ஹதீஸ்கள்
#597
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாரேனும் ஒரு தொழுகையை(த் தொழ) மறந்துவிட்டால் அதன் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் ஏதுமில்லை. (அல்லாஹ் கூறுகின்றான்:) என்னை நினைவுகூரும் பொருட்டு தொழு கையை நிலைநிறுத்துவீராக. (20:14)30 இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள ‘வஅகிமிஸ் ஸலாத்த -திக்ரீ’ எனும் வாக்கியத்தை) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘வ அகிமிஸ் ஸலாத்த -த்திக்ரா’ என்று ஓதக் கேட்டேன். (பொருள் ஒன்றே.) இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #597
- Book Index
- 72
Grades
- -