ஹதீஸ்கள்
#596
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது சூரியன் மறைந்தபின் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷி குல இறைமறுப் பாளர்களை ஏசிக்கொண்டே வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையத் தொடங்கும்வரை என்னால் அஸ்ர் தொழுகையைத் தொழ முடியாமல் போய் விட்டது” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் (இதுவரை) அஸ்ர் தொழவில்லை” என்று கூறினார்கள். பின்னர் ‘புத்ஹான்’ எனும் பள்ளத் தாக்கை நோக்கி நாங்கள் சென்றோம். அங்கு தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். நாங்களும் தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்தோம். சூரியன் மறைந்தபிறகு அஸ்ர் தொழுதார்கள். அதன் பின்னர் மஃக்ரிப் தொழுதார்கள். (அவர்களுக்குப்பின் நின்று நாங்களும் தொழுதோம்). அத்தியாயம் :
حدثنا معاذ بن فضالة، قال حدثنا هشام، عن يحيى، عن ابي سلمة، عن جابر بن عبد الله، ان عمر بن الخطاب، جاء يوم الخندق بعد ما غربت الشمس، فجعل يسب كفار قريش قال يا رسول الله ما كدت اصلي العصر حتى كادت الشمس تغرب. قال النبي صلى الله عليه وسلم " والله ما صليتها ". فقمنا الى بطحان، فتوضا للصلاة، وتوضانا لها فصلى العصر بعد ما غربت الشمس، ثم صلى بعدها المغرب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #596
- Book Index
- 71
Grades
- -
