هو رجل ربعة احمر كانما خرج من ديماس، وانا اشبه ولد ابراهيم صلى الله عليه وسلم به، ثم اتيت باناءين، في احدهما لبن، وفي الاخر خمر فقال اشرب ايهما شيت. فاخذت اللبن فشربته فقيل اخذت الفطرة، اما انك لو اخذت الخمر غوت امتك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3394
- Book Index
- 68
Grades
- -
