Loading...

Loading...
நூல்கள்
௮௧ ஹதீஸ்கள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், சுப்ஹு தொழுகைக்குப் பின்னால் இருந்து சூரியன் (உயர்ந்து) சுடர்விடும்வரை தொழுவதை யும், அஸ்ர் தொழுகைக்குப் பின்னால் சூரியன் மறையும்வரை தொழுவதையும் தடை செய்தார்கள் என (மார்க்கப் பற்று, வாய்மை ஆகியவற்றில்) திருப்திக்குரிய சிலர் என்னிடம் உறுதிபடக் கூறினர். அவர்களில் என்னிடம் மிகவும் திருப்திக் குரியவர் உமர் (ரலி) அவர்கள் ஆவார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “மக்கள் சிலர் இவ்வாறு எனக்கு அறிவித்தனர்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அத்தியாயம் :
حدثنا حفص بن عمر، قال حدثنا هشام، عن قتادة، عن ابي العالية، عن ابن عباس، قال شهد عندي رجال مرضيون وارضاهم عندي عمر ان النبي صلى الله عليه وسلم نهى عن الصلاة بعد الصبح حتى تشرق الشمس، وبعد العصر حتى تغرب. حدثنا مسدد، قال حدثنا يحيى، عن شعبة، عن قتادة، سمعت ابا العالية، عن ابن عباس، قال حدثني ناس، بهذا
حدثنا مسدد، قال حدثنا يحيى بن سعيد، عن هشام، قال اخبرني ابي قال، اخبرني ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تحروا بصلاتكم طلوع الشمس ولا غروبها ". وقال حدثني ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا طلع حاجب الشمس فاخروا الصلاة حتى ترتفع، واذا غاب حاجب الشمس فاخروا الصلاة حتى تغيب ". تابعه عبدة
حدثنا مسدد، قال حدثنا يحيى بن سعيد، عن هشام، قال اخبرني ابي قال، اخبرني ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تحروا بصلاتكم طلوع الشمس ولا غروبها ". وقال حدثني ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا طلع حاجب الشمس فاخروا الصلاة حتى ترتفع، واذا غاب حاجب الشمس فاخروا الصلاة حتى تغيب ". تابعه عبدة
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரண்டு வியாபார முறைகளையும், ஆடை அணியும் இரண்டு முறைகளை யும், இரண்டு நேரங்களில் தொழுவதையும் தடை செய்தார்கள்; ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னா-ருந்து சூரியன் (முழுமையாக) உதயமாகும்வரையிலும், அஸ்ர் தொழு கைக்குப் பின்னா-ருந்து சூரியன் (முழுமையாக) மறையும்வரையிலும் தொழ வேண்டாமெனத் தடை செய்தார்கள். ஒரே துணியை உடலில் சுற்றிக் கொண்டு அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிடு வதற்கும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), மர்ம உறுப்பு வானுக்குத் தெரியும்படி ஒருவர் ஒரே ஆடையை (முழங்காலில்) சுற்றிக் கொண்டு இரு முழங்கால்களையும் நட்டு வைத்துக்கொண்டு (அவற்றைக் கைகளால் கட்டியபடி) உட்கார்ந்திருப்பதற்கும் (இஹ்திபா) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். முனாபதா, முலாமஸா எனும் இரண்டு வியாபார முறைகளையும் தடை செய்தார்கள்.26 அத்தியாயம் :
حدثنا عبيد بن اسماعيل، عن ابي اسامة، عن عبيد الله، عن خبيب بن عبد الرحمن، عن حفص بن عاصم، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم نهى عن بيعتين وعن لبستين وعن صلاتين نهى عن الصلاة بعد الفجر حتى تطلع الشمس، وبعد العصر حتى تغرب الشمس، وعن اشتمال الصماء وعن الاحتباء في ثوب واحد يفضي بفرجه الى السماء، وعن المنابذة والملامسة
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் (சரியாகச்) சூரியன் உதிக்கும் நேரத்தையும் சூரியன் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்து தொழ வேண்டாம். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن نافع، عن ابن عمر، ان رسول الله صلى الله عليه وسلم قال " لا يتحرى احدكم فيصلي عند طلوع الشمس ولا عند غروبها
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுப்ஹு தொழுகைக்குப் பின்னா-ருந்து சூரியன் (முழுமையாக) உதிக்கும் வரை எந்தத் தொழுகையும் இல்லை. அஸ்ர் தொழுகைக்குப் பின்னா-ருந்து சூரியன் (முழுமையாக) மறையும்வரை எந்தத் தொழுகையும் இல்லை. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، قال حدثنا ابراهيم بن سعد، عن صالح، عن ابن شهاب، قال اخبرني عطاء بن يزيد الجندعي، انه سمع ابا سعيد الخدري، يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " لا صلاة بعد الصبح حتى ترتفع الشمس، ولا صلاة بعد العصر حتى تغيب الشمس
ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நீங்கள் ஒரு தொழுகையைத் தொழுது கொண்டிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்த நாங்கள், நபி (ஸல்) அவர்கள் அத்தொழுகையைத் தொழக் கண்டதில்லை. (ஏன், நீங்கள் தொழுது வரும்) அந்த இரு ரக்அத்களைத் தொழ வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்” என முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள். அதாவது அஸ்ருக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடை செய்தார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن ابان، قال حدثنا غندر، قال حدثنا شعبة، عن ابي التياح، قال سمعت حمران بن ابان، يحدث عن معاوية، قال انكم لتصلون صلاة، لقد صحبنا رسول الله صلى الله عليه وسلم فما رايناه يصليها، ولقد نهى عنهما، يعني الركعتين بعد العصر
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: இரண்டு நேரங்களில் தொழ வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்: 1) ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னா-ருந்து சூரியன் (முழுமையாக) உதயமாகும் வரையிலும். 2) அஸ்ர் தொழுகைக்குப் பின்னா-ருந்து (முழுமையாகச்) சூரியன் மறையும் வரையிலும். அத்தியாயம் :
حدثنا محمد بن سلام، قال حدثنا عبدة، عن عبيد الله، عن خبيب، عن حفص بن عاصم، عن ابي هريرة، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن صلاتين بعد الفجر حتى تطلع الشمس، وبعد العصر حتى تغرب الشمس
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தோழர்கள் எவ்வாறு (எந்நேரத் தில்) தொழக் கண்டேனோ அவ்வாறே நான் தொழு(து வரு)கின்றேன். இரவிலும் பக-லும் தாம் விரும்பியதைத் தொழும் எவரையும் நான் தடுக்கமாட்டேன். ஆயினும், (சரியாகச்) சூரியன் உதிக்கும் நேரத்தையோ சூரியன் மறையும் நேரத்தையோ (தொழுவதற்காக) நீங்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது. அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا حماد بن زيد، عن ايوب، عن نافع، عن ابن عمر، قال اصلي كما رايت اصحابي يصلون، لا انهى احدا يصلي بليل ولا نهار ما شاء، غير ان لا تحروا طلوع الشمس ولا غروبها
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களை இறக்கச் செய்த (இறை)வன் மீதாணையாக! (அஸ்ர் தொழு கைக்குப் பின்னுள்ள அந்த) இரண்டு ரக்அத் தொழுகையை அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை நபி (ஸல்) அவர்கள் விட்டுவிடவில்லை. தொழுவதற்குச் சிரமப்படும் நிலையை அடைந்த பிறகே நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைச் சந்தித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் -தாம் அஸ்ருக்குப் பின்னர் தொழும் அந்த இரண்டு ரக்அத்களை- அமர்ந்து கொண்டே தொழுவார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த இரண்டு ரக்அத்களையும் தொழுவார்கள்; ஆனால், பள்ளிவாச-ல் அதைத் தொழமாட்டார்கள். தம் சமுதாயத் தாருக்குச் சிரமம் ஏற்படுத்துவதை அஞ்சி யதே இதற்குக் காரணம். தம் சமுதாயத் தாருக்கு எளிதானதையே அவர்கள் விரும்புவார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، قال حدثنا عبد الواحد بن ايمن، قال حدثني ابي انه، سمع عايشة، قالت والذي ذهب به ما تركهما حتى لقي الله، وما لقي الله تعالى حتى ثقل عن الصلاة، وكان يصلي كثيرا من صلاته قاعدا تعني الركعتين بعد العصر وكان النبي صلى الله عليه وسلم يصليهما، ولا يصليهما في المسجد مخافة ان يثقل على امته، وكان يحب ما يخفف عنهم
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் (என்னிடம்), “என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! அஸ்ர் தொழுகைக்குப்பின் இரண்டு சஜ்தாக்கள் (ரக்அத்கள்) தொழுவதை என்னிடம் இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் கைவிட்டதில்லை” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا يحيى، قال حدثنا هشام، قال اخبرني ابي قالت، عايشة ابن اختي ما ترك النبي صلى الله عليه وسلم السجدتين بعد العصر عندي قط
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், இரண்டு தொழுகைகளை இரகசியமாகவும் விட்டதில்லை; பகிரங்கமாகவும் விட்டதில்லை. (அவை:) சுப்ஹு தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள், அஸ்ர் தொழுகைக்குப்பின் இரண்டு ரக்அத்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، قال حدثنا عبد الواحد، قال حدثنا الشيباني، قال حدثنا عبد الرحمن بن الاسود، عن ابيه، عن عايشة، قالت ركعتان لم يكن رسول الله صلى الله عليه وسلم يدعهما سرا ولا علانية ركعتان قبل صلاة الصبح، وركعتان بعد العصر
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழு கைக்குப்பின் எந்த நாளில் என்னிடம் (என் வீட்டிற்கு) வந்தாலும் அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்த தில்லை.28 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن عرعرة، قال حدثنا شعبة، عن ابي اسحاق، قال رايت الاسود ومسروقا شهدا على عايشة قالت ما كان النبي صلى الله عليه وسلم ياتيني في يوم بعد العصر الا صلى ركعتين
அபுல்மலீஹ் (ஆமிர் பின் உசாமா- ரஹ்) அவர்கள் கூறியதாவது: மேகமூட்டம் இருந்த ஒரு நாளில் புரைதா பின் அல்ஹஸீப் (ரலி) அவர்களுடன் (ஒரு போரில்) நாங்கள் இருந்தோம். அப்போது அவர்கள், “அஸ்ர் தொழுகையை விரைவாக (அதன் ஆரம்ப நேரத்திலேயே) நிறைவேற்றுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் ‘யார் அஸ்ர் தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவருடைய நற்செயல்கள் அழிந்துவிட்டன’ என்று கூறியுள்ளார்கள்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا معاذ بن فضالة، قال حدثنا هشام، عن يحيى هو ابن ابي كثير عن ابي قلابة، ان ابا المليح، حدثه قال كنا مع بريدة في يوم ذي غيم فقال بكروا بالصلاة فان النبي صلى الله عليه وسلم قال " من ترك صلاة العصر حبط عمله
அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ர-) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (பயணம்) சென்றுகொண்டிருந் தோம். அப்போது மக்களில் சிலர், “அல்லாஹ்வின் தூதரே! (பயணத்தை சற்று நிறுத்தி) எங்களை இளைப்பாறச் செய்ய லாமே!” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (ஃபஜ்ர்) தொழாமல் உறங்கிவிடுவீர்களோ என நான் அஞ்சுகிறேன்” என்றார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள், “உங்களை நான் விழிக்கச்செய்கிறேன்” என்று கூறினார்கள். எனவே, அனைவரும் (பயனத்தை நிறுத்தி) படுத்துக்கொண்டனர். பிலால் (ரலி) அவர்கள் தமது முதுகைத் தமது வாகனத்தின் மீது சாய்த்துக்கொண்டி ருந்தபோது தம்மையும் மீறி கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். சூரிய வட்டத்தின் ஒரு பகுதி உதித்துவிட்ட நிலையில், நபி (ஸல்) அவர்கள் (முதன் முத-ல்) உறக்கத்தி-ருந்து விழித்தார்கள். உடனே, “பிலால்! நீங்கள் சொன்னது என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். “இதுபோன்று உறக்கம் எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை” என்று பிலால் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ், தான் நாடும்போது உங்கள் உயிர்களைக் கைப்பற்றிக்கொள்கிறான்; தான் நாடும்போது உங்களிடம் திருப்பித் தருகின்றான்” என்று கூறிவிட்டு, “பிலால்! எழுந்து, பாங்கு சொல்- தொழுகைக்கு மக்களை அழைப்பீராக!” என்று கூறினார்கள். பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்து, சூரியன் உயர்ந்து தெளிவாகத் தென்பட்ட போது (ஃபஜ்ர்) தொழு(கையை முன்னின்று நடத்)திடலானார்கள். அத்தியாயம் :
حدثنا عمران بن ميسرة، قال حدثنا محمد بن فضيل، قال حدثنا حصين، عن عبد الله بن ابي قتادة، عن ابيه، قال سرنا مع النبي صلى الله عليه وسلم ليلة فقال بعض القوم لو عرست بنا يا رسول الله. قال " اخاف ان تناموا عن الصلاة ". قال بلال انا اوقظكم. فاضطجعوا واسند بلال ظهره الى راحلته، فغلبته عيناه فنام، فاستيقظ النبي صلى الله عليه وسلم وقد طلع حاجب الشمس فقال " يا بلال اين ما قلت ". قال ما القيت على نومة مثلها قط. قال " ان الله قبض ارواحكم حين شاء، وردها عليكم حين شاء، يا بلال قم فاذن بالناس بالصلاة ". فتوضا فلما ارتفعت الشمس وابياضت قام فصلى
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது சூரியன் மறைந்தபின் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷி குல இறைமறுப் பாளர்களை ஏசிக்கொண்டே வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையத் தொடங்கும்வரை என்னால் அஸ்ர் தொழுகையைத் தொழ முடியாமல் போய் விட்டது” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் (இதுவரை) அஸ்ர் தொழவில்லை” என்று கூறினார்கள். பின்னர் ‘புத்ஹான்’ எனும் பள்ளத் தாக்கை நோக்கி நாங்கள் சென்றோம். அங்கு தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். நாங்களும் தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்தோம். சூரியன் மறைந்தபிறகு அஸ்ர் தொழுதார்கள். அதன் பின்னர் மஃக்ரிப் தொழுதார்கள். (அவர்களுக்குப்பின் நின்று நாங்களும் தொழுதோம்). அத்தியாயம் :
حدثنا معاذ بن فضالة، قال حدثنا هشام، عن يحيى، عن ابي سلمة، عن جابر بن عبد الله، ان عمر بن الخطاب، جاء يوم الخندق بعد ما غربت الشمس، فجعل يسب كفار قريش قال يا رسول الله ما كدت اصلي العصر حتى كادت الشمس تغرب. قال النبي صلى الله عليه وسلم " والله ما صليتها ". فقمنا الى بطحان، فتوضا للصلاة، وتوضانا لها فصلى العصر بعد ما غربت الشمس، ثم صلى بعدها المغرب
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாரேனும் ஒரு தொழுகையை(த் தொழ) மறந்துவிட்டால் அதன் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் ஏதுமில்லை. (அல்லாஹ் கூறுகின்றான்:) என்னை நினைவுகூரும் பொருட்டு தொழு கையை நிலைநிறுத்துவீராக. (20:14)30 இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள ‘வஅகிமிஸ் ஸலாத்த -திக்ரீ’ எனும் வாக்கியத்தை) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘வ அகிமிஸ் ஸலாத்த -த்திக்ரா’ என்று ஓதக் கேட்டேன். (பொருள் ஒன்றே.) இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو نعيم، وموسى بن اسماعيل، قالا حدثنا همام، عن قتادة، عن انس، عن النبي صلى الله عليه وسلم قال " من نسي صلاة فليصل اذا ذكرها، لا كفارة لها الا ذلك ". {واقم الصلاة لذكري} قال موسى قال همام سمعته يقول بعد {واقم الصلاة لذكري}.وقال حبان حدثنا همام، حدثنا قتادة، حدثنا انس، عن النبي صلى الله عليه وسلم نحوه
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது உமர் (ரலி) அவர்கள் (தங்களுடன் போரிட்ட குறைஷி) இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே (வந்து), “சூரியன் மறையத் தொடங்கும்வரை என்னால் அஸ்ர் தொழுகையைத் தொழ முடியாமல் போய் விட்டது” என்று கூறினார்கள். எனவே, நாங்கள் ‘புத்ஹான்’ எனும் பள்ளத்தாக்கில் இறங்கினோம். சூரியன் மறைந்த பின்னர் (எங்களுக்கு இமாமாக நின்று) நபி (ஸல்) அவர்கள் (முத-ல் அஸ்ர் தொழுகை யைத்) தொழுதார்கள். பின்னர் மஃக்ரிப் தொழுகையைத் தொழு(வித்)தார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا يحيى، عن هشام، قال حدثنا يحيى هو ابن ابي كثير عن ابي سلمة، عن جابر، قال جعل عمر يوم الخندق يسب كفارهم وقال ما كدت اصلي العصر حتى غربت. قال فنزلنا بطحان، فصلى بعد ما غربت الشمس، ثم صلى المغرب
அபுல் மின்ஹால் (சய்யார் பின் சலாமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் என் தந்தையும் அபூபர்ஸா அல்அஸ்லமீ (நள்லா பின் உபைத்-ர-) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களிடம் என் தந்தை, “கடமையான தொழுகைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு (எந்நேரத்தில்) தொழுவார்கள் என்று எங்களுக்கு அறிவியுங்கள்” எனக் கேட்டார்கள். அதற்கு அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ‘முதல் தொழுகை’ என்று அழைக்கும் நண்பகல் (லுஹ்ர்) தொழுகையைச் சூரியன் (நடுவானி-ருந்து மேற்கு நோக்கி) சாயும்போது நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள். (பின்னர்) அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு) மதீனா வின் கடைக் கோடியிலுள்ள தமது இல்லத்திற்குத் திரும்பிச் சென்றுவிடுவார். அப்போதும் சூரியன் (வெளிச்சமோ வெப்பமோ குறையாமல்) தெளிவாக இருந்துகொண்டிருக்கும். -மஃக்ரிப் தொழுகை(யின் நேரம்) பற்றி அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள்; ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன்.- இஷா தொழுகையைப் பிற்படுத்து வதையே நபி (ஸல்) அவர்கள் விரும்பு வார்கள். இஷா தொழுகைக்குமுன் உறங்குவதையும் இஷா தொழுகைக்குப் பின் பேசிக்கொண்டிருப்பதையும் நபி (ஸல்) அவர்கள் வெறுப்பார்கள். எங்களில் ஒருவர் தம் அருகில் அமர்ந்திருப்பவரை அறிந்துகொள்ளும் (அளவுக்கு வெளிச்சம் வந்துவிடும்) நேரத்தில் வைகறைத் தொழுகை (சுப்ஹு தொழுகை)யை முடித்துத் திரும்புவார்கள். (வைகறைத் தொழுகையில்) அறுபது (வசனங்கள்) முதல் நூறு (வசனங்கள்)வரை ஓதுவார்கள்.31 அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا يحيى، قال حدثنا عوف، قال حدثنا ابو المنهال، قال انطلقت مع ابي الى ابي برزة الاسلمي فقال له ابي حدثنا كيف، كان رسول الله صلى الله عليه وسلم يصلي المكتوبة قال كان يصلي الهجير وهى التي تدعونها الاولى حين تدحض الشمس، ويصلي العصر، ثم يرجع احدنا الى اهله في اقصى المدينة والشمس حية، ونسيت ما قال في المغرب. قال وكان يستحب ان يوخر العشاء. قال وكان يكره النوم قبلها والحديث بعدها، وكان ينفتل من صلاة الغداة حين يعرف احدنا جليسه، ويقرا من الستين الى الماية
குர்ரா பின் கா-த் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒரு நாள் இரவு) ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) (அவர்களிடம் மார்க்கக் கல்வி பயில) அவர்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தோம். அவர்கள் (வழக்கத்திற்கு மாறாக அன்று) எங்களிடம் தாமதமாக வந்தார்கள். எந்த அளவுக்கென்றால், (வழக்கமாக அவர்கள் எங்களுடன் அமர்ந்துவிட்டு) எழுந்து செல்லும் நேரமும் நெருங்கியது. அப்போது அவர்கள் வந்து, “எம்முடைய இந்த அண்டை வீட்டார் எம்மை அழைத்தனர் (அதனால் தாமதம் ஏற்பட்டுவிட்டது)” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) சொன்னார்கள்: அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் ஒரு (நாள்) இரவில் (இஷா தொழுகைக்காக) நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தோம். நள்ளிரவு நேரம் ஆகும்போது நபி (ஸல்) அவர்கள் வந்து எங்களுக்கு இஷா தொழுகை நடத்தினார்கள். பின்னர் எங்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது அவர்கள், “அறிந்து கொள்ளுங்கள்: (உங்களைத் தவிர மற்ற) மக்கள் அனைவரும் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். நீங்கள் தொழுகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும்வரை அத்தொழுகையில் நீங்கள் உள்ளீர்கள் (என்றே கருதப்படும்)” என்று கூறினார்கள். தொடர்ந்து ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஒரு நன்மையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும்வரை மக்கள் அந்த நன்மையிலேயே இருக்கிறார்கள். அறிவிப்பாளர் குர்ரா பின் கா-த் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இ(ந்த இறுதி கூற்றான)து, நபி (ஸல்) அவர்களிடமிருந்து அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸில் உள்ளதாகும். அத்தியாயம் :
حدثنا عبد الله بن الصباح، قال حدثنا ابو علي الحنفي، حدثنا قرة بن خالد، قال انتظرنا الحسن وراث علينا حتى قربنا من وقت قيامه، فجاء فقال دعانا جيراننا هولاء. ثم قال قال انس نظرنا النبي صلى الله عليه وسلم ذات ليلة حتى كان شطر الليل يبلغه، فجاء فصلى لنا، ثم خطبنا فقال " الا ان الناس قد صلوا ثم رقدوا، وانكم لم تزالوا في صلاة ما انتظرتم الصلاة ". قال الحسن وان القوم لا يزالون بخير ما انتظروا الخير. قال قرة هو من حديث انس عن النبي صلى الله عليه وسلم